Home/Temples/TN/Tiruppur/Arulmigu Nattarayaswamy Temple, Vellakovil, Kangayam - 638111
hrce

Arulmigu Nattarayaswamy Temple, Vellakovil, Kangayam - 638111

அருள்மிகு நாட்ராயசுவாமி திருக்கோயில், வெள்ளகோவில், Kangayam

🕉️ நாட்ராயன் நாச்சிமுத்துஅய்யன் Tiruppur, TN
Arulmigu Nattarayaswamy Temple, Vellakovil, Kangayam - 638111 — image 1
1 / 8
Also known as:நாட்ராயன் கோயில்

History & Architecture

Century

18th - 19th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

இல்லை

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Vimanam Type

மூன்று நிலை விமானம்

Sacred Tree (Sthalavriksha)

இலந்தை மரம்

Pooja Timings

காலசந்தி பூஜை06:00 AM to 07:00 AM IST
சாயரட்சை பூஜை05:00 PM to 06:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

விசக்கடி மற்றும் மருகு போன்ற நோய்களுக்கு அருள்மிகு நாட்டராயசுவாமி மற்றும் நாச்சிமுத்துஅய்யன் திருக்கோயிலில் வேண்டிக்கொண்டு திருக்கோயில் சுனையில் உப்பு மிளகு, வெல்லம் கலந்து போட்டு வந்தால் குணமாகும் என்பது ஐதீகம்,

Sub Shrines

அருள்மிகு கருப்பண்ணசுவாமி

இத்திருக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தெற்கு பக்கச் சுவரில் இருந்து நேர் தெற்கே சுமார் 50 அடி தூரம் தள்ளி, கிழக்கு நோக்கிய திசையில் ஒரு தனிச் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அத்தனிச் சன்னதியில் முறுக்கு மீசையும், வீச்சரிவாளும், மிகக் கம்பீரமான தோற்றமும் கொண்ட அருள்மிகு கருப்பண்ணசுவாமி கோயில் கொண்டுள்ளார். அச்சன்னதியில் வெளிவளாகமானது, தனிப்பட்ட பக்தர்களின் வேண்டுதல்களுக்காக செய்யப்படும் நேர்த்திக் கடன்களின் நிறைவேற்றத்திற்காக மட்டும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு வெளிவளாகத்தில் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, திருக்கோயில் உள்வளாகத்தில் உள்ள சன்னதிகளுக்குச் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. எவரையும் அனமதிப்பதும் இல்லை. அருள்மிகு நாட்டராயன் சுவாமி மற்றும் நாச்சிமுத்து அய்யன் சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டு, திருக்கோயில் வெளிவளாகத்தில் உள்ள அருள்மிகு மகாமுனியம்மனை வழிபட்ட பிறகு, இறுதியாக அருள்மிகு கருப்பண்ணசுவாமியைத் தரிசிப்பது என்பது இக்கோயிலின் நீண்ட கால நடையாகும்.

அருள்மிகு மகாமுனியம்மன்

மாபெரும் பாவியாக அன்று மக்களால் பெரிதும் வெறுத்து ஒதுக்கப்பட்ட மகாமுனி இன்று அதே மக்களால் பெரிதும் விரும்பப்படும் புனிதமான தேவதையாகவும், மக்கள் குறைதீர்க்கும் மாபெரும் இறைவியாகவும், அன்பான அருள்மிகு மகாமுனியம்மனாகவும் வலம் வருவது என்பது வியப்பின் குறியீடு மட்டுமல்ல: மாபெரும் மகத்துவத்தின் வெளிப்பாடும் ஆகும். திருக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அருள்மிகு மகாமுனியம்மன் உறையும் இடம், மேற்கு நோக்கிய தனிச்சன்னதியாக உள்ளது. அருள்மிகு நாட்டராயன் சுவாமி மற்றும் நாச்சிமுத்து அய்யன் சுவாமிகளை உள்ளே தரிசித்து விட்டு, வெளியே வந்து அருள்மிகு மகாமுனியம்மன் சன்னதியில் வழிபடுவது இங்கு வழக்கமாக இருந்து வரும் நடைமுறை ஆகும்.

Services

நன்கொடை

திருக்கோயில் நன்கொடைகள் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தலாம் இணையதள வாயிலாகவும் செலுத்திக்கொள்ளலாம்.

Immovable Property

ஐந்து கடைகள் மற்றும் ஒரு மனை வணிகம் உள்ளது.

அன்னதானம்

இத்திருக்கோயிலில் 02.02.2024ம் தேதியிலிருந்து திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பசியாற்றும் வகையில் தமிழக சட்டமன்ற அறிவிப்பின்படி அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

திருக்கோயிலுக்குள் வடது புறமாக பேச்சியம்மன் சன்னதி முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைபுகளுடன் உள்ளது மற்றும் திருக்கோயில் அலுவலகத்திற்கு முன்பு 10000லிட்டர் டேங்க் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயுடன் உள்ளது.

முடி காணிக்கை வசதி

திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது

More Temples Nearby

View all →