அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், புலிவலம், திருவரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம்

Century
12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
இத்திருத்தலத்தில் பிரம்மா வரதராஜபெருமாள் அகஸ்தீஸ்வரர் சரஸ்வதி கஜலக்ஷ்மி ஜுரஹரேஸ்வரர் 63 நாயன்மார்கள் தில்லைவாழ் அந்தணர் சுமித்ர சண்டிகேஸ்வரர் துர்க்கை அம்மன் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் விநாயகர் தட்சிணாமூர்த்தி அகஸ்தியர் அனுக்கிரக விநாயகர் சிவசூரியன் சிவச்சந்திரன் காலபைரவர் உட்பட அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் காட்சி அளிக்கக்கூடிய இடமாக அமைந்துள்ளது
கஜலக்ஷ்மி அம்மன் கஜேந்திர யானைகளுடன் கிழக்கு முகமாக நின்ற நிலையில்காட்சி தருகிறார்
பிரார்த்தனை தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை சம்பா சாதம் மிளகு ரசம் நைவேத்தியமாக வைத்து வழிபட்டுச் செல்கின்றனர்
வரதராஜ பெருமாள் சங்கு சக்கரம் உட்பட ஆயுதங்களை ஏந்தி ஆறு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்
சரஸ்வதிதேவி வேத புத்தகம் வீணையுடன் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்
பிரம்மதேவர் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்
63 நாயன்மார்கள் மற்றும் தில்லைவாழ் அந்தணர் சிலைகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது



