அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

Century
19th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வெள்வேல மரம்
கோயிலின் சிறப்பம்சங்கள்திருத்தலச் சிறப்பு- இதர வகை தலைப்பு விவரம்- சிறப்புகள் சிறப்பு விளக்கம்- 1.அரவம் தீண்டி மரணம் நிகழா திருத்தலம் பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருவேற்காடு. 2.ஆதவனுக்கு அருளிய அன்னை வீற்றிருக்கும் திருத்தலம் திருவேற்காடு. 3.அம்மையப்பன் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்சியளித்த திருத்தலம் திருவேற்காடு. 4.நாயன்மார்களுள் மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம் திருவேற்காடு. 5.கந்தவேல் கருமாரி அன்னையினைத் தொழுது, பணிந்து, அவரது திருக்கரத்தால் பெற்ற வேலால் உருவாக்கிய வேலாயுத தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலம் திருவேற்காடு. 6.திருநீற்றுப்பொய்கை அமைந்துள்ள திருத்தலம் திருவேற்காடு. 7.கருமாரி அகமகிழ்ந்திட, தங்கையுடன் மாலவன் அருள்மிகு திருமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருவேற்காடு. 8.நாகங்களுக்குப் பெருமை சேர்க்கும் நாகேஸ்வரியாக அன்னை கருமாரி உறையும் திருத்தலம் திருவேற்காடு. 9.நவக்கிரகங்களும், பாலிநதியில் நீராடி திருவேற்காட்டுக் கருமாரியைப் பணிந்து திருநீறு பெற்று மகிழ்ந்த திருத்தலம் திருவேற்காடு. 10.கேட்டவர்க்குக் கேட்டவரம் அளிக்கும் கருணை மாரியின் திருத்தலம் திருவேற்காடு. 11.பக்தர்களின் படையலைப் பரிவோடு ஏற்றுக்கொள்ளும் பராசக்தி உறையும் தலம் திருவேற்காடு
அருள்மிகு சப்தமாதர் சன்னதி . திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ளது. அன்னை சாவித்திரி அருள்மிகு காமாட்சி அன்னை மீனாட்சி அன்னை மகாலட்சுமி அன்னை காயத்ரி அன்னை ராஜராஜேஸ்வரி அன்னை விசாலாட்சி
ஒரு நாள் அம்பிகையின் மூத்த மகன் விநாயகர் வலம்புரிச் சங்குக்கு புனிதநீர் கொண்டு வந்து கருமாரிக்கு அபிஷேகம் செய்தார். மகிழ்ந்த கருமாரி, இக்கோயிலில் வலம்புரி விநாயகராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உத்தரவிட்டார். அதனால்தான் இன்றும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைக்காக 108/1008/10008 சங்கு அபிஷேகம் செய்து அருள்பாலிக்கிறார்கள்.
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்பாள் வீற்றிருக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அன்னை தன் அருளை வாரி வழங்குகிறாள் .
அருள்மிகு தேவி கருமாரியம்மன் இரண்டம் பிரகாரத்தில் உற்சவர் அம்மனாக வீற்றிருக்கிறாள். அன்னை கருமாரியிடமிருந்து வேல் பெற்றான் கந்தன். வேல் அன்பின் அடையாளம் அகில உலக மாதாவின் இதயத்துடிப்பு. அந்த வேற்காடு கருமாரி பரிசளிப்பு. தாய் மகனுக்கு பரிசு வழங்கினால். அந்த பரிசை பெற்றமகன் வீரத்துடன் சூரனுடன் போரிட்டான். சூரனின் ஆணவம் அழிந்தது அவனுக்கு முருகனின் திருவருள் கிடைத்தது. மயிலாகவும் , சேவலாகவும் மாறினான். வாகனமாகவும் கொடியாகவும் நின்றான். சூரனின் தம்பி தாரகன். அவனும் முருகன் அருளுக்கு பாத்திரமானான். சிங்க வாஹனமாக வந்து நின்றான். முருகனின் வீரத்திற்கு அடிப்படைக்காரணம் அன்னையல்லவா?
