அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சிவகாசி, சிவகாசி நகர்

Century
15th - 16th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
ஒவ்வொரு தமிழ் மாத கடைசி திங்கள்கிழமை விஸ்வநாதருக்கும் மாதக் கடைசி வெள்ளியில் விசாலாட்சி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் 63 நாயன்மார்கள் சன்னதி பிரகாரத்தின் இடது பக்கம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் கன்னிமூலகணபதி கன்னிமூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி சன்னதி மூலஸ்தானத்துக்கு பின் புறத்தில் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் லிங்கோத்பவர் சன்னதி மூலஸ்தானத்துக்கு பின் புறத்தில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை சன்னதி வாய்வு மூலையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் மகாலட்சுமி சன்னதி மூலஸ்தானத்தின் பக்கவாட்டில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்நடராஜர்,சிவகாமியம்மாள்,காரைக்காலம்மையார் சன்னதிமூலஸ்தானத்தின் இடது புறத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் பைரவர் சன்னதிமூலஸ்தானத்தின் இடது புறத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்வீரபுத்திரர் சன்னதிமூலஸ்தானத்தின் இடது புறத்தில்மேற்குநோக்கி அமைந்துள்ளது .
இத்திருக்கோயிலில் காசிலிங்கம் சன்னதி மூலஸ்தானத்தின் பின் புறத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் உற்சவர் சன்னதி மூலஸ்தானத்தின் பக்க வாட்டில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்சூரியன் சன்னதி பிரகாரத்தின் நுழைவு வாயிலில் இடதுபக்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் துர்க்கை சன்னதி மூலஸ்தானத்துக்கு பின் புறத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் சண்டீகேஸ்வரர் சன்னதி மூலஸ்தானத்துக்கு பின் புறத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்நவகிரகங்கள்சன்னதிமூலஸ்தானத்தின்இடதுபுறத்தில்அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் அய்யப்பன் சன்னதி மூலஸ்தானத்துக்கு பின் புறத்தில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்கல்யாணகணபதிசன்னதி பிரகார நுழைவுவாயிலில் இடது பக்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்பழனியாண்டவர் சன்னதி பிரகாரத்தின் நுழைவுவாயிலில் வலதுபக்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்சந்திரன் சன்னதி பிரகாரத்தின்நுழைவு வாயிலில் வலதுபக்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில்மாணிக்கவாசகர் சன்னதி பிரகாரத்தின் தெற்குபக்கம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் நுழைவுவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோயிலின் ஈசானி மூலையில் திருக்குளம் அமைந்துள்ளது. திருக்குளத்தை சுற்றி கம்பி கேட் பொருத்தப்பட்டுள்ளது. படிக்கட்டு வசதி உள்ளது.தீர்த்தவாரி காலங்களில் மட்டும் திருக்குளம் திறக்கப்படும். மற்ற காலங்களில் திறக்கப்படாது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது .
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ஆண்டு முழுவதும் இக்கோயிலில் தினசரி பக்தர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்ததும் 100 நபர்களுக்கு அன்னதானம் சாதம் சாம்பார், ரசம் மோர், பொரியல், ஊறுகாயுடன் உணவு அளிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் அப்பளம், பாயாசம் வழங்கப்படுகிறது. இதற்காக அன்னதானம் அளிக்க விரும்பும் பக்தர்களிடம் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூபாய் 2500 வசூலிக்கப்படுகிறது அல்லது நிரந்தர கட்டளையாக ரூபாய்.30000க்கான நிலையான வைப்பு தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் மற்றும் அதன் வட்டி அன்னதான நன்கொடையாக எடுத்துக்கொள்ளப்படும்.கட்டளைதாரர் அவர் விரும்பும் நாளில் வருடத்தில் ஒரு முறை அன்னதானம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. அன்னதான நன்கொடைக்கு வருமான வரி 80ஜி விலக்கு உண்டு
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தெற்கு வாசல் முன்புறம் இலவசமாக காலணிகளை பாதுகாக்கும்வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருக்குளம் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ 9ம் நாளில் மரத்தேர் இழுக்கப்படுகிறது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிராத்தனைகளை நிறைவேற்ற தங்கத்தேர் வசதி செய்யப்பட்டுள்ளது.





