அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமாரவயலூர், குமாரவயலூர்

Century
9th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
அருணகிரிநாதர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும் நடராஜர் இத்திருக்கோயிலில் காலை தூக்காத கோலத்தில் காட்சியளிக்கிறார். இது நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழ் முயலகனும் இல்லை. இவ்வாறு இத்திருக்கோயிலில் நடராஜர் சதுரதாண்டவ நடராஜராக காட்சியளிக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் திருவிழா விஷேசமாக நடைபெறுகிறது. பரிகார தலம்- திருமணத் தடங்கலுக்கு இத்திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்வதாய் வேண்டிக் கொண்டால் திருமணம் உடனே நடைபெறும். திருமணம் நடந்த உடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திருக்கோயிலில் தத்து கொடுத்து தத்து திருப்பும் பரிகாரமும் நடைமுறையில் உள்ளது. தம்மை வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களையும், ஞானத்தையும் வழங்கக்கூடிய ஞானஸ்கந்தராக முருகப்பெருமான் உள்ளதால் அனைத்து விதமான பிரார்த்தனைகளும் நடக்கக் கூடிய ஸ்தலமாகவும் உள்ளது.
முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகுநிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது. கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.
முத்துகுமாரசுவாமி சிற்பம்
நரசிம்மர் சிற்பம்
அன்னப்பட்சி சிற்பம்
யாளி சிற்பம்
அனுமார் சிற்பம்
காமதேனு சிற்பம்
கருடாழ்வார் சிற்பம்
ஒரே தலையில் நான்கு மீன்கள் கொண்ட சதுர்மச்ச சிற்பம்
பொது நன்கொடை
திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகள் மற்றும் பொதுமக்களுக்கு தினந்தோறும் பகல் 12-00 மணி அளவில் 100 நபர்களுக்கு டேபிள், சேரில் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழா நாட்களிலும், முக்கிய தினங்களிலும் பாயாசத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 80 ஜி /05/15-16/-1061 28.11.2016 அன்னதானம் ஒரு நாள் உபய வரவு - ரூ. 3500/- அன்னதானம் ஒரு நாள் கட்டளை (நிரந்தர முதலீடு ) - ரூ. 60,000/- மற்றும் அன்னதான நன்கொடை சீட்டுக்கள் ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 உள்ளது.
தெற்கு கோபுர வாசல்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி




