அருள்மிகு ஆயிரத்தம்மன் திருக்கோயில், Palayamkottai

Century
தெரியவில்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வேப்ப மரம்
தசரா திருவிழா சிறப்பு: இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 25 நாட்கள் இவ்விழா நகரமே விழாக்கோலம் காணும்படி சிறப்பாக நடைபெறும். இந்த தசரா விழாவுக்காக ஆவணி மாத அமாவாசை அன்று இத் திருக்கோவிலை தலைமையாக கொண்டு மற்ற அனைத்து அம்மன் கோவில்களிலும் தசரா விழாவுக்கான கால் நாட்டப்படும். தொடர்ந்து புரட்டாசி மாத அமாவாசைக்கு முதல் நாள் மாக்காப்பு அலங்கார பூஜை நடைபெறும். புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று காலை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன தட்டி அலங்கார சப்பரத்தில் ஆயிரத்தம்மன் உடன் மற்ற அம்மன்களும் தனித் தனி சப்பரங்களில் இங்கு எழுந்தருளி, இங்குள்ள எட்டு தேர் வீதிகளிலும் உலா வருவார்கள். எட்டு தேர் வீதிகள் என்பது இங்குள்ள சிவன் கோவிலின் நான்கு தேர் வீதிகள் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில் நான்கு தேர் வீதிகளையும் குறிக்கும். அன்று இரவில் இதற்கென பல வருடமாக ஒரு பக்தர் பரம்பரை பரம்பரையாக காளி வேடமிட்டு ஆடி வருவார். மறுநாள் காலை வீதி உலா முடிந்து அனைத்து அம்மன் சப்பரங்களும் இந்த ஆயிரத்தம்மன் கோவில் முன்பு எழுந்தருள பந்தலில் தசரா கொடி நாட்டப்படும். அதனை தொடர்ந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் அனைத்து அம்மன்களும் அந்தந்த கோவில்களில் கொலு மண்டபத்தில் கொலு இருப்பார்கள். இந்த விழாவின் பத்தாம் நாளான விஜய தசமி அன்று மாலை தாமிரபரணி நதிக்கரையில் இருந்து அந்தந்த கோவில்களின் சாமி கொண்டாடிகள் சார்பாக ஆற்றில் இருந்து புனித நீர் நிரப்பி கரகம் குடம் எடுத்து வரப்படும். ஆயிரத்தம்மன் இப்பகுதியிலுள்ள 11-அம்மன்களோடு சேர்ந்து 12-அம்மன்களில், தலைமை அம்மையாக திகழ்கிறாள். பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா விழாவின் நாயகியே இந்த ஆயிரத்தம்மை தான். இக்கோவிலை தலைமையாக கொண்டே மற்ற பதினோறு கோவில் அம்மன்களும் இணைந்து தசரா விழா ஒரு சேர வெகு விமரிசையாக நடைபெறும்
தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
மாடன்-மாடத்தி ஆகியோர்களின் சன்னதி உள்ளது.
பிரகாரத்தில் கன்னி மூலையில் கன்னி விநாயகர் சன்னதி உள்ளது
காவல் தெய்வம்





