அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், ஆழ்வார்திருநகரி

Century
8th நூற்றாண்டு
Praised By
வைணவ ஆழ்வார்கள்
Poet Saint
நம்மாழ்வார்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
Sacred Tree (Sthalavriksha)
புளிய மரம்
.
புளியமரம்
.
தல விருட்சம் - உறங்காப்புளி (புளியமரம்) இத்திருத்தலத்தின் தலவிருட்சம் மிகவும் பிரசித்தி பெற்ற உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரம் ஆகும் . இவ்விருட்சத்திற்கு திருப்புளி ஆழ்வார், உறங்காப்புளி என்னும் இரு திருநாமங்களோடு அழைக்கப்பட்டு வருகிறது. உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இதன் இலைகள் இரவில் உறங்காது. எனவே தான் உறங்காப்புளி என பெயர் பெற்று அழைக்கப்படுகிறது.
ஆதிநாதர் ஆழ்வார்
குறுகூர் நாச்சியார் ஸன்னதி
ஞானபிரான்
ராமர் சன்னதி
ஸன்னதி கருடன்
கிருஷ்ணன் ஸன்னதி
ஆஞ்சிநேயர் ஸன்னதி
பட்சிராஜர் ஸன்னதி
நரசிம்மர் ஸன்னதி
12 ஆழ்வார்கள் ஸன்னதி
திருவேங்கடமுடையான் ஸன்னதி
பொன்னின்ற பெருமாள் ஸன்னதி
விஷ்வ சேனர் ஸன்னதி
பரமபதநாதன் ஸன்னதி
தசாவதார ஸன்னதி
சக்கரத்தாழ்வார் ஸன்னதி
ஸன்னதி கருடன் (ஞானபிரான்)
ஆதிநாச்சியார் ஸன்னதி
ஞானபிரான் ஸன்னதி
நம்மாழ்வார் ஸன்னதி
வேணுகோபாலன் ஸன்னதி
மாசி மாதம் 10/3/2023 அன்று பெருமாள் தெப்பம் அதைத்தொடர்ந்து 11/3/2023 அன்று நம்மாழ்வார் ஆச்சாரியார்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.
திவ்ய தேச எம்பெருமான்கள் சுவாமி நம்மாழ்வாருக்கு காட்சி அளித்த விரவங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் சம்பிரதாய ஓவியங்களும் சுவாமி நம்மாழ்வார் சன்னதியின் உள் பிரகார மண்டபத்தில் காட்சி அளிக்கின்றது.
1.அன்னை தமிழில் அர்ச்சனை 2.அர்ச்சனை 3.நீராஞ்சனம் 4.மூலவர் ஆதிநாதர் திருமஞ்சனம் 5.மூலவர் நம்மாழ்வார் திருமஞ்சனம் 6.மூலவர் பட்சிராஷர் திருமஞ்சனம் 7.தாயார் திருமஞ்சனம் 8.படிகளைந்த மாலை பிரசாதங்கள் 9.உறங்காப்புளி
பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையை தொகையாகவோ அல்லது பொருட்களாகவோ நன்கொடையாக வழங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் சார்பாக தினந்தோறும் 50 நபர்களுக்கு மதியம் 12:30 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி தாங்கள் விரும்பும் தினத்தன்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரூபாய் 25000 செலுத்தி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தாங்கள் விரும்பும் தினத்தன்று தங்களது சார்பாக அன்னதானம் 50 நபர்களுக்கு வழங்கப்படும். அன்னதானத்திற்கு நன்கொடை வழங்க விரும்ப பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருக்கோயில் வலைத்தளம் லிங்க் மூலமாகவும் அன்னதான நன்கொடை செலுத்தி அலுவலகத்தில் தெரிவித்துக் கொள்ளலாம். தங்கள் செலுத்தும் அன்னதான நன்கொடை தொகைக்கு இந்திய அரசின் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
-
திருக்கோயில் நடை திறந்திருக்கும் போது அலுவலகத்திற்கு வருகை புரிந்து சக்கர நாற்காலி வசதியினை பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு கைங்கரியம் செய்வதற்கு திருக்கோயில் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.
திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிகளுக்காக குளியல் அறை மற்றும் கழிப்பிட அறைகள் வசதிகள் திருக்கோயில் சார்பாக செய்யப்பட்டுள்ளது
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனுக்காக சுத்திகரிப்பு குடிநீர் வசதி திருக்கோயில் உள் மண்டபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
திருக்கோயில் நூலகத்தில் ஆன்மீக நூல்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், தினசரி செய்தித்தாள்கள் மற்றும் திருக்கோயில் சார்ந்த நூல்கள் அனைத்தும் அமர்ந்து படிப்பதற்கு வசதிகள் உள்ளது.





