Home/Temples/TN/Virudhunagar/Arulmigu Nachiyar (Aandal) Temple, Srivilliputhur - 626125
Heritage Templehrce

Arulmigu Nachiyar (Aandal) Temple, Srivilliputhur - 626125

அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர்

🕉️ ரெங்கமன்னார் Virudhunagar, TN ஆண்டாள்
Arulmigu Nachiyar (Aandal) Temple, Srivilliputhur - 626125 — image 1
1 / 6
Also known as:நாச்சியார் கோயில்

History & Architecture

Century

1st நூற்றாண்டு

Dynasty / Ruling Period

பாண்டியன்

Praised By

வைணவ ஆழ்வார்கள்

Poet Saint

ஆண்டாள்

Agama Tradition

வைகாணசம்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

தங்க விமானம்

Sacred Tree (Sthalavriksha)

ஆலமரம்

Pooja Timings

விஸ்வரூப பூஜை (பொதுவான)06:30 AM to 06:30 AM IST
காலசந்தி பூஜை (பொதுவான)08:30 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை (பொதுவான)12:00 PM IST
சாயரட்சை பூஜை (பொதுவான)06:00 PM to 06:15 PM IST
விளா பூஜை07:00 PM to 10:00 PM IST
அரவணை (poduvana)09:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

கருவறைக்கு முன்னால் உள்ள அர்த்த மண்டபத்தில், `கனக சமாரா பூபாலனம்` என்னும் சிம்மாசனம் உள்ளது. அந்த சிம்மாசனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தில், வெள்ளிக்கிழமை குறட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊஞ்சல் சேவை இங்கு செய்யப்படுகிறது. திருப்பாவை 18 வது பாசுரத்தில் மாதவி பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் என்று பாடியபடி மாதவி பந்தல் கேரளா கூரை வடிவமைப்பில் அமையப்பெற்றுள்ளது. காண்போரை வியக்க வைப்பதாக உள்ளது. உள் பிரகாரத்தின் சுவர்களில் 108 திவ்ய தேசங்களின் தெய்வ ஓவியங்கள் கான்போரால் போற்றப்படுகின்றன. கருவறைக்கு மேல் உள்ள திருப்பாவை விமானத்தில் 30 பாசுரங்களை விளக்கும் முப்பது சிற்பங்கள் அடங்கிய தங்க விமானம் உள்ளது. துவஜஸ்தம்பம் (கொடிமரம்) ஒட்டிய இடத்தில், வேணுகோபாலன், ராமன், லட்சுமணன், சரஸ்வதி, மாயன், அயோமுகி, மன்மதன், மோகினி, ரதி, சக்தி, அர்ஜுனன், கண்ணன், வீரபத்திரர் போன்ற சிலைகள் உள்ளன.அவை ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அவை அந்தக் காலத்தின் கட்டடக்கலை சிறப்பை அம்பலப்படுத்துகின்றன. வடக்கு பக்கத்தில் உள்ள கண்ணாடிமாளிகை (ஏகாதசி மண்டபம்) மிகவும் அழகாக உள்ளது. பழைய தேரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட அழகிய மர வேலைப்பாடுகளுடன்கூடிய சிற்பங்கள் அகற்றப்பட்டு அவை இப்போது `கோபால விலாசம்` மண்டபத்தினை அலங்கரிக்கின்றன. அந்த சிற்பங்களில் ராமாயணம், மகாபாரதத்தின் அத்தியாயங்களைக் குறிக்கின்றன, ஸ்ரீ ஆண்டாளுக்கு தினமும் மாலையில் பச்சை இலைகளினாலும் பூக்களினாலும் கட்டப்பட்ட கிளியானது சாற்றப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏந்திய கிளியை இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபட்டால் திருமணம் ஆகாதவருக்கு விரைவில் திருமணம் கூடிவரும் மகப்பேறு இல்லாதவர்கள் மக்கட்செல்வம் பெற்று மகிழ்வர். மேலும் கிளி இல்லத்தில் இருந்தாலே பல துன்பங்களும் நீங்கி அனைத்து நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.

