
Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
அண்மை காலம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும், தீய சக்தியும், தலைதூ க்குகிறதோ அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் அவதரிப்பார் என்பது ஐதீகம். பெரும்பாலும் கோவில்களில் சிலைகள் உருவ வழிபாட்டுடன் காணப்படும். இங்கு ஆல்கொண்டமால் எனும் பெயரில் அமர்ந்திருக்கும் விஷ்ணுபகவானின் அவதாரங்கள் சில, சிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே மூலவராக வணங்கப்படுகிறது. இந்த சிலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேல்பாகத்தில் கிருஷ்ண பகவானுக்கு இருமருங்கில் சூரியன், சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 2,34 ஆகிய தேதிகளில், இங்கு தமிழர் திருநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப் பாலை கொண்டு வந்து, ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து, திருநீரும், தீர்த்தமும் பெற்றுக் கொண்டு. தங்கள் கால்நடைகளுக்கும் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீதும் தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால், அவைகளுக்கு நோய்கள் வராது என்பது அவர்களது நம்பிக்கை. இந்தக் கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும், சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு.ஆல்கொண்டமால் கோவில் விழாவின் போது,தங்கள் வீட்டு கால்நடைகள் நலமுடன்வாழ வேண்டுதல் செய்வதற்கு காவல் தெய்வம் பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம் தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை சிலைகளின் முன்வைக்கிறார்கள். தேங்காய் உடைத்து, தேங்காய் தண்ணீரை கொண்டு தாங்கள் கொண்டு வந்த உருவ பொம்மைகளுக்கு கண் திறந்து வழிபடுகின்றனர். சலங்கை மாடு என்பதன் அடையாளத்துக்காக காதுகளை சூலாயுதம் போல் மாற்றி விடுவார்கள். பின்னர், மாடுகளை உருமி இசைக்கு ஆடும் வகையில் பயிற்சி அளிக்கின்றனர். அதன் முன்னே இரு நீள மூங்கில் கம்புகளை உயரத்தூக்கி கொண்டும், கால்களில் சலங்கை கட்டிக்கொண்டும் இசைக்கு தக்கவாறு ஆடுகின்றனர். இந்த வழிபாட்டு முறைகள் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று ஆகும்.
ஹனுமன் ஐெயந்திசிறப்பயாக நடைபெறும்
விநாயகர்
பிப்ரவரி 2,3,4 திரு விழா
கழிப்பறை வசதிஆண்கள் பெண்கள்
குடிநீர் வசதி