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னை வேற்கண்ணி அமர்ந்திருக்கிறாள். தொடக்கம் என்றால் முடிவும் உண்டு. ஐந்தொழில் செய்ய அன்னை பாலாம்பிகைக்கு தன் உடம்பிலிருந்து ஈசன் திருநீறு அளித்த வரலாற்றை முன்பு கண்டோம். அந்த ஈசன் அசுரர்கள் அழித்து தேவர்களை காத்தான். மன அமைதி வேண்டி மணிநாத புரத்தீவில் யோகத்தில் அமர்ந்தான் . ஐயனின் யோகம் விபரீதம் உலகமே உறைந்துவிடும் என்பதால் நாரதர் புறப்பட்டார். நாதபிரம்மத்தால் துயில் எழுப்ப முடிவு செய்தார். வீணையை மீட்டி சங்கராபரணம் பாடினார். ஐயன் மீண்டான் . மீண்டும் பழையபடி உலகை இயக்க முடிவு செய்தான். வேற்கண்ணியின் வேலைச்சுமை குறைய வேண்டுமல்லவா ? ஆகவே ஐம் பூதங்களையும் கும்பமாக்கினான். அதில் அன்னையை ஐக்கியப்படுத்தி சாந்தி நிலையை ஏற்படுத்தினான். கும்பத்தின் உள்ளேயே கங்காதேவியை உள்ளடக்கினான். ஏழு அன்னையை ஏழு வேப்பிலை கொத்துக்களாகினார். அனைத்து சக்தியை உள்ளடக்கி ஓம் சக்தியை கும்பமாரியாக உலகிற்கு வழங்கினான். ஓம் சக்தியின் ஒட்டுமொத்த வடிவம் கும்பமாரி. அதை பணிந்தவர்க்கு ஆதிபராசக்தியின் அபரிமிதமான அருள் கிடைக்கும் என்று உலகிற்கு உணர்த்தினான் ஈசன்.
அன்னையின் சன்னதியிலேயே ஏழுமலையானாகக் கோவில் கொண்டான். அன்னைக்கு மட்டுமல்ல - அவள் பக்தர்களுக்கும் அவன் சீர் செய்து வருகிறான். அது மட்டுமா? தென்புலப் பெரியோர் நவகோள்களைத் தெற்கு நோக்கி வழிபடும்போது அண்ணன் ஸ்ரீநீவாசன் அவர்களை நவகோள்களின் தீட்சண்யத்திலிருந்து காத்து அவர்களுக்கு நன்மைகளை மட்டுமே வழங்க நவகோள்களுக்கு ஆணை இடுகிறான். அவனது அருளாட்சி இன்றும் தொடர்கிறது.
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் இரண்டம் பிரகாரத்தில் நவகிரகங்களில் சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு பகவான்,சுக்கிரன்,சனி பகவான்,ராகு,கேது சன்னதிகள் உள்ளது.
அருள்மிகு பிரத்யங்கரா தேவி சன்னதி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது. மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை தினத்தன்று மிளகாயினால் (நிகும்பலா ஹோமம்) யாகம் பிரத்யங்கரா தேவிக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் மற்றும் எதிரிகளால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்படும் பல இன்னல்களிலிருந்து காத்தருளும்படி பிரார்த்தித்துக்கொண்டு வாங்கி கொடுக்கும் மிளகாய் கொண்டு பூஜை செய்யப்படுகிறது.
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அருள்மிகு தட்ஷிணாமூர்த்தி ஸ்வாமி வடக்கு நோக்கி அமர்ந்து வருகை தரும் பக்தர்களுக்கு தன் அருளை வாரி வழங்குகிறார்.
