அருள்மிகு வழிவிடு வேல்முருகன் திருக்கோயில், ரயில்வே ஜங்சன்

Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
, , . , . திருச்சி வழிவிடு முருகன் வழித்துணைக்கும் வருவான் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள் என்று அறிவிப்பார்கள். இங்கே, ரயில் நிலையம் அருகில் இருந்தபடி வாழ்த்தி ஆசி புரிவதுடன், பயணங்களில் பக்தர்களுக்கு பாதுகாவலனாகவும் இருந்து, வெற்றியைத் தந்து அருள்கிறார் திருச்சி- ரயில்வே ஜங்ஷன் அருகில் கோயில் கொண்டிருக்கும் வழிவிடு முருகன் ஜங்ஷன் ரவுண்டானாவுக்கு அருகில் அமைந்துள்ளது வழிவிடு வேல் முருகன் கோயில். ராமேஸ்வரம் கடலில் இருந்து கரை ஒதுங்கிய அழகிய முருகப்பெருமானின் விக்கிரகத்தை, இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினார்கள். திருச்சிக்கு வந்து தமிழகத்தின் எந்த ஊருக்குச் செல்பவர்களாக இருக்கட்டும். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக பயணிக்கும் பக்தர்களாகட்டும். அனைவரின் பயணத்திலும் பக்கத் துணையாக இருந்து, அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்கிறார் இந்த முருகன் என சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் வெளியூரில் இருந்து கார் மற்றும் வேன்களில் வரும் ஐயப்ப பக்தர்கள், முருகப் பெருமானை வழிபட்டு இங்கேயே தங்கி, கிளம்பிச் செல்கின்றனர். அப்படிச் சென்றால், முருகனின் அருளும் ஐயப்ப ஸ்வாமியின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை வளர்பிறை சஷ்டியில் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபடலாம் தொழில் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலும் புதிதாக பைக் மற்றும் கார் என எந்த வாகனம் வாங்கினாலும் அதன் சாவியை முருகனின் திருப்பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் திருச்சிக்காரர்கள் பலர் வாகனப் பயணம் மட்டுமின்றி வாழ்க்கைப் பயணமும் சிறக்க. வழிவிடு வேல் முருகன் வழிகாட்டுவான் . , , . . . , . , .
வள்ளி, தெய்வானை
வழிவிடுவேல் முருகன்
-
திருக்கோயில் நுழைவு வாயில்





