
Century
19th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வேம்பு
ராகு-கேது பரிகார பூஜையானது பிரதி செவ்வாய்கிழமை நடைபெறும்.
இத்திருக்கோயிலில் பிரதி அமாவாசை மஹா பிரத்தியங்கரா யாகம் மாலை 6.00 மணிக்கு நடத்தப்படுகிறது. அதனை த தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் தாலாட்டு மற்றும் அன்னதானம் நடைபெறும். இந்த யாகத்தில் ஆபிசார தோஷம், பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற தீய சக்திகள் விலகி இறை சக்தியின் அருள் கிடைக்கும்.
.இத்திருக்கோயில் பிரார்த்தனை ஸ்தலம் ஆகும். உடல் நோயுற்றவர்கள் தங்களின் வேண்டுதலுக்காக கண்மலர் மற்றும் உருக்கள் செலுத்துவது மற்றும் அம்மை நோயுற்றோர் இத்தலத்திற்கு வந்து நோய் நீங்கி செல்வது .இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.
உற்சவர் சன்னதி
நாககன்னி சன்னதி
எல்லையம்மன் கோவில் அம்மை தீர்த்த குளம்
இத்திருக்கோயிலில் தினசரி 6௦ நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பிரதி வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் 1௦௦ நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
நன்கொடைகள் வரப்பெறுகிறது.
இத்திருக்கோயில் உட்பிரகாரத்தில் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதியை ஏற்படுத்தும் வகையில் மணிக்கு 250 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழக்க சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அமர்ந்து படிக்கும் வண்ணம் இருக்கை வசதிகள் கொண்டது. மின் விசிறி, மின்விளக்குகள், குடி நிர் வசதிகள் கொண்டது.
பணம் அஞ்சல் மூலம் வரப்பெறும் நன்கொடைகளுக்கு குங்குமம் பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
தங்களின் வேண்டுதலின் பேரில் திருமணம் செய்துக்கொள்பவர்களுக்கு உற்சவர் மண்டபம், வசந்த மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
திருக்கோயிலின் வடக்குபக்கத்தில் 6 அறைகள் மற்றும் திருக்கோயிலின் குளத்தின் அருகாமையில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இவை அனைத்தும் தற்போது சேவார்த்திகளின் பயன்பாட்டில் உள்ளது.
திருக்கோயிலுக்குச் சொந்தமான 25 அடி கொண்ட மரத்தேர் திருக்கோயிலின் முகப்பு புறத்தின் வடக்கு பக்கத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. பிரதி ஆடி நான்காம் வெள்ளி அன்று திருத்தேர் உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருக்கோயிலின் எதிர்புறத்தில் நேராக அமைந்துள்ளது. ஆடி ஐந்தாம் வெள்ளி மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
-திருக்கோயில் வெளிபுறத்தில் மொட்டை மண்டபம் அமைந்துள்ளது. தற்போது சேவார்த்திகளின் பயன்பாட்டில் உள்ளது.
ஐந்து ஆண்கள் குளியலறை மற்றும் ஐந்து பெண்கள் குளியலறை தனித்தனியாக உள்ளது.
திருக்கோயிலின் நாக சன்னதி அருகாமையில் அமைந்துள்ள தியான மண்டபத்தின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
திருக்கோயிலின் குளத்தின் அருகாமையில் ஆண்களுக்கு 5 கழிவறை மற்றும் பெண்களுக்கு 5 கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலின் உட்புறத்தில் அலுவலகத்தின் அருகில் உள்ளது. தேவைப்படும் சேவார்த்திகள் திருக்கோயில் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருக்கோயிலின் உட்புறத்தில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
திருக்கோயில் அலுவலகத்தின் அருகில் துலாபாரம் அமையப்பெற்று சேவார்த்திகளின் பயன்பாட்டில் உள்ளது.




