Home/Temples/TN/Tiruvallur/Arulmigu Nageswaraswamy Temple, Periyanagapoondi - 631302
Heritage Templehrce

Arulmigu Nageswaraswamy Temple, Periyanagapoondi - 631302

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், பெரியநாகப்பூண்டி

🕉️ அருள்மிகு நாகேஸ்வர சுவாமி Tiruvallur, TN
Arulmigu Nageswaraswamy Temple, Periyanagapoondi - 631302 — image 1
1 / 9
Also known as:அருள்மிகு நாகவள்ளி அம்பாள் சமேத நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்

History & Architecture

Century

17th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

நாயக்கர்

Praised By

இல்லை

Agama Tradition

காமிக ஆகமம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

விருத்த விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வம் மரம்

Pooja Timings

காலசந்தி பூஜை07:00 AM to 09:00 AM IST
சாயரட்சை பூஜை05:00 PM to 06:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

நாகேஸ்வரர், நாகவள்ளி, நாகபூண்டி நாகங்கள் தொடர்புடையதால் அனைத்து சர்ப்ப தோஷங்களும் விலக்கக்கூடிய சர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலம். பாம்பென்றால் படையும் நடுங்கும். அதுபோல் ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் அது பல துன்பங்களை தரக்கூடியது. திருமணத்தடை, குழந்தையின்மை, வாரிசுகள் திடீர் மரணம், வாகன விபத்து, மாங்கல்ய தோஷம் போன்ற சிக்கல்களுக்கு நாகதோஷமே காரணம். சிலருக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது பல தலைமுறைக்கு தொடரும். பாம்பை அடித்து கொல்பவர் புத்திர தோஷத்திற்கு ஆளாவார்கள் என்று நாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஏழு கிரகங்களும், ராகு கேதுக்குள் ஒரு ஜாதகக் கட்டத்தில் சிக்கிக் கொண்டால் அது கால சர்ப்ப தோஷம் எனப்படும். இந்த பல வகையான நாகதோஷங்களையும் போக்கும் அபூர்வமான சிவன் கோயில் தான் பெரியநாகபூண்டி, அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்தது. நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை, கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு நாகவள்ளி சமேத நாகேஸ்வர சுவாமியை வந்து வணங்கி வழிபட்டு, அங்குள்ள பின்னிய நிலையில் இருக்கும் ராகு, கேது கிரகங்களுக்கு பாலாபிஷேகம் செய்து, நாகேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேற்ப்பட்ட நாகதோஷமும், சர்ப்பதோஷமும் விலகும் என்று சிவ மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

Sub Shrines

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி

நாகவள்ளி அம்மன்

அம்பாளுக்கு ஏகதல கோபுரம் அமைத்து தனி சன்னதி அமைந்துள்ளது. பைரவருக்கு ஏகதல கோபுரத்துடன் தனி சன்னதி உள்ளது.

Sculptures

சுதை சிற்பம்

கற்சிலைகள் ஆகம விதிப்படியும், திருக்கோயில் அமைப்பிற்கு ஏற்றவாறும், கலைநயம் மிகுந்த வேலைபாடுகளுடன் ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தி கற்சிலையும், அம்பாள் கருவறையில் நான்கு கரங்களுடன் பாசம், அங்குசம், அபயம், வரதம் கொண்ட நின்ற திருக்கோலத்தில் கற்சிலையும், விநாயகர் கற்சிலையும், வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் கற்சிலையும், நால்வர் கற்சிலையும், நாகர் கற்சிலையும், போக சக்தி தனி அம்மன் கற்சிலையும், பிரகாரத்தில் பஞ்ச கோஷ்டத்தில் நர்தன கணபதி, தட்சனாமூர்த்தி, மகாவிஷ்ணு, ப்ரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் கற்சிலையும், சிம்மம், பலிபீடம், பைரவர், நவகிரகங்கள், நந்தி மற்றும் பாலமுருகர் கற்சிலைகளும் நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளன. பஞ்ச உலோக சிலைகள், சந்திர சேகரர் சுவாமி, சந்திர சேகர அம்பாள், சோமாஸ்கந்தர், சோமாஸ்கந்தர் அம்பாள் சுக்ரவார அம்பாள் போன்ற சிலைகள் திருவிரா காலங்களில் திருவீதி உலோ நடத்தவும், கலை நயத்துடன் பஞ்ச உலோக சிலைகள் சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது. சுதை சிற்பங்கள் ராஜ கோபுரம், மண்டபத்திலும், சுவாமி, அம்பாள் விமானத்திலும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சிற்பங்களாக வடிவமைத்து சிறப்பாக உள்ளது.

Services

அன்னதானம்

தினமும் மதியம் 12.15 மணியளவில் 75 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் அன்னதான நன்கொடை ரூ. 3500/- நிரந்தர முதலீடு ரூ. 40,000/- (ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நாள் மட்டும்)

Facilities

குளியல் அறை வசதி

கோவிலின் இடது புறத்தில் ஆண்களுக்கு 2 குளியலறை, பெண்களுக்கு 2 குளியலறைகள் சுத்தமான முறையில் திருக்கோயில் மூலம் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.

பரிகார மண்டபம்

திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாக தோஷம், திருமண தடை திருக்கோயில் அம்பாள் சன்னதி முன்பாக அமைந்துள்ள பரிகார மண்டபத்தில் பரிகாரம் செய்யப்பட்டு வருகிறது.

திருக்குளம்

திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நீர்த்தேக்க தொட்டி சுத்தமான முறையில் திருக்கோயில் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தங்குமிட வசதி

இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தங்குவதற்கு ஏதுவாக தங்கம் விடுதி அமைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

பக்தர்களுக்காக அன்னதானக் கூடம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கல்யாண மண்டபம்

பக்தர்களுக்காக திருமண மண்டபம் கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ளது. இங்கு 300 நபர்கள் திருமணம் பார்க்கவும், உணவருந்தவும், மண விருந்து அருந்தும் இடம், மகிழுந்து நிறுத்தும் வசதி மற்றும் குளியலறை, கழிவறையுடன் ஏனைய வசதிகளுடன் திருக்கோயில் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

More Temples Nearby

View all →