அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில், சிங்கம்பட்டி

Century
19th நூற்றாண்டு
இத்திருக்கோயில் பிரார்த்தனை ஸ்தலம் தாமிரபரணி பொதிகைமலையில் உற்பத்தியாகி பானதீர்த்தமாக அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில் அமைந்திருக்கும் உத்திரவாகிணியில் செல்கிறது. இத்தீர்த்த கட்டத்தில் அகஸ்தியர் பொதிகை மலை செல்லும் போது ஸ்நான அனுஷ்டானம் செய்துள்ளார். இத்தீர்த்தகட்டத்தில் நீராடுபவர்களுக்கு பிணி நீங்கும். இத்தீர்த்த கட்டத்தில் இருந்து பல மாவட்டங்களில் நடைபெறும் குடமுழுக்கு, வருஷாபிஷேகம், கொடைவிழா போன்ற முக்கிய விழாக்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு சென்று இறைவனை பூஜித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பு மற்றும் திருமணத்திற்கான பிரார்த்தனை
அருள்மிகு பட்டவராயன் சுவாமி ஏறத்தாழ பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விதி வழி மதி என்ற வகையில் இப்பூவுலகத்தில் அருள்மிகு பட்டவராயர் ஆதி சைவ குலத்தில் பிறந்து, பொம்மக்கா, திம்மக்கா என்ற தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த இரு சகோதரிகளை மணக்க நேர்கிறது. இவர் இப்பகுதியில் உள்ள மாடுகளைக் கண்காணித்து மேய்க்கும் பொறுப்பை நிர்பந்தமான சூழ்நிலையில் ஏற்க நேர்ந்தபின் பசு குலங்களை திருட வந்தவர்களை அவர்களுடைய ஆயுதத்தால் கொள்ளையர்களுடன் பொருதிவிட்டார். கொள்ளையர்களிடம் நடந்த யுத்தத்தில் வெற்றி பெற்று உதிரம் தோய்ந்த ஆயுதங்களை தாமிரபரணி நதியில் கழுவிக் கொண்டிருந்த பொழுது கள்வன் ஒருவன் கீழே இருந்த ஈட்டி ஒன்றை எடுத்து முத்துப்பட்டனின் விலாபுறமாக குத்தி விடுகிறான். அதனால் அருள்மிகு பட்டவராயர் சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அவர்களுடைய நேமிதத்தை அசைவ படையல் செய்து நிறைவேற்றுவார்கள்
அருள்மிகு தூசிமாடசாமி அருள்மிகு தூசி மாடசாமி இத்திருக்கோயில் காவல் தெய்வமாகும். அன்றாடம் ஏற்படும் சுவாமிக்குரிய செலவுகளை அருள்மிகு தளவாய் மாடசாமியுடன் சேர்ந்து கணக்கிட்டு பார்ப்பவர். இவருக்கு அசைவ படையல் செய்து பக்தர்கள் அவரவர்களது நேமிதத்தை நிறைவேற்றுவார்கள். பக்தர்கள் தங்களது குறைகளை சுவாமியிடம் முறையிட்டு தனது நேமிதம் நிறைவேறிய பின் அசைவ படையல் செய்து நேமிதத்தை நிறைவேற்றி வருகிறார்கள். நேமிதம் நிறைவேறியவர்கள் அவர்கள் குழந்தைக்கு தளவாய் மாடசாமி பெயரை வைப்பார்கள். சுற்று வட்டார பகுதியில் தளவாய், மாடசாமி என்ற பெயர் அதிகளவில் இருக்கும்.
அருள்மிகு சங்கிலி பூதத்தார் இத்திருக்கோயிலில் உபசன்னதியில் அருள்மிகு சங்கிலி பூதத்தார் அருள்பாலிக்கிறார். தாமிரபரணி ஆறு பாயும் உத்திரவாகிணியில் அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோயில் அதன் பரிவார மூர்த்திகளான அருள்மிகு சங்கிலி பூதத்தார் வீற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும். இத்தீர்த்த கட்டத்தில் ஸ்நானம் செய்து புலால், மது நீக்கி அருள்மிகு சங்கிலி பூதத்தாரை வழிபட்டால் எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு பொறி போல் நாசம் செய்து அஷ்ட ஐஸ்வர்ங்களுடன் வாழ வைப்பார்.
அருள்மிகு பிரம்ம ராட்ஷஷி அருள்மிகு பிரம்ம ராட்ஷஷி மகிஷாசூர வர்த்தினியின் அவதாரம். அருள்மிகு பிரம்ம ராட்ஷஷி குங்குமத்தை நெற்றியில் இட்டதுமே அதிசயிக்கும் வகையில் தோற்றம் உண்டாகும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு அம்பாளுடைய கடாட்சத்தால் குழந்தை பிறக்கும். நெடுங்காலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு அம்பாளிடம் நேமிதம் செய்து வழிபட்டால் திருமணம் கூடி வரும். அம்பாளுக்கு நேமிதமாக சர்க்கரை பொங்கலிட்டு வழிபடுவார்கள். திருமணமானவுடன் நேமிதமாக பொட்டு மாங்கல்யத்தையும், பட்டுவும் சாத்துவார்கள். நேமிதம் செய்தவர்கள் குழந்தை பிறந்தவுடன் பிறந்த குழந்தைக்கு அம்பாளின் பெயரை சூட்டுவார்கள். சுற்று வட்டார பகுதியில் பிரமாச்சி என்ற பெயர் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்மிகு தளவாய் மாடசாமி அருள்மிகு தளவாய் மாடசாமி இத்திருக்கோயில் காவல் தெய்வமாகும். அன்றாடம் ஏற்படும் சுவாமிக்குரிய செலவுகளைக் கணக்கிட்டு பார்ப்பவர். இவருக்கு அசைவ படையல் செய்து பக்தர்கள் அவரவர்களது நேமிதத்தை நிறைவேற்றுவார்கள். பக்தர்கள் தங்களது குறைகளை சுவாமியிடம் முறையிட்டு தனது நேமிதம் நிறைவேறிய பின் அசைவ படையல் செய்து நேமிதத்தை நிறைவேற்றி வருகிறார்கள். நேமிதம் நிறைவேறியவர்கள் அவர்கள் குழந்தைக்கு தளவாய் மாடசாமி என்றும் பெயர் சூட்டுவார்கள். சுற்று வட்டார பகுதியில் தளவாய், மாடசாமி என்ற பெயர் அதிகளவில் இருக்கும்.
அருள்மிகு மகாலிங்க சுவாமி அகஸ்தியர் ஸ்நான அனுஷ்டானத்தை முடித்துவிட்டு ஞான திருஷ்டியால் நோக்க லோகமாதாவாகிய பிரம்ம ராட்ஷஷி, பேச்சியம்மன் முதலிய எல்லா மூர்த்திகளுடனும் சாஸ்தாவானார் திருமகாலிங்கம் என்ற பெயர் தாங்கிய பரமேசுவரரை பூஜித்தார்.
இத்திருக்கோயிலில் தமிழக முதல்வர் அவர்களின் அன்னதான திட்டம் 15.09.2015-இல் தொடங்கி தினமும் 50 பக்தர்களுக்கு சாதம், கூட்டு அல்லது பொறியல், சாம்பார், ரசம், மோர் என அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
உடை மாற்றும் அறை
கழிப்பறை வசதி - 45





