Home/Temples/TN/Tirunelveli/Arulmigu Nellaiyappar Arultharum Kanthimathiamman Temple, Tirunelveli - 627006
Heritage Templehrce

Arulmigu Nellaiyappar Arultharum Kanthimathiamman Temple, Tirunelveli - 627006

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி நகர்

🕉️ நெல்லையப்பர் Tirunelveli, TN காந்திமதி
Arulmigu Nellaiyappar Arultharum Kanthimathiamman Temple, Tirunelveli - 627006 — image 1
1 / 20
Also known as:வேணுவனநாதர் நெல்லூர் சாலிவாடி சாலிவாலி சாலி நகர் தாருகாவனம் கீலவேம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்களம்

History & Architecture

Century

7th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

திராவிடம்

Sacred Tree (Sthalavriksha)

மூங்கில்

Pooja Timings

திருவனந்தல் பூஜை06:00 AM to 06:30 AM IST
விளா பூஜை07:00 AM to 07:30 AM IST
சிறுகால சந்தி பூஜை08:00 AM to 08:30 AM IST
காலசந்தி பூஜை (சிறப்பு அலங்காரம்)09:00 AM to 09:30 AM IST
உச்சிக்கால பூஜை12:00 PM to 12:30 PM IST
சாயரட்சை பூஜை (சிறப்பு அலங்காரம்)05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை (சாதாரண அலங்காரம்)08:15 PM to 08:30 PM IST
பள்ளியறை பூஜை (சிறப்பு அலங்காரம்)09:00 PM IST

Temple Speciality

புராதனம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் `திருநெல்வேலிப் பதிகம்` பாடியிருப்பதால் அதற்கு முன்பே `திருநெல்வேலி` என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாக உள்ளது

வரலாற்று சிறப்பு

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது., சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

வரலாற்று சிறப்பு

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மணிமண்டபத்திலும், அம்பாள் சந்நிதியிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு அமைந்தவை. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. சிறிய தூண்களைத் தட்டி வெவ்வேறு இசைச் சுரங்களை எழுப்ப முடியும்.

தல விருட்சம்

இத்திருக்கோவிலில் மூங்கில் மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது

கட்டட சிறப்பு

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[2] அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள் இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன. தாமிர அம்பலம் மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது

Sub Shrines

அருள்மிகு தக்ட்சிணாமூர்த்தி சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரமான தெற்கு பிரகாரத்தில் நடுவில் அமைந்துள்ளது

அம்பாள் சன்னதி மகாமண்டபம்

சிறப்பு தினசரி பள்ளியறை பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் சன்னதியின் முதல் பிரகாரத்தில் மகா மண்டபமாக அமைந்துள்ளது.

தேயுலிங்கம் சன்னதி

சிறப்பு பிரதோஷ சிவராத்திரி காலங்களில் பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

சந்திரன் சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

பைரவர் சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்தரும் சண்டிகேஸ்வரி சன்னதி

தினசரி உச்சிகால பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் சன்னதியின் முதல் பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு முற்றும் கண்ட ராமகோன் சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரமான தாமிர சபை அருகில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு காசி விசாலாட்சி சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரமான மேற்கு பிரகாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு கரு உருமாறி சுப்ரமணியர் சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் சுவாமி சன்னதி வழியாக அம்பாள் செல்வதற்கு இணைப்பு வழியாக உள்ள சங்கிலி மண்டபத்தில் ஐயப்பன் சன்னதிக்கு எதிரே இத்தலம் அமைந்துள்ளது.

சண்டிகேஸ்வரர் சந்நதி

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது

கால பைரவர் சன்னதி

வரலாற்று சிறப்புடையது- அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரமான கிழக்கு பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது

அருள்மிகு குருமுருகன் சன்னதி

உபசன்னதி விவரம் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் முகப்பு கோபுரத்திற்கு இடது புறம் அமையப்பெற்றுள்ளது

திருமூல மஹாலிங்கம் சன்னதி

திருவிழாக்காலங்களில் 6 காலம் அபிஷேகம் 1.விழா பூஜை 2.சிறுகாலசந்தி 3.கால சந்தி 4.உச்சிகாலம் 5.சாயிரட்சை 6.அர்த்தஜாமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். சுவாமி சந்நதியின் முதல் பிராகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.

