
Century
18th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
Sacred Tree (Sthalavriksha)
தொரட்டி
இத்திருக்கோயிலில்பொருள் வைத்து பூஜை செய்வது என்பது தனிச்சிறப்பாகும். ஒரு நிகழ்வு குறித்து உலகம் அறியும் முன்பே சொல்லும் ஒரு சக்தி வாய்ந்த மலைக் கோவில் ஆகும்.
சுப்பிரமணியா்
வள்ளிஅம்மன்
ஞானாம்பிகை அம்மன்
திருக்கோயில் உட்பிரகாரத்தில் நுழைவு வாயில் இடது புறம் சூரியன் சன்னதி அமைந்துள்ளது.
தெப்ப௨ற்சவம் நடைபெறும்
இல்லை
பழமையான மரத்தேரில் உள்ள சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002 முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 100 நபர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்தில் போக் சான்றிதழ் பெறப்பட்டு சுத்தமான உணவு தயாரிக்கப்பட்டு, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - திருவள்ளுவர். தாங்களும், தங்கள் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் மற்றும் இல்லங்களில் நடைபெறும் விஷேச நாளன்று ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூ.3500/- செலுத்தி பங்கு பெறலாம். அன்னதானத் திட்டத்தில் வைப்பு நிதியாக ரூ.75,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பு ஏதாவது ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.
நூலகத்தில் அனைத்து வித சமயம் சார்ந்த புத்தகங்களும் நூலகத்தில் உள்ளன. நூலக வசதி அமைவிடம் வானக நிறுத்துமிடத்தில் உள்ளது. இங்குப் பொதுமக்கள் வசதிக்காகக் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் சார்பில் பேருந்து வசதி மற்றும் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. வசதி அமைவிடம் சக்கரநாற்காலிகள் இத்திருக்கோயிலின் தென்புறம் சீட்டு விற்பனை அருகிலும், அலுவலகத்தில் ஒன்றும் கூடுதல் 2 சக்கர நாற்காலிகள் உள்ளது.
இத்திருக்கோயிலுக்கு பக்தர்கள் வசதிக்காக அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு சென்று வர இரண்டு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் திருநீலகண்டர் மண்டபம் முன்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்னதானக்கூடத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.





