அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்

Century
7th நூற்றாண்டு
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இந்திரன் அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான். ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார். இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான். முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான். அவரின் ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான். சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரம்மன், இந்திரன், அரம்பை, இந்திரசேனன், ஐராவதம் போன்றவர்கள் சிவபெருமானை வழிபட்டு சாபம் நீக்கப் பெற்ற தலம் இது. இக்கோட்டூரில் உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலநாதர் திருக்கோயிலும் புகழ்பெற்றதாகும் இங்கு சிவபெருமாள் 64 நடனங்களுள் ஒன்றை ஆடியுள்ளார். இக்கோயில் கருவூர் தேவரால் திருவிசைப்பா பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
சிவகங்கை
பழமையான சுவரோவியங்கள் இத்திருக்கோயிலில் இல்லை
-
இத்திருக்கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவருகிறது. மேற்படி சேவையில் பங்குபெற நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.1000/- வரை செலவாகிறது. இத்தொகையினை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கி அன்னதானம் செய்து இறையருள் பெற வேண்டுகிறோம்.
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை எளிமையாக்க திருக்கோயில் நிர்வாகத்தால் கியூ ஆர் கோட் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை விரைவில் செலுத்த முடியும்
ஆா். ஓ .குடிநீா் வசதி பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.



