அருள்மிகு முத்துமாலையம்மன் திருக்கோயில், குரங்கணி

Century
16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால விஜயநகரம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
இத்திருக்கோயிலில் ஆனிக்கொடைவிழாவிற்கு எட்டு திருநாட்கள் முன்பாக ஆண்கள், பெண்களும் கடுமையான விரதம் இருப்பார்கள். ஆண்கள் பெரிய சுவாமிக்கு கயிறு சுற்றி ஆடுதல் என்ற நேர்த்திக்கடனும், பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு பெட்டி எடுத்தும் கோயிலை சுற்றி வரும் காட்சி கண்கொள்ளாதது.
இராவணன் சீதாபிராட்டியை சிறை எடுத்து சென்றபோது தான்செல்லும் பாதை அடையாளம் தெரியவேண்டும் என்பதற்காக சீதாபிராட்டி தன்னுடைய முத்துமாலைகளை கழட்டி எறிந்ததாகவும் அந்த முத்துமாலையே முத்துமாலையம்மன் என்ற அருள் நாயகியாக அனைவரும் பூஜித்து வரும் அன்புத்தெய்வமாக ஆனது என்பதும் வரலாறு. இன்னொறு வரலாறும் உண்டு முன்பு ஓரு காலத்தில் சத்தியமுனி என்ற சிவனடியார் முக்தி பெற்றிட வேண்டி தவம் செய்து வந்தார். ஓருமுறை அவர் யாகம் செய்யும்போது அவரது தவ வலிமையைக் கண்டு உலக மாதாவாம் உமா தேவியே மனமிறங்கி அங்கு எழுந்தருளி முனிவருக்கு முக்தி கொடுத்தாள். அப்பொழுது அன்னையின் வியர்வை முத்துக்கள் அவள் நெற்றியில் இருந்து சிந்தின .அவ்வருட் துளிகள் அழகும் திருவுருவும் கொண்டு தேவ கன்னியராய் அந்த யாகத்திலிருந்து தோன்றினர். அத் தெய்வ கன்னியர் முப்பத்திரெண்டு அங்க லட்சனங்களோடு விளங்கினார்கள் . அவர்கள் பொதிகைமலை எழிலையும் அகத்தியர் வாழ்ந்த இடத்தையும் தென்னாட்டு அழகையும் தன்பொருநையாம் தாமிரபரணியின் சிறப்பையும் கான விழைந்தார்கள். இறுதியில் அவர்கள் குரங்கணி வந்தார்கள். திருநதியின் கரையில் தங்களோடு பிறந்த ஓளி சிந்தும் பொன்,முத்து,வைரம் ஆகிய நவரத்தின ஆபரனங்களை களைந்து வசமாய் வைத்தார்கள். பின்னர் நதியிலே நீராடி முடித்து ஆபரனங்களை பார்க்கும் போது கரையிலிருந்த நவரத்தின ஆபரனங்கள் ஓன்று திரண்டு லிங்கமாக , அலகிலா ஜோதியாக அன்னையின் அருள் ஓளி விளக்காய் சுடரொளி முத்தாய் கோடி சூரியனாய் பிரகாசித்தது. அந்த ஜோதியில் அருள் நாயகி முத்துமரலையம்மன் இரண்டற கலந்துவிட்டாள் என்பதும் ஓரு வரலாறு.
பெரியசாமி,பேச்சியம்மன்,சந்தனமாரிஅம்மன்,விநாயகர்,வீரபுத்திரர்,பைரவர் ,பார்வதிஅம்மன்,பத்ரகாளியம்மன்,ப்ரம்மசக்தி,உஜைனிமாகாளி,துர்க்கை அம்மன்
-
இத்திருக்கோயிலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத்திட்;டம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு நிரந்தர உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் ரூ15000/- செலுத்தினால் அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து உபயதாரர் விரும்பும் நாளில் ஆண்டிற்கு ஒருநாள் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தில் நிரந்தர உபயதாரர்கள் உபயமாக ரூ1500 செலுத்தி அன்னதானத்திட்டத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்து திட்ட நன்கொடைகளுக்கு இந்திய அரசின் ச.பி.80 ஜியின் படி வருமான வரிவிலக்கு பெறப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது .
பக்தர்களுக்கு கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது .
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இரண்டு இடங்களில் குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.





