அருள்மிகு சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோயில், Periyakarupoor

Century
தெரியவில்லை
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியின் கருவறையின் உள்ளே ஒரு விநாயகர் சிலையும் வெளியில் காவல் தெய்வமும் மேலும் பனையடி கருப்பு உட்பட்ட காவல் தெய்வங்களும் அம்மனை சுற்றி கிழக்கு புறமாக அமைந்துள்ளது. சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா வருடத்திற்கு ஒருமுறை பெரிய கருப்பு உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு அம்மனை ஊர்வலமாக வந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். சாமுண்டீஸ்வரி அம்மனை மனதார நினைத்த காரியம் நடக்க கூறும் கருதுகின்றனர். சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் உக்கிரமான தெய்வமாக கருதுகின்றனர் எனவே இங்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடனும் வந்து செல்கின்றனர் ஒரு வருடத்திற்கு ஒருமுறை எல்லை உடைக்கும் நிகழ்வு சித்திரை மாதத்தில் நிகழ்வது வழக்கமாக கொண்டுள்ளது. அந்த ஏழு நாட்களிலும் மக்கள் தன்னுடைய சுற்றத்தாருடன் வந்து வணங்கி பிரார்த்தனை செய்து செல்கின்றனர்
இருள் அடியான் சன்னதி மேற்கு முகமாக உள்ளது
மதுரை வீரன் பொம்மி வெள்ளையம்மாள் சன்னதி மேற்கு முகமாக உள்ளது
அன்னகாமாட்சி அம்மன் சன்னதி மேற்கு முகமாக உள்ளது.
பெரியன்ன சுவாமி சன்னதி மேற்கு முகமாக உள்ளது
பேச்சி அம்மன் சன்னதி மேற்கு முகமாக உள்ளது
மாயவர் நாகர் சன்னதி மேற்கு முகமாக உள்ளது.
காணியாளன் சன்னதி மேற்கு முகமாக உள்ளது.
விநாயகர் சன்னதி கிழக்கு முகமாக உள்ளது.




