அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

Century
18th - 19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஏக தள விமானம்
Sacred Tree (Sthalavriksha)
-
ஸ்ரீ வைராக்கிய ஆஞ்சநேயருக்கு மட்டையுடன் கூடிய தேங்காய் சிவப்பு துணியில் வெற்றிலை பாக்குடன் வைத்து கட்டி பிரார்த்தனை எழுதி ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து கட்டி வழிபாடு செய்வதால் 48 நட்களில் நிறைவேறும் என்பது ஐதீகம். ஹயக்கீரிவர் கல்வி கடவுளாக சிறப்புற்று விளங்குகிறார், வியாழக்கிழமையில் ஏலக்காய் மாலை, கற்கண்டு,திராட்சை கலந்து நெய்வேத்தியம் செய்து கல்வி பயிலும் மாணவ/மாணவியர்கள் வழிபாடு செய்வதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
-
தினந்தோறும் அன்னதானம் 25 நபர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.அன்னதான நேரம் மதியம் 12.00 மணிக்கு நடைபெறும். பக்கதர்கள் திருமண நாள்,பிறந்த நாள்,நினைவு நாள் போன்ற தினங்களில் அன்னதானம் செய்வதற்கு இணையதள வழியாக பணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் அன்னதானத்திற்கு காணிக்கை செலுத்துவதற்கு அன்னதான உண்டியல் தனியாக நிறுவப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்றுதற்காக அர்ச்சனை சீட்டு விற்பனை தொகை ரூ.10 எண்ணெய் தீபச்சீட்டு விற்பனை தொகை ரூ.5 மட்டைதேங்காய் சீட்டு விற்பனை தொகை ரூ.25 இணையதள மூலம் வழங்கப்படும் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு டிக்கட் கவுண்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் பயண்பாட்டிற்காக குளியறையில் தண்ணீர் வசதி மற்றும் பாதுகாப்பான முறையில் குளியல் அறை பயன்படுத்தப்பட்டு வருகிறது
திருக்கோயிலுக்கு பின் புறத்தில் கழிவறைகள் நல்ல வசதியுடன் நல்ல முறையில் அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது
திருக்கோயிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலின் வெளிப்புறத்தில் இலவச பாதுகாப்பு பாதணிகள் அமைவிடம் வைக்கப்பட்டுள்ளது
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி பக்தர்களுக்கு தொடர்ந்து நல்ல முறையில் வழங்கப்பட்டு வருகிறது





