அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில், வி.அய்யம்பாளையம், வி.அய்யம்பாளையம், சாமளாபுரம், திருப்பூர்

Century
21st நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சுதை
Sacred Tree (Sthalavriksha)
கிளுவைமரம்
1.அருள்மிகு அய்யன் வீற்றிருக்கும் கருவறை விமானம் இல்லாமல் வெட்ட வெளியாக உள்ளது. மேற்கூரை வெட்டிவேர் பந்தலினால் அமைக்கப்பட்டுள்ளது. 2.கருவறையில் காய்ந்த கிளுவை மரத்தடியில் அய்யன் வழிப்பட்டதாக கூறப்படும் சுயம்பு லிங்கமும் அய்யன் கற்சிலா விக்கிரமும் காணப்படுவது தனிச் சிறப்பாகும் . 3.இங்கு கருவறைக்குள் ஆண்கள் சென்று வழிபடலாம். 4.இத்திருக்கோயிலில் புற்று மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாம்பு, தேள் மற்றும் இதர விஷக்கடிகளால் ஏற்படும் பிணி நீக்க மற்றும் இதர பிற நோய்கள் குணமாக பக்தர்கள் அருள்மிகு அய்யனை வழிப்பட்டு நீறு பிரசாதம பெற்று செல்கிறார்கள். புற்றுமண் நீறு பிரசாதத்தை உடலில் பூசி அரை மண்டலம், ஒரு மண்டலம் என திருக்கோயிலில் உள்ள சத்திரத்தில் தங்கி நோய் குணமாகி செல்கிறார்கள்.
கருவறையின் தெற்கு பக்கம் உள்பிரகாரத்தில் அருள்மிகு விநாயகர் சன்னதி உள்ளது.
அய்யன், சிவலிங்கம்
அருள்மிகு நால்வர் சன்னதி: அருள்மிகு திருஞானசம்பந்தர், அருள்மிகு திருநாவுக்கரசர், அருள்மிகு சுந்தரர், அருள்மிகு மாணிக்கவாசகர் ஆகிய சமய குரவர்கள் நால்வரின் சன்னதி கருவறையின் வடக்கு பார்த்து தென்கிழக்கு பகுதியில் உள்ளது.
அருள்மிகு நடராஜர்சன்னதி: உற்சவர் அருள்மிகு நடராஜர், அருள்மிகு சிவகாமியம்மன், அருள்மிகு அய்யன், அருள்மிகு விநாயகர், அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அருள்மிகு நால்வர், என உற்சவ விக்ரகங்கள் கொண்ட சன்னதி மூலவர் சன்னதிக்கு வட கிழக்கு பகுதியில் தெற்கு நோக்கி உள்ளது.
அருள்மிகு நாகர் சன்னதி, திருக்கோயிலின் வெளிபுறம் வடக்கு பகுதியில் ராகு,கேது, நாகர் சன்னதி உள்ளது, இங்கு நாள்தோறும் ராகு நேரத்தில் ராகு கேது பரிகார பூஜை செய்யப்படுகிறது.
அருள்மிகு விநாயகர் மற்றும் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் அரச மரத்தடியில் அருள் பாலிக்கின்றனர்
அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதி மூலவர் சன்னதிக்கு வடபுறத்தில் அமைந்துள்ளது.
திருக்கோயில் மேற்கூரையின் உள்புறம் கமலங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் மகாமண்டபம் சுற்றுச்சுவர்களின் உள்புறத்தில் திருக்கோயில் வரலாறு குறித்த வரை படங்கள் உள்ளன.
இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சாதாரண நாட்களில் நாள்தோறும் அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், ஊறுகாய் ஆகியவை 100 நபர்களுக்கு வாழை இலையில் பரிமாறப்படுகிறது. அமாவாசை தினத்தன்று 300 நபர்களுக்கு இவ்வகை உணவு வழங்கப்படுகிறது. அனைத்து வெள்ளி கிழமைகளில் வடை, பாயாசத்துடன் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
5 குளியல் அறைகள் ஆண்களுக்கு போதிய தண்ணீர் வசதியுடன் உள்ளது. 5 குளியல் அறைகள் பெண்களுக்கு போதிய தண்ணீர் வசதியுடன் உள்ளது
திருக்கோயில் வளாகத்தில் ஆண்களுக்கு 7 மற்றும் பெண்களுக்கு 7 கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்குள் 2 சக்கர நாற்காலிகள் உள்ளன
குடி நீர் வசதி உள்ளது.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் கட்டணமில்லாமல் தங்குவதற்கு சத்திரங்கள்-2 கட்டப்பட்டுள்ளது.
திருக்கோயில் வளாக்த்தில் பக்தர்களுக்கான முடி காணிக்கை அறை வசதி உள்ளது,
இத்திருக்கோயிலின் மகா மண்டபத்தின் மேற்புறம் சூரிய மின் சக்தி அமைக்கப்பட்டு உள்ளது,
6 அறைகள் குளியல் அறை இணைக்கப்பட்டு சுடுதண்ணீர் வசதியுடன் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது.
திருமணம் மண்டபம் வசதி உள்ளது.





