அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் மற்றும் லெஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில், 34 கூத்தனூர்

Century
8th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
ஐந்து நிலை விமானம்,
Sacred Tree (Sthalavriksha)
இல்லை
கூத்தனூர் ஸ்ரீமஹா சரஸ்வதி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் பொழுது எல்லா தினங்களிலும் அம்பாளுக்குச் சிறப்பாக அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். நவராத்திரி விழாவின்பொழுது எல்லா திசைகளிலும் ஞானக்கடவுள் மஹாகணபதி வீதி உலா சிறப்பாக நடைபெறும். சரஸ்வதி பூஜை விஜயதசமி தினங்களில் மஹா சரஸ்வதி அம்பாள் அன்னபட்சி வாகனத்தில் அமர்ந்து அழகு கொஞ்ச வீதிஉலா வரும் காட்சி மிகச் சிறப்பாக நடைபெறும் சரஸ்வதி பூஜை அன்று ஸ்ரீமஹா சரஸ்வதி மூலவிக்கிரகத்தின் ஸ்ரீ பாதங்களை மிக எழிலுடன் நீட்டி அழகாக அலங்கரித்து அனைத்து பக்தர்களும் அம்பாளின் பாதங்களுக்கு நேரிடையாகத் தாங்களே புஷ்ப பூஜை செய்வார்கள். இதை வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பாக்கியமாக பக்தர்கள் எண்ணுகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மஹா சரஸ்வதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் குறிப்பாக வளரும் குழந்தைகள் கல்வி அறிவில் சிறப்புடன் முன்னிலை வகித்திட அம்பாள் அருளாசி பொழிகிறாள்.
தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்குக் கட்டணமாக ரூ 1750/- செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம்.
திருக்கோயிலுக்குப் இடதுபுறம் தெற்கு திசையில் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளது.
திருக்கோயில் வரும் பக்தர்களுக்கு பயன்படும் வகையில் மூன் பகுதியில் உள்ளது
திருக்கோயில் பக்த்தர்களின் பயன்பாட்டிற்கு மட்டும்
பக்தர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திருக்கோயில் முன்புறம் அமைந்துள்ளது.




