அருள்மிகு கோனேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்

Century
13th நூற்றாண்டு
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஆனந்த விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வாழை
இத்திருக்கோவில் கோச்செங்கணான் சோழன் அரசனால் கட்டடப்பட்டது . இத்திருக்கோவிலில் இறைவனை (மூலவர் சுவாமி ) தரிசனம் செய்ய 18 படிகள் ஏறித்தான் தரிசனம் செய்ய வேண்டும் . இந்த 18 படிகளும் ஏறி இறைவனை வழிபடுவோருக்கு கயிலை மலை ஏறும் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திருக்கோவில் யானை ஏறாத மட கோவில் என்று அழைக்கப்படுகிறது .
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினார்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்பது என்பது தாயுமான சுவாமிகளின் திருவாக்கு ஆகும். இவ்வாக்கிற்கு இணங்க நம் தமிழகத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்த இடங்கள் பல உண்டு. அவற்றுள் திருக்குடவாயில் என்பதும் ஒன்றாகும். இதன் பெருமையினை முதலில் சூத முனிவர் நைமிசாரண்யத்தில் வாழ்ந்த முனிவருக்கு வகுத்துக் கூறினார். இத்தலத்தின் பெருமை முதலில் அமிர்தக்குடத்தின் அடிப்படையில் தோன்றியது. ஆதலால் இது அமிர்தத்தலம் என்றும் சிறப்பினைப் பெருகிறது. மகா ஸ்காந்த புராணத்தில் இத்தலத்தின் பெருமை வியாசமுனிவரால் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புடைய அமிர்த புஷ்கரணி குளத்தில் மாசி மாத பௌர்ணமி நாளில் நீராடுவோர் தம் பாங்கள் நீங்கி வீடுபெறு அடைவார் என்று கூறப்படுகிறது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் 2013ஆம் ஆண்டு அருள்மிகு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு வெளியில் பொறுத்தப்பட்டுள்ளது.





