
Century
15th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
நாயக்கர்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேப்பமரம்
சுயம்பு மூர்த்தியாக மிகவும் சக்தியுடன் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களும், செல்வ வளம் விருப்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் அங்காளம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துசாமி என்று பெயர் சூட்டுகிறார்கள், அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகிறார்கள்.
தினந்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.
தினந்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் தீபாராதனை நடைபெறும்.
தினந்தோறும் காலை மற்றும் , மாலை பூஜை தீபாராதனை நடைபெறும்.
இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் நாள்தோறும் மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றுக்கொண்டு வருகிறது. தினந்தோறும் 50 நபர்களுக்கு அன்னதானத்திட்டம் நடைபெறுகிறது. தாங்கள் விரும்பும் நாட்களில் அன்னதானம் செய்ய நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு ரூ.1750/- அன்னதான நன்கொடை செலுத்தலாம். தாங்கள் செலுத்தும் அன்னதான நன்கொடைக்கு 80 வருமான வரி விலக்கு உண்டு.
ஆண் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இரண்டு குளியல் அறைகளும், பெண் பக்தர்களின் பயன்பாட்டிற்கு இரண்டு குளியல் அறைகளும் உள்ளன.
ஆண் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இரண்டு கழிவறைகளும் பெண் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இரண்டு கழிவறைகளும் உள்ளன.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக (ஆர்.ஓ) வாட்டர் உள்ளது





