
Century
20th - 21th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுரஸ்ர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
துரட்டி மரம்
எட்டு ராயர்களில் முதன்மையான ஆகாசராயர் இங்கு எழுந்தருளியிருப்பது சிறப்புடையதாகும், இச்சிறப்பு வாய்ந்த ஆகாசராயர் உலகம் அழியும் காலத்தில் சுவாமி எழுந்தருளிய காலத்தால் நவக்கிரகங்களைத் தடுத்து ஆளக்கூடிய வல்லமை பெற்றவர் ஆகிறார். ஈசனால் கஜை என்ற ஆயுதத்தைப் பெற்றதால் காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் ஈசனின் அம்சமாகிறார். அவ்வகையில் சுவாமி தோன்றிய காரணத்தால் சத்ரு சம்ஹார மூர்த்தியாகிறார். பிரம்மச்சாரியத்தில் இருப்பதால் அனைத்து தோஷங்களையும் பரிகாரம் செய்யக்கூடிய வல்லமை புரிகிறார். சுவாமி அஷ்ட திக்கும் ஆகாசமும் பலம் பொருந்திய பாலகன் ஸ்ரீ ஆகாசராயர் என்ற திருநாமத்தை ஈசனால் பெறுகிறார். இத்திருக்கோயில் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி நடப்பவர்கள் சுவாமியின் பரிகாரமாகிய கட்டுனீர், ஏகனீர் மற்றும் செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள் அனைவரும், ராகு கேது தோஷமுள்ள அனைவரும் தாயத்து வாங்கி சுவாமியின் அனுக்கிரத்தைப் பெற்று, 16 செல்வங்களையும் (உங்களின் பிறவிப் பயன் எதுவோ அதற்கு உண்டான செல்வத்தை) இறைவனுடைய அனுக்கிரகத்தால் பக்தர்கள் பெற்று இன்புற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
அருள்மிகு காத்தவராயருக்கு அசைவ படையல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
கட்டணச்சீட்டு விற்பனை (அர்ச்சனை, தேங்காய், தாயத்து, ஏகநீர்/கட்டுநீர், திருமணம்) ஆகியவை இத்திருக்கோயிலில் உள்ளது.
பொது நன்கொடை சேவை மற்றும் க்யூ.ஆர் மூலமாக நன்கொடை செலுத்தும் வசதி இத்திருக்கோயிலில் உள்ளது.
திருக்கோயில் மகா மண்டபத்தில் பக்தர்களுக்காக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது
திருக்கோயிலில் மொத்தம் நான்கு கழிப்பறைகள் உள்ளன.
பெண்கள் - இரண்டு குளியலறை உள்ளது



