Home/Temples/TN/Thiruvarur/Arulmigu Pasupatheeswarar Temple, Avoor - 612701
Heritage Templehrce

Arulmigu Pasupatheeswarar Temple, Avoor - 612701

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர்

🕉️ பசுபதிஸ்வரா் Thiruvarur, TN
Arulmigu Pasupatheeswarar Temple, Avoor - 612701 — image 1
1 / 7
Also known as:பஞ்ச பைரவ திருக்கோயில்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

திராவிடம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வம்

Pooja Timings

கோ பூஜை (-)04:30 AM to 06:00 AM IST

Temple Speciality

பரிகாரம்

கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள். இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.

Sub Shrines

அம்மன்

இங்குள்ள இரு அம்பிகைகளில், நெற்றிகண் உடையால் மங்களாம்பிகை இத்தலத்தில் உள்ள குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் `பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ` என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.

நெற்றி கண் உடைய மங்களாபிகை

மங்களாம்பிகை இத்தலத்தில் உள்ள குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அம்பாள்-இதுவே, பழமையானது. தேவாரத்தில் பங்கயமங்கை விரும்பும் ஆவூர் என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு நெற்றி கண் உடைய மங்களாபிகைமங்களாம்பிகை சந்நிதிக்கே.

சுற்று பிரகாரம்

, .இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

பஞ்ச பைரவர் சன்னதி

இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணையால் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வனையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும. தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர். இந்த பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர்.

Temple Tank

பிரம்ம தீா்த்தம்

பிரம்ம தீா்த்தம் -இதற்கு குஷ்டரோ நிவாரண தீா்த்தம் என்றூம் பெயா்

Facilities

குளியல் அறை வசதி

கழிவறை மற்றும் குளியல் அறை வசதி உள்ளது

More Temples Nearby

View all →