அருள்மிகு காய்சினிவேந்த பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி, திருப்புளியங்குடி

Century
13th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
வைகாணசம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சந்திரவிமானம்
Sacred Tree (Sthalavriksha)
கரும்பனை மரம்.
பொதுவாக பெருமாளின் நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கும் பிரம்மா, இங்கு பெருமாளின் தொப்புளிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கிறார். இங்குள்ள நிலமகள் நாச்சியார் மற்றும் பூமகள் நாச்சியார் இருவரும் சற்றே பெரிய திருமேனி. இவர்கள் பெருமாளின் பாதங்களுக்கு அருகே வீற்றிருக்கிறார்கள் என்பதால் இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை. இங்கு பெருமாள் சுமார் 12,அடி நீளத்தில் சயனக்கோலம் சாதித்தருள்வதால் இவரின் திருமுகம் முதல் மூட்டு வரை உள்ள பகுதியை மட்டுமே கருவறையில் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் இவரின் பாதங்களை நன்றாக தரிசிக்க முடியும். இங்கு வருணன், நிருதி, யக்ஞசர்மா, இந்திரன் ஆகியோர் பெருமாளை வணங்கி அருள்பெற்றுள்ளார்கள். முன்னர் ஒருமுறை இராமானுஜர் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசித்தபின், ஆழ்வார்திருநகரி செல்ல திருவுள்ளம் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் தொலைவு தெரியாத காரணத்தால், அங்கு நெல் மணிகளை காய வைத்துக்கொண்டிருந்த அர்ச்சகரின் பெண்ணிடம் அதுபற்றி கேட்க, அதற்கு அந்தப்பெண் கூப்பிடும் தூரத்தில் தான் ஆழ்வார்திருநகரி உள்ளதுஎன்று சாதுர்யமாக பதிலளிக்க, இராமனுஜரின் கண்களில் நீர் பெருக அவர் அகநெகிழ்ந்தார். பின் யாமும் கூப்பிடும் தொலைவை எய்திவிட்டோம் என்று இராமானுஜர் பதில் அளித்தார். அந்த அளவிற்கு இத்தலத்தில் வளர்ந்தவர்களுக்கு ஞானம் வந்தவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும்.
திருமணம் விரைவில் நடைபெறும்
பாண்டிய மன்னன் ஆட்சி கால மீன் சின்னம்
நன்கொடை இணையதளம் மூலம் செலுத்தலாம்
வாகன மண்டபத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது
திருக்கோயில் முன்பு ஆண்கள் பெண்கள் தனிதனியாக