சனீஸ்வர பகவான சன்னதி

சிறப்பு சனிப்பெயர்ச்சி மற்றும் சனிக்கிழமை தினங்களில் எள்ளு தீபம் விளக்கேற்றி வழிபடுவார்கள் உபசன்னதி விவரம் சுவாமி சந்நதியின் இரண்டாவது பிராகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு அப்புலிங்கம் சன்னதி

பிரதோஷ காலங்களில் மற்றும் சாயிரட்சை பூஜை நடைபெறும் சுவாமி சந்நதியின் இரண்டாவது பிராகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு அனவரதலிங்கம் சன்னதி

சிறப்பு சாயிரட்சை பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் சுவாமி சந்நதியின் மூன்றாவது பிராகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.

மகிஷாசுரமர்த்தினி சன்னதி

சிறப்பு 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா மற்றும் ஒவ்வொரு வாரம் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் சுவாமி சந்நதியின் மகா மண்டபத்தில் அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு அகஸ்தியர் சன்னதி

சிறப்பு தைப்பூசம் பத்தாம் திருநாளன்று தீர்த்தவாரி முன்னிட்டு சுவாமி எழுந்தருளித்தல் உபசன்னதி விவரம் இந்த உபசன்னதியானது சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.

அதிகார நந்தி சன்னதி

சிறப்பு - மகா மண்டபம் உபசன்னதி விவரம் இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் சுவாமி சன்னதியின் மகா மண்டபத்தில் அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு கச்சேரி விநாயகர் சன்னதி

சிறப்பு விநாயர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் சுவாமி சன்னதி மூன்றாவது பிரகாரமான கிழக்கு பிராகாரத்தில் அமைந்துள்ளது.

வாயுலிங்கம் சுவாமி சன்னதி

சிறப்பு சிவராத்திரி தினம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் சுவாமி சந்நதியின் மூன்றாவது பிரகாரமான மேற்கு பிராகாரத்தில் அமையப்பெற்றுள்ளது

அம்பாள் சன்னதி குடைவரைவாசல் விநாயகர் சன்னதி

அம்பாள் சந்நதியின் கொடிமரத்தின் இடது பக்கம் குடைவரைவாசல் விநாயகர் சன்னதி அமையப்பெற்றுள்ளது

அம்பாள் சன்னதி குடைவரைவாசல் முருகர் சன்னதி

அம்பாள் சந்நதியின் கொடிமரத்தின் வலதுபக்கம் அமையப்பெற்றுள்ளது

வன்னியடி சாஸ்தா சன்னதி

சிறப்பு பங்குனி உத்திரம் திருநாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் உபசன்னதி விவரம் சுவாமி சன்னதியின் மூன்றாம் பிரகாரமான வடக்கு பிரகாரம் மற்றும் கிழக்கு பிரகாரம் இணைக்கும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது

உள்வாசல் முருகர் சன்னதி

சுவாமி சன்னதியின் உள்வாசல் நுழைவுப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது.

நெல்லை முருகர் சன்னதி

சிறப்பு சஷ்டி தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறும் உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் தாமிர சபைக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.

சகஸ்ரலிங்கம் சன்னதி

சிறப்பு பிரதோஷம் மற்றும் சிவராத்திரி காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒரே லிங்கத்தில் 1008 லிங்கம் உடையவர் உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் ஒற்றை சனீஸ்வரன் சந்நதிக்கு எதிர்புறம் கிழக்கு திசையில் அமையப் பெற்றுள்ளது.

சிவலோக பத்தி சன்னதி

சிறப்பு மகா மண்டபம் உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியில் முதல் பிரகாரத்தில் மகா மண்டபமாக அமையப் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதி

