அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை

Century
10th நூற்றாண்டு
Praised By
தி௫ஞானசம்பந்தா்
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இத்திருக்கோயில் தல விருட்சம் வில்வம்
வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்ரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் எவ்வகை வக்கிரதோஷம் இருந்தாலும் நிவர்த்தியும், திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்றவற்றை செய்து பயன் பெறுகிறார்கள். தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காண நினைத்த காரியங்கள் முடிவடைகின்றன.
சந்திரமௌலீஸ்வரர்
இத்திருக்கோயில் குண்டலி மாமுனிவர் சன்னதி என்று அழைக்கப்பட்டு வரப்படுகிறது. இச்சன்னதி செம்பியன்மாதேவியால் கட்டப்பட்ட சிவன் சன்னதி என கல்வெட்டில் உள்ளது.
இத்திருக்கோயில் வரதராஜபெருமாள் சன்னதி அமைந்துள்ளது.வரதராஜப்பெருமாள் பிரயோகச்சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோயில் கிளிகோபுரம் அருகில் வடிவாம்பிகை சன்னதி அமைந்துள்ளது
இத்திருக்கோயில் வக்ரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது
சூரிய புஷ்கரணி திருக்குளத்தில், தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1ஆம் தேதி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
-
இத்திருக்கோயிலில் கடந்த 23.03.2002-ஆம் தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள் தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 100 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு ரூ.3,500/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம்.அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80ஜி உண்டு.
பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
இத்திருக்கோயிலின் பக்தர்களின் வசதிக்காக வடக்கு பக்கத்தில் ஆண்கள் பெண்கள் கழிவறைகள் 8 மற்றும் தெற்கு பக்கத்தில் ஆண்கள் பெண்கள் 8 கழிவறைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் பக்தர்கள் வசதிக்காக அன்னதான கூடம், அலுவலகம் அருகில், மடப்பள்ளி அருகில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமி சன்னதி சுற்றுப் பிரகாரம் சுற்றி 5 இடங்களில் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
நந்தவனம் அருகில் பக்தர்கள் தங்கும் விடுதி புதியதாக கட்டப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. 10 அறைகள் உள்ளன. ஒரு அறைக்கு ரூ.250/- கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஒரு அறையில் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் சக்கர நாற்காலி சேவை வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயில் அலுவலகம் அருகில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கோவில் வரலாறு, தொன்மை, சிறப்புகள் குறித்த புத்தகங்கள் உள்ளன.
இத்திருக்கோயிலின் பக்தர்களின் வசதிக்காக வடக்கு பக்கத்தில் ஆண்கள் பெண்கள் குளியல் அறை 8 மற்றும் தெற்கு பக்கத்தில் ஆண்கள் பெண்கள் 8 குளியல் அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.