Temple Tank

திருமுக்குளம்

இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் சுமார் 12ஏக்கர் பரப்பளவில் இத்திருக்கோயிலிருந்து சுமார் 1/2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கே அமைந்துள்ளது. திருமுக்குளம் முன்பு பள்ளிகொண்ட பரமன் காலநேமி என்கிற அசுரனை வதம் பண்ணுவதற்கு இங்கு எழுந்தருளினார். தன்னுடைய சுதர்சனச் சக்கரத்தாலே அவனை அழித்துப் பின் அந்த சக்கரத்தைத் தூய்மை செய்ய, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வ நதிகளை மனத்தினாலே நினைக்கவே, அம்மூன்று நதிகளும் ஒன்றாக வந்து சுதர்சனத்தை நீராட்டியது. அதுவே தடாகமாகி மூன்று நதிகள் கொண்ட திருமுக்குளமாக புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. இக்குளத்தில் அரசமர படித்துரையை அடுத்து, வடக்கு நோக்கியவாறு சுதர்சனப் பெருமாள் சிலாரூபமாக எழுந்தருளியுள்ளார். குளத்தில் நீர் மிகக் குறைவாக உள்ள காலங்களில் சக்கரத்தாழ்வாரை தரிசிக்கலாம்.

Wall Paintings

மூலிகை ஓவியம்

திருக்கோயில் கல்யாண மண்டபத்தின் மேல்தட்டில் ராமாயணம் தொடர்பான மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

Sculptures

கோதண்டராமன்

திருக்கோயில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கொடி மரம் முன்புறம் அமைந்துள்ளது.

குகன்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

அகோர வீரபத்திரர்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

கர்ணன்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

சாத்யகி

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

ஊத்துமுக வீரபத்திரர்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

அர்ஜுனன்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

வேணுகோபாலன்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

மயன்

திருக்கோயில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கொடி மரம் முன்புறம் அமைந்துள்ளது.

நடனமாது

திருக்கோயில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கொடி மரம் முன்புறம் அமைந்துள்ளது.

ஜெலந்தர்

திருக்கோயில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கொடி மரம் முன்புறம் அமைந்துள்ளது.

மோகினி

திருக்கோயில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கொடி மரம் முன்புறம் அமைந்துள்ளது.

ரதி

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

மன்மதன்

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

சக்தி

திருக்கோயிலின் ஏகாதசி (கண்ணாடி மண்டபம்) மண்டபம் முன்புறம் அமைந்துள்ளது.

கலைவாணி

திருக்கோயில் ஸ்ரீ ஆண்டாள் சன்னதி கொடி மரம் முன்புறம் அமைந்துள்ளது.

Services

நன்கொடை

இத்திருக்கோயில் 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று பக்தர்கள் தங்கள் பிராத்தனைக்கான காணிக்கையினை இந்த இணையதளத்தில் செலுத்தலாம்

அன்னதானம்

தினந்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது

Facilities

சக்கர நாற்காலி

திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக மூன்று சக்கர நாற்காலிகள் திருக்கோயில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டுள்ளது.

குளியல் அறை வசதி

திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவர்த்திகளுக்கு திருக்கோயிலை அருகில் பாத்ரூம் வசதி செய்யப்பட்டு உள்ளது.

பொருட்கள் பாதுகாக்கும் அறை

திருக்கோயிலுக்கு வருகைதரும் சேவர்த்திகள் தாங்கள் கொண்டுவரும் பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு பொருள்கள் பாதுகாப்பு அறை அமைக்கபட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம்

சேவர்த்திகள் பயன்பாட்டிற்கு திருக்கோயில் முன்புறம் இலவசமாக காலணிகள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

சேவர்த்திகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →