
Century
18th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
சர்ப்பதோஷம் உடையவர்கள் ஆண் , பெண் இருபாலருக்கும் திருமண காரியங்கள் கூடி வராமல் இருப்போர்கள் இக்கோயிலில் ராகு காலத்தில் கோயிலை வலம் வந்து தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு உடனே திருமணங்கள் நடைபெறுகின்றது. இந்த அம்மனிடம் நினைத்த காரியங்களை முடித்து கொடுத்தால் இன்னது உனது கோயிலுக்கு நேர்த்திக் கடன் செய்கிறேன் என்று கூறி வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு உடனடியாக இந்த அம்மன் அவர்களின் வேண்டுதல்களை முடித்து வைக்கின்றது. அந்த வகையில் இக்கோயிலுக்கு ஏராளமாக நேர்த்திக்கடன் பொருட்களை பக்தர்கள் கொண்டுவந்து செலுத்தி விடுகின்றனர். சுற்று வட்டாரங்களில் ஆடு, மாடுகள் நோய்இன்றி பட்டி பெருக, ஆடு, மாடு கிடாய் கன்றுகளை இந்த அம்மனுக்கு கொண்டு வந்து இக்கோயிலில் விட்டு விடுகின்றனர். பில்லி சூன்யம் கிரகதோஷம் போன்றவற்றால் துன்பப்படுவர்கள் இந்த கோயிலில் வந்து தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு மேற்படி துன்பங்களில் இருந்து இந்த அம்மன் உடனடியாக குணமாக்குகிறது. இந்த அம்மன் கோயில் சிறப்பு பற்றி தாராபுரம், உடுமலைப்பேட்டை வட்டங்களில் மிகப் பிரசித்தி பெற்றதாக உள்ளது.
ஆண்கள் கழிவறை இரண்டும், குளியலறை ஒன்றும் உள்ளது. பெண்கள் கழிவறை இரண்டும், குளியலறை ஒன்றும் உள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.