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக வீற்றிருக்கிறார்
இந்த திருநீற்று பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலையில் நீராடி திருநீறு அணிபவர்கள் சகல செல்வங்களும் பெறுவார். அத்துடன் கல்வி அறிவும் நிரம்பப்பெற்று உலகம் போற்ற வாழ்வர். ஆடி மாதத்தில் ஆதி வாரத்தில் நீராடுவோர் மக்கட்பேறு பெற்று மகிழ்வர்.அதே மாசியில் அமாவாசையில் நீராடி நீறு பூசிக்கொள்வோர் பகைவர்களை எளிதில் வென்று வெற்றி அடைவர். தை மாதத்தில் ஞாயிறுகள் நீராடுவோரின் வல்வினைகள் பொடிபொடியாகி புனிதமடைவர். அமாவாசையில் நீராடினால் பிணி நீங்கும். பில்லி, ஏவல் , போன்ற செய்வினைகள் ஒழியும் . முழுமதியில் நீராடுவோர் பல நதிகளில் நீராடிய பலன் பெற்றுப் பாவங்கள் நீங்கி சுகம் பெறுவார். தைமாதம் , ஆதிவரம், பூசம் கூடிய நன்னாளில் நீராடினால் பெறற்கரிய பேறுகளை பெறலாம். ஆடிப்பூரம் - நாவன்மை சிறக்கும். கலைகள் விளங்கும். சித்திரைத்திங்கள் பௌர்ணமி நாள் - பூரண ஞானம் புரட்டாசி , ஐப்பசி முழுமதி நாட்கள் - ஞானி ஆவர் .அணைத்து சித்திகளும் கைகூடும். நவராத்திரி- ஆதிசேடனை போன்ற கலைத்திறன் கைகூடும். என்று அன்னை கூறி அகிலத்திற்கு அருள் பாலித்தாள் .
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே பசித்தோர் முகம் பார் பரம்பொருள் அருள்கிட்டும் என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்னதானத்திற்கென மாண்புமிகு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 23.03.2002- ம் தேதி முதல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புடன் அனைவராலும் பாராட்டப்படும் வண்ணம் நடைபெற்று வருகிறது .அன்னதானத்திற்கு பணம் செலுத்துவோருக்கு 80 வரிவிலக்கு இத்திருக்கோயிலிலிருந்து அளிக்கப்படும்
அருள்மிகு தேவி கருமாரியின் பெயரில் உள்ள காசோலை அல்லது இணையதளத்தின் பெயரைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை கோயிலுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.
அருள்மிகு தேவி கருமரிஅம்மனை வழிபட வருகை தரும் பக்தர்ககளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயிலின் மூலம் கட்டப்பட்ட குளிர்சாதனம் பொருத்திய அறை குளிர்சாதனம் அல்லாத அறை , சேவர்த்திகள் தங்கும் விடுதி உள்ளது. சிறு குடில்-5 அறைகள் 3-குளிரூட்டப்பட்ட அறை(ரூபாய் 750/-) 2-குளிரூட்டப்படாத அறை(ரூபாய் 600/-) பக்தர்கல் தங்கும் விடுதி-14 அறைகள் 7- குளிரூட்டப்பட்ட அறை(ரூபாய் 1200/-) 6-குளிரூட்டப்படாத அறை(ரூபாய் 600/-) 1-சூட் அறை(ரூபாய் 1000/-) விஐபி குடிசை-4 அறைகள் 4-குளிரூட்டப்பட்ட அறை(ரூபாய் 1200/-)
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியலறைகள் கட்டணமில்லாமல் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவைகளை அவ்வப்போது சுத்தம் சுகாதார பணியாளர்கள் கொண்டு தூய்மை செய்யபட்டு சுகாதாரமான முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது..
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 32 கழிவறைகள் கட்டணமில்லாமல் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவைகள் அவ்வப்போது சுகாதார பணியாளர்களைக் கொண்டு தூய்மை செய்யபட்டு சுகாதாரமான முறையில் பக்தர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான தேவி கருமாரியம்மன் பெரிய மற்றும் சிறிய திருமண மண்டபம் தேரோடும் வீதியில் உள்ளது. திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் பயன்படுத்தும் விதத்தில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு அனைத்து வசதிகளுடன் நல்ல நிலையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு அம்மனை வழிபட வருகை தரும் பக்தர்கள் மற்றும் முதியோர்களுக்கு தேவையான இரண்டு சக்கர நாற்காலி 3 எண்ணிக்கை தற்போது நல்ல நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அறங்காவலர் அறைக்கு அருகில் உள்ளது.
ஆன்மிக புத்தக நிலையம் இந்து சமயத்தை சார்ந்த புனித நூல்களான தேவாரம் , திருவாசகம், பெரியபுராணம், கருடபுராணம், சமயநூல்கள் மற்றும் பல இலக்கண பழமைவாய்ந்த நூல்கள் பக்தர்களின் ஆன்மிக அறிவுத்திறனை தூண்டும் வகையில் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பெறும் வண்ணம் உள்ளது.
