அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரஸ்வாமி திருக்கோயில், ஆலங்குடி

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
மூன்று நிலை விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பூளை செடி
நவகிரகஸ்தலங்களில் அருள்மிகு குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாகும். மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும். முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும். திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் தமது பாடல்களில் இத்தலத்தை எழிலார் இரும்பூளை என சிறப்பித்து பாடியுள்ளார்.
அருள்மிகு சோமாஸ்கந்தர் சன்னதி
அருள்மிகு சண்டிகேஸ்வரர் சன்னதி
அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி
அருள்மிகு ஆக்ஞா கணபதி சன்னதி
அருள்மிகு ஏலவார்குழலி அம்மன் சன்னதி
அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சன்னதி
அருள்மிகு குருபகவான் மூலவர் சன்னதி
அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர் சன்னதி
அருள்மிகு நவக்கிரக சன்னதி
அருள்மிகு குருபகவான் உற்சவர் சன்னதி
அருள்மிகு சுக்கிரவார அம்பாள் சன்னதி
அருள்மிகு சனீஸ்வரபகவான் சன்னதி
அருள்மிகு கஜலெட்சுமி சன்னதி
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரஸ்வாமி
திருக்கோயிலைச் சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிர்த புஷ்கரணி எனும் தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.
தினசரி 100 பக்தர்களுக்கும், வியாழக்கிழமைகளில் 200 பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத் திட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எந்த நாளிலும் தினசரி உணவுக்காக ரூ.3,500/- செலுத்தி பங்கேற்கலாம். வியாழக்கிழமைகளில் உணவளிக்க ரூ.7,000/-. அதுமட்டுமின்றி, பொது மக்கள் பிறந்த நாள், திருமண நாள் அல்லது எந்த ஒரு நல்ல நாள் போன்ற எந்த நாளிலும் பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.70,000/- தொகையை டெபாசிட் செய்யலாம். அந்தத் தொகை நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டியானது பக்தர்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்படும். கோயில் நிர்வாகம் அவர்கள் தேர்ந்தெடுத்த நாளில் சிறப்பு அர்ச்சனை செய்து, விபூதி மற்றும் குங்குமப் பிரசாதம் பக்தர்கள் தெரிவிக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அன்னதான திட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவான் அருள் பெற அழைக்கப்படுகிறார்கள்.
ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக குளியலறை வசதி திருக்கோயில் வெளிப்புறத்தில் கிழக்கு இராஜகோபுரத்தின் அருகில் உள்ளது.
ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிவறை வசதி திருக்கோயில் வெளிப்புறத்தில் கிழக்கு இராஜகோபுரத்தின் அருகில் உள்ளது.
பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திருக்கோயில் அலுவலகத்திற்கு எதிர்புறம் வசந்த மண்டபத்தில் அமைந்துள்ளது
திருக்கோயில் வெளியே கிழக்கு இராஜகோபுரத்தின் முன்புறம் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
அம்மன் சன்னதி முன்புறம் மற்றும் பிரசாதங்கள் விற்பனை மையத்தின் முன்புறம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சக்கர நாற்காலி வசதி உள்ளது





