அருள்மிகு பாரிஜாதவனேஸ்வர சுவாமி திருக்கோயில், திருக்களர்

Century
7th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பாரிஜாத விருட்சம் (பவள மல்லிகை)
அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரசுவாமி திருக்கோயில் தேவார பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் 105வது தலமாகத் திருக்களர் கோயில் அமைந்துள்ளது. களரி என்பது கூத்து என்னும் பொருளை குறிக்கும் தூர்வாச முனிவருக்கு நடராஜப் பெருமான் பிம தாண்டவ தெரிசனம் பொடுத்த தலமாதலால் திருக்களர் என்னும் பெயர் அமைந்துள்ளது. தாண்டவ தலங்கள் 8 அதில் முதல் ஸ்தலம் சிதம்பரம் இரண்டாவது ஸ்தலமாக திருக்களர் அமைந்திருக்கிறது. இத்தலம் திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்காவில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மீ தூரத்திலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. திருக்களர் சென்றுவந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மோட்சம் கிட்டும் என புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாதவர்கள் ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு செய்தால் திருமணம் நடைபெறுகிறது. கல்வியில் மேன்மைபெற குருமூர்த்தமாக உள்ள முருக பெருமானை வழிபடலாம்.
துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்திலுள்ள தீர்த்தங்கள் ஆகும்.
-
பழமையான சிற்பங்கள் இல்லை
திருக்கோயில் முகப்பு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது
திருக்கோயில் முகப்பு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது
திருக்கோயிலுக்கு எதிரே நான்கு புறங்களிலும் நான்கு படித்துறைகள் கொண்ட அழகிய பெரிய திருக்கும் அமைந்துள்ளது.