சிறப்பு இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ஆறுமுக நயினாரின் ஆறுமுகங்களையும் தரிசிக்கலாம்.முன்பக்கம் உள்ள மூன்று முகங்கள் சூரிய பிரையாகவும், பின்பக்கம் உள்ள மூன்று முகங்கள் சந்திர பிரையாகவும், பிரகாராத்தை வலம் வரும் போது தரிசிக்கலாம். மற்ற ஊர்களில் மயிலின் முகம் மேற்கு திசையை பார்ப்பது போல் இருக்கும். இத்தலத்தில் மயிலின் முகம் கிழக்கு திசை பார்ப்பது போல் இருக்கும், மற்ற ஊர்களில் சூர பக்கதன் மயிலாக இருப்பார். ஆனால் இத்தலத்தில் இந்திரனே மயிலாக உள்ளார். இத்திலத்தில் வள்ளி இருக்கும் இடத்தில் தெய்வானை, தெய்வானை இருக்கும் இடத்தில் வள்ளி என மாறி இருப்பார்கள். மூலஸ்தானத்தில் முன் மண்டபத்தில் மன்மதன் கையில் உள்ள கல் கரும்பில் விளைந்த கரும்பை கணையில் அடித்தால் என்ன ஒலி வருமோ அதே ஒலி கல் கரும்பில் வரும். மன்மதனுக்கு எதிர்புறம் ஒரே கல்லில் இருரதிகள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்படி மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது, ஓசையின் ஒலிகளின் அளவுகள் தாழக்கல்லில் பதிவு செய்யப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியில் மூன்றாம் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

சப்த மாதா சன்னதி

சிறப்பு வாராஹி அம்மனை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை தினம், பௌர்ணமி தினம், பஞ்சமி திதி, இந்த நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பு. இதைத்தவிர்த்து உங்களால் வேறு எந்தக் கிழமையில் வழிபாடு வைக்கமுடியும் என்றாலும் வழிபாடு செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்சனை, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்க வேண்டும், என்னுடைய குடும்பம் ஏழு ஜென்மத்துக்கும் சந்தோஷமாக வறுமை இல்லாமல் தழைத்தோங்க வேண்டும் என்றும் வேண்டுதல் வைக்க வேண்டும். உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியில் இரண்டாம் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

சந்தன சபாபதி சன்னதி

சிறப்பு வருடத்தில் வரும் ஆறு நட்சத்திரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தன காப்பு சாத்தப்படும் உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியில் மூன்றாம் பிராகாரத்தில் தாமிரசபைக்கு பின்புறம் அமையப் பெற்றுள்ளது.

மேலவாசல் விநாயகர் சன்னதி

சிறப்பு சஷ்டி திருவிழா முதல் நாளில் மேலவாசல் விநாயகர் என்ற சஷ்டி விநாயகருக்கு தேங்காய் உடைத்து தீபாரதனை செய்து திருவிழா தொடங்கப்படும் உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் உள்ள பொற்றாமரை தெப்பகுளத்திற்கு எதிரில் அமையப் பெற்றுள்ளது.

மஞ்சனவடிவுடையம்மன் சன்னதி

சிறப்பு வெள்ளிகிழமை இராகு காலத்தில் திருமாணம் ஆகாதவர்கள் எலுமிச்சை பழம் விளக்கு ஏற்றினால் திருமணம் பாக்கியம் கிடைக்கும் மற்றும் நவராத்திரி திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடக்கும். உபசன்னதி விவரம் - இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் உள்ள பொற்றாமரை தெப்பகுளத்திற்கு எதிரில் அமையப் பெற்றுள்ளது.

கன்னிமூல விநாயகர் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் முதல் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

கஜலக்ஷ்மி சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

ஐயப்பன் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் உள்ள சங்கிலி மண்டபத்தில் அமையப் பெற்றுள்ளது.

அறுபது மூவர் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சூரிய சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சுரத்தேவர் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சோமாஸ்கந்தர் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தாமிர சபை அருகில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சரஸ்வதி அம்மன் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் உள்ள பொற்றாமரை தெப்பகுளத்திற்கு எதிரில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சங்கர நயினார் சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரமான மேற்கு பிரகாத்தில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சங்கரகோமதி அம்மன் சந்நதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரமான மேற்கு பிரகாத்தில் அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு சைலப்பர் சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரமாக கிழக்கு பிரகாத்தில் வலது பக்கம் உள்ள நந்தவனத்தில் அருள்மிகு சைலப்பர் சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு பொற்றாமரை விநாயகர் சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் உள்ள பொற்றாமரை தெப்பகுளத்திற்கு எதிரில் அருள்மிகு பொற்றாமரை விநாயகர் சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு நவகிரஹ சன்னதி

