
Century
19th நூற்றாண்டு
Praised By
இல்லை
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
3 நிலை சுகந்த விமானம்
கோபுரத்து உச்சியினின்றும் தறிவி விழுந்த மைந்தனுக்கு உயிர் வழங்கிய தெய்வீக திருத்தலமாகும்.
மலையத்து அரசன் தவம் செய்து பார்வதி அம்பிகை பிறத்தல். சிவபெருமாள் மன்மதனை தகனம் செய்து பார்வதி தேவியை திருமணம் செய்தல், பார்வதி திருமணத்திற்காக அகத்தியர் பொதியகை மலையில் அமர்ந்து பூமியை சமன்செய்தல். சிவபெருமானிடம் ஆறு அருட்பெரும ஜோதி தோன்றி முருகன் அவதாரம் எடுத்தல் சரவண பொய்கையில் கார்த்திகை பெண்களிடம் முருகள் வளருதல். பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக சேர்த்து ஆறுமுகன் என்று பெயர் வைத்தல். முருகப்பெருமான் ஓம் என்னும் பிரணவத்திற்கு அர்த்தம் கேட்டு பிரம்மணை சிலையில் அடைத்தல், அதன் பின்பு முருகன் சிவபெருமானுக்கு பிரணவ உபதேசம் செய்தல். முருகப்பெருமான் பார்வதி அம்மையாரிடம் வேல் வாங்கி தாரகாசூரனை வதம் செய்து சிவபெருமானை வழிபடுதல். சூரபன்மன் பிறந்து, வளர்ந்து தேவர்களை இம்சை செய்ததை பார்த்த முருகப்பெருமான் வீரவாகு தேவர் தூது சென்று சூரபன்மனை எச்சரித்தார். வீரவாகு தேவர் யுத்தம் புரிந்து பானுகோபன் மற்றும் அக்கினிமுகனை வதம் செய்தார்.முருகப்பெருமான் சூரபன்மனை எதிர்த்து போரிட்டு சிங்கமுகசூரனை வதம் செய்து சூரப்பனுடன் யுத்தம் செய்ததால் சூரபன்மன் சக்கரவாகபச்சியாக உருவம் எடுத்தல். இந்திரன் மயிலாகமாறி முருகனை தாங்கி முருகன் விஷ்வருபம் எடுத்து பத்மாசூரனுக்கு காட்சியளித்தல். சூரபத்மன் மாமரமாக தோன்றியதால் வேல் ஆயுதத்தால் பிளந்து சூரனுக்கு ஞான அளித்தால் சூரபன்மன் வேலும், மயிலுமாக மாறி முருகனின் அருள் பெறுதல். ஐராவத்தின் மீது சென்று தெய்வானை அம்மையாருடன் திருமணம் நடைபெறுதல்.
திருக்கோயிலின் நலன் கருதி பக்தர்கள் நன்கொடை வழங்குகிறார்கள்.
தினசரி 25- நபர்களுக்கு அன்னதானம் 12.00 மணியளவில் நடைபெறுகிறது.
-





