அருள்மிகு முல்லைவனேஸ்வரர் திருக்கோயில், முல்லைவாசல்

Century
13th நூற்றாண்டு
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
முல்லைக்கொடி
முன்னொரு காலத்தில் பூமண்டலத்தில் உள்ளோர் ஹிரண்யாக்ஷனால் பலவகை கஷ்டங்கள் அடைந்து புருஷோத்தமனை பிரார்த்தனை செய்ய ஸ்ரீ லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணு பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி மகா வரப்ரசாதங்களை பெற்ற ஹிரண்யாக்ஷனை செம்மரம் செய்ய கொடுத்த வாரங்களுக்கு பங்கம் ஏற்படாவண்ணம் மானிடராகவும், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கொண்ட நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்து இரவும் பகலும் இல்லாத வேலையாக அந்தி வேளையில் பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாமல் தன் மடியிலேயே படுக்க வைத்து உதிரம் பூமியில் விழாத வண்ணம் வயிற்றை கிழித்து சிம்ம முகத்தின் வாயினால் உதிரத்தை உறிஞ்சி உட்கொண்டதினால் ஏற்பட்ட ரத்த வெறியினால் உலகத்தையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு கோபம் கொண்டு எழுந்த பொது சிவபெருமான் சரரூபத்தில் வந்து ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியாக விளங்கும் திருமாலின் கோபத்தை சாந்தப்படுத்தி அக்கோர ரூபத்தை மாற்றியருளி ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய அருளி, அதன் நிமித்தம் சர்வேஸ்வரன் தன் கையில் உள்ள மானை கொண்டு இத்தலத்தில் அதன் காலினால் தடாகத்தை நிர்மாணிக்க செய்து அதன் காரணமாக அதற்க்கு மிருகபாத தீர்த்தம் என வழங்கலாயிற்று.ஸ்ரீ மகா விஷ்ணு, சிவபெருமான் கிருபை செய்தருளியபடி கிருத்திகா மாதம் 30 தினங்களும் உச்ச காலத்தில் மிருகபாத தடாகத்தில் நீராடி ஸ்ரீ கற்பகவல்லி சமேத ஸ்ரீ முல்லைவனேஸ்வர ஸ்வாமியாக காட்சியளிக்கும் ஈஸ்வரனை தென் திருமுல்லைவாசல் என வழங்கப்படும் இந்த ஷேத்திரத்தில் பூஜை செய்து பிரும்மஹத்தி தோஷத்தை நிவாரணம் செய்து கொண்டதாக ஐதீகம் இதற்க்கு ஒப்ப ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதியின் எதிர்புறம் கோஷ்டத்தின் மேல் ஹிரண்யாக்ஷன் வதம் கற்சிலையில் காணப்படுகிறது
விநாயகர்
முருகன் வள்ளி தெய்வானை
அம்பாள் கற்பகவல்லி
மூலவர் முல்லைவனேஸ்வரர்
திருக்கோயிலுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை, கட்டிடம் போன்றவைகளுக்கு இச்சேவை மூலம் ஆன்லைன் ரசீது போடப்பட்டுவருகிறது