இந்த உபசன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் மூன்றாவது பிரகாராமான கிழக்கு பிராகத்தில் கொடி மரத்தின் அருகில் அருள்மிகு நவக்கிரஹ சன்னதி அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு நால்வர் சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் மூன்றாவது பிரகாராமான கிழக்கு பிராகத்தில் வலது பக்கம் அருள்மிகு நால்வர் சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு மகாலிங்க சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் தெற்கு பிரகாரத்தின் வழியாக அம்பாள் சன்னதியை இணைக்கும் சங்கிலி மண்டபத்தின் நடுவே இந்த அருள்மிகு மகாலிங்க சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு குபேரலிங்க சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளே இரண்டாவது பிரகாரத்தில் அருள்மிகு குபேரலிங்க சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அருள்தரும் காந்திமதியம்மன் சன்னதி

இந்த மூலவர் சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் உள்ளே இரண்டாவது மூலவர் சந்நதியாக அருள்தரும் காந்திமதி அம்மன் சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அருள்மிகு ஞானானந்த தட்ஷிணாமூர்த்தி சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளே தெற்கு பிராகாரத்தின் நடுவில் அருள்மிகு ஞானானந்த தட்ஷிணாமூர்த்தி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

அம்மையப்ப விநாயகர் சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளே தெற்கு பிராகாரத்தில் இருந்து சங்கிலி மண்டபம் செல்லும் வழியே நடுவில் கோசாலைக்கு எதிர்புறமாக அம்மையப்ப விநாயகர் சன்னதி அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு அம்பலவிநாயகர் சன்னதி

இந்த உப சன்னதியானது அருள்மிகு நெல்லையப்பர் சன்னதியின் நுழைவு வாயின் வெளிப்புறத்தில் அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு கோமதி அம்மன் சன்னதி

இந்த உப சந்நிதியானது திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் சந்நதியின் மூன்றாவது பிரகாரத்தில் மேற்கு வாசலுக்கு வடது புறமாக அருள்மிகு கோமதி அம்மன் சன்னதி திருக்கோயிலின் உள்ளே அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு காசி விஸ்வநாதர் சன்னதி

இந்த உப சந்நிதியானது திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் சந்நதியின் மூன்றாவது பிரகாரத்தில் மேற்கு வாசலுக்கு வடது புறமாக அருள்மிகு காசி விஸ்வநாதர் சன்னதி திருக்கோயிலின் உள்ளே அமையப்பெற்றுள்ளது.

அருள்மிகு நெல்லை கோவிந்தர் சன்னதி

அருள்மிகு நெல்லை கோவிந்தர் சன்னதி

அம்பாள் சன்னதி சுப்ரமணியர் சன்னதி

அம்பாள் சன்னதி சுப்ரமணியர் சன்னதி

அம்பாள் சன்னதி நந்தி சன்னதி

அம்பாள் சன்னதி நந்தி சன்னதி

குடவரை வாசல் முருகர் சன்னதி

குடவரை வாசல் முருகர் சன்னதி

குடவரை வாசல் விநாயகர் சன்னதி

குடவரை வாசல் விநாயகர் சன்னதி

அருள்மிகு பொல்லா பிள்ளையார் சன்னதி

அருள்மிகு பொல்லா பிள்ளையார் சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் மூலவர் சன்னதி

அருள்மிகு நெல்லையப்பர் மூலவர் சன்னதி

ஆகாசலிங்கம் சன்னதி

ஆகாசலிங்கம் சன்னதி

Temple Tank

கருஉருமாறி தெப்பம்

சட்டமன்ற அறிவிப்பு எண்.90, அம்மன்சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் உள்ள கருஉருமாறி தீர்த்தக்குளம் திரும்ப கட்டும் பணிக்கு மதிப்பீடு தொகை ரூ.151.5 இலட்சம் உபயதாரர் நிதி மூலம் செய்வதற்கு அரசாணை நிலை எண்.229 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி5-1) துறை படி நிர்வாக அனுமதி நாள்.16.09.2022 மற்றும் தொழில் நுட்ப அங்கீகாரம் வரப்பெற்றுள்ளது. மேற்படி உபயதாரரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி துவங்கப்படவுள்ளது.

சந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிற வெளி தெப்பக்குளம்

சந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிற வெளி தெப்பக்குளம்

பொற்றாமரை குளம் உள தெப்பம்

பொற்றாமரை குளம் உளதெப்பம் (சந்திரபுஷ்கரணி)

Sculptures

அல்லி அர்ஜுனன்

இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் வெளிப்பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.