அருள்மிகு தேவி கருமாரி அம்மனை காண வரும் பக்தர்கள் மற்றும் குலதெய்வமாக வணங்கிவரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலின் பொருட்டும் தங்களது குடும்பத்தில் நடக்கும் விசேஷ நிகழ்வான திருமண விழாவினை இத்திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடத்தி வருகிறாரகள் மேலும் தங்களது குழந்தைகள் காதணி விழா போன்ற சுபநிகழ்ச்சிகளும் தொன்றுதொட்டு இத்திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் நடத்தி பயன்பெறுகிறார்கள்
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும், ஆடி மாதம் 9ம் வாரம் ஞாயிற்றுக்கிழமையும், தை மாதம் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளும் திருத்தேர் வீதி உலா வருவது இத்திருத்தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
நாள்தோறும் இரவு 7.00 மணிக்கு அருள்மிகு தேவி கருமாரியம்மன் உற்சவர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் வெள்ளி ரதத்தில் பவனி வருவாள் . பக்தர்கள் வெள்ளிரத பவனிக்காக திருக்கோயிலின் காணிக்கை பிரிவில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்களது பிரார்த்தனைகளை தங்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
நாள்தோறும் இரவு 7.00 மணிக்கு அருள்மிகு தேவி கருமாரியம்மன் உற்சவர் திருக்கோயிலின் முதல் பிரகாரத்தில் தங்க ரதத்தில் பவனி வருவாள் . பக்தர்கள் தங்க ரத பவனிக்காக திருக்கோயிலின் காணிக்கை பிரிவில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்களது பிரார்த்தனைகளை தங்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி நிறைவேற்றிக்கொள்கிறார்கள்
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு அம்மனுக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்கள் தலைமுடியினை காணிக்கையாக செலுத்திவருகின்றனர். தலைமுடி செலுத்துதவற்கு கட்டணமில்லா சீட்டு , இத்திருக்கோயிலின் சீட்டு விற்பனை நிலையத்தில் வழங்கப்படுகிறது. தலைமுடிகாணிக்கை செலுத்தியபின் குளிப்பதற்கு வசதியாக முடிகாணிக்கை மண்டபத்தின் அருகில் கட்டணமில்லா குளியலறை பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் அம்மனை காண வருகை தரும் பக்தர்கள் வரும் வாகனங்களை திருக்கோயிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு அம்மனை காண செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணங்கள் திருக்கோயில் மூலமாக வசூலிக்கப்படுகிறது நான்குசக்கர் வாகனம் 20 ரூபாய் மூன்று சக்கர வாகனம் 15 ரூபாய் இரண்டு சக்கர வாகனம் 5 ரூபாய் மேலும், இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை பூஜை போடுவதற்கு ஏதுவாக திருக்கோயிலின் மூலம் வழிவகை செய்துதரப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகன பூஜை ரூ.10 மூன்று சக்கரவாகன பூஜை 20 நான்கு சக்கர வாகனம் ரூ.50 மற்றும் வேன் மினி பஸ் போன்ற வாகனங்கள் ரூ.100 என பூஜை போடும் வசதி திருக்கோயில் மூலம் செய்தளிக்கப்பட்டு வருகிறது.
அருள்மிகு தேவி கருமரிஅம்மனை காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் விதத்தில் இலவச பாதணிகள் பாதுகாப்பகம் மற்றும் பொருட்கள் வைப்பறை ஆகிய இரண்டு அறையினையும் கடந்த 16.08 .2018 அன்று திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது .
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பயன்படும் வண்ணம் திருக்கோயில் வளாகத்தில் மூன்று இடங்களில் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நிலையில் தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .
திருக்கோயிலின் பூஜை கழிவு பொருட்களான பூக்கள், கோசாலையிலிருந்து பெறப்படும் சாணக்கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு, திருக்கோயிலின் அன்னதான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தினை சட்டப்பேரவை அறிவிப்பின்படி மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனுக்காக தாங்கள் வேண்டிக்கொண்டவாறு பொருளாகவோ அல்லது பணமாகவோ துலாபாரத்தில் ஒருபுறம் பக்தரும் அவரின் எடையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அவரவர் வேண்டிகொண்டவாறு காணிக்கை பொருட்களை அம்மனுக்கு செலுத்தி நேர்த்திக்கடனை பூர்த்தி செய்கின்றனர்.





