அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பச்சூர்

Century
2nd நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
Agama Tradition
காமிக ஆகமம்
Vimanam Type
கஜாப்ப்ருஷ்டம் விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மூங்கில்
அம்பாள் சுவாமிக்கு பூஜை செய்த தலம். உச்ச கால பூஜை தரிசன சிறப்பு. ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீ சக்ரம் அமைந்துள்ளது மூலவர் சன்னதியில் அமைந்துள்ளது. மூலவர் தீண்டா திருமேனி சுயம்பு. விநாயகர் சபை அமைந்துள்ளது (11 விநாயகர்) சொர்ண காளி, சொர்ண பைரவர் சிறப்பு. சுவாமி, அம்பாள், வினாயகர், முருகர் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற திருத்தலம். பெருமாள், சூரிய, சந்திரன், வீரராகவ பெருமாள் ஆகியோர் வழிபட்ட தலம்.
விநாயகர் சபை, அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி, முருகர் சன்னதி நால்வர், பைரவர், வீரபத்திரர், விஷ்ணு துர்கை, நவகிரகம், சொர்ணகாளி
மங்கல தீர்த்தம் என்ற திருக்குளத்தை தன்னகத்தே கொண்ட உன்னத தலம் இதுவாகும்.
தினமும் 50 நபர்களுக்கு பகல் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்திற்கு ஒரு நாள் நான்கொடை ரூ. 1750/- நிரந்தர கட்டளை முதலீடு ரூ. 35000/- அன்னதானம் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர் பெயர் - திரு. சரவணன், கைபேசி எண். 9600767704
கோயில் வளாகத்தில் உள்ளது