பகடை ராஜா

இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.

மன்மதன்

இச்சிற்பமானது ஸ்ரீ ஆறுமுக நயினார் சந்நதியின் உள்பிரகாரத்தில் முகப்பில் அமையப் பெற்றுள்ளது.

சுவாமி சன்னதி நுழைவாயில் சிற்பங்கள்

இச்சிற்பமானது சுவாமி சந்நதி நுழைவு வாயில் மேற்புறத்தில் அமையப்பெற்றுள்ளது

கர்ணன்

இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.

வீரபத்திரர்

இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.

மர சிற்பங்கள்

இச்சிற்பமானது அம்பாள் சந்நதி நுழைவு வாயில் மேற்புறத்தில் அமையப்பெற்றுள்ளது.

பவளக்கொடி

இச்சிற்பமானது சோமவார மண்டபம் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.

அர்ஜுனன்

இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.

Services

அன்னதானம்

இத்திருக்கோயிலில் தமிழக முதல்வர் அவர்கள் அன்னதான திட்டம் 23.03.2002-இல் தொடங்கி தினமும் 100 நபர்களுக்கு கூட்டு அல்லது பொறியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சட்டமன்ற அறிவிப்பு எண்.2-இன்படி, ஆண்டுக்கு 21 நாட்கள் முக்கிய திருவிழாக்காலங்களில் 500 நபர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வ.எண்திருவிழா நாட்கள் 1.ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் 2.ஆனிப்பெருந்திருவிழா 4 ஆம் நாள் 3.ஆனிப்பெருந்திருவிழா 8 ஆம் நாள் 4.ஆனித்தேர் திருவிழா 5.ஆடிப்பூரம் 4 ஆம் திருநாள் 6.புரட்டாசி முதல் சனிக்கிழமை 7.புரட்டாசி கடைசி சனிக்கிழமை 8.ஐப்பசி திருவிழா தபசு காட்சி 9.ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 10.திருக்கார்த்திகை 11.ஆங்கிலப்புத்தாண்டு 12.தைப்பூசம் 4 ஆம் நாள் (நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா) 13.தைப்பூசம் 11 ஆம் நாள் (வெளித்தெப்பத் திருவிழா) 14.தைப் பொங்கல்) 15.தை அமாவாசை 16.மாசி அப்பர் தெப்பம் 17.மாசி சிவராத்திரி 18.பங்குனி 4 ஆம் நாள் (வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல்) 19.பங்குனி உத்திரம் 20.தமிழ் வருடப்பிறப்பு 21.வருஷாபிஷேகம் இதர நாட்களில் வழக்கம் போல் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

தேர் முன்பதிவு

இத்திருக்கோவிலில் தங்கரதம் , தங்கபாவடை சேவைகள் செயல்பட்டு வருகிறது

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

சுவாமி சன்னதியின் வெளிப்பிரகாரமான மூன்றாம் பிரகாரத்ததில் 1000 லிட்டர் சுத்திகரிப்பு தண்ணீர் அமைந்துள்ளது, அம்பாள் சன்னதியில் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் அம்பாள் சன்னதியில் 1000 லிட்டர் சுத்திகரிப்பு தண்ணீர் அமைந்துள்ளது மற்றும் அன்னதான உணவு அருந்தும் இடத்தில் வெளிப்புறம் அமைந்துள்ளது

சக்கர நாற்காலி

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் கோவில் அலுவலகத்தின் முன்பு

கருணை இல்லம்

சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமத்தில் 19 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் குழந்தைகள் படிப்பதற்கான வசதியறை சமையலறை கவுன்சிலிங் அறை நூலகம் பார்வையாளர் அறை உணவு அறை கழிவறை குளியலறை போன்ற வசதிகள் உள்ளன

நூலக வசதி

நூலகம்

திருமணம் நடத்துதல்

ஆறுமுக நயினார் சன்னதியில் வைத்து திருமணம் நடத்தப்படுகிறது

மரத் தேர்

5 தேர்கள் உள்ளன . 1.விநாயகர் தேர் . 2.சுப்பிரமணியர் தேர் 3.சுவாமி தேர் . 4. அம்பாள் தேர் 5.சண்டிகேஸ்வரர் தேர்

More Temples Nearby

View all →