
Century
18th நூற்றாண்டு
இத்திருக்கோயிலானது ஒரு பிராத்தனை ஸ்தலம் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இங்கு ஐப்பசி மாத பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழாவானது அம்மனிடம் கௌலி(பல்லி) மூலம் உத்தரவு கேட்ட பின்பே நடத்தப்படும். உத்தரவு கொடுக்கவில்லை எனில் அந்த வருடம் திருவிழா நடைபெறாது. திருவிழா அம்மன் தனியாக சுதையினால் வடிவமைக்கப்படுகிறது. இந்த அம்மன் கோவிலுக்குள் வருவதில்லை. பிறந்த மண்டபத்திலிருந்து கண் திறப்பு மண்டபம் எடுத்துச் செல்லும் வரை கோயிலின் பிரதான வாயில் மூடப்படுகிறது, பொது மக்களும் அதைப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. திருவிழாக் காலங்களில் வேண்டுதல்கள் வைக்கும் பக்தர்கள் மண் பொம்மைகள் வாங்கி அதை வடக்குப் பிரகாரத்தில் உள்ள காவல் தெய்வம் பூதராணியின் முன்பு உடைப்பார்கள். இது மற்ற கோவில்களில் இல்லாத தனிச்சிறப்பாகும். இது மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டுவோர், திருமணம் ஆகாதோர் இத்திருக்கோவிலுக்கு வந்து சென்ற பின்பு வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை திருவிழாவின்போது செலுத்துகின்றனர். தினசரி பூஜைக்குப் பின்பு தீர்த்தம் கொடுக்கும் வழக்கும் அம்மன் சன்னதிகளில் இங்கு தான் உள்ளது.
அ/மி முத்தாலம்மன்
இச்சன்னதியானது கிழக்கு நோக்கி சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இச்சன்னதியில் கார்த்திகை சோம வாரத்தில் சங்காபிஷேகமும், ஐப்பசி சோம வாரத்தில் அன்னாபிஷேகமும் நடைபெறும். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இச்சன்னதியானது சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சியானது சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினங்களில் சனி மற்றும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இச்சன்னதியானது வடக்கு நோக்கி சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி வழிபடுவர். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இச்சன்னதியானது கிழக்கு நோக்கி சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. அட்சய திருதியன்று மகாலெட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இச்சன்னதியானது கிழக்கு நோக்கி சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இங்கு தை பூசம், திருக்கல்யாணம் (பங்குனி உத்திரத்தன்று), வளர்பிறை சஷ்டி, மாதாந்திர கார்த்திகை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அன்றைய தினங்களில் சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இச்சன்னதியானது கிழக்கு நோக்கி சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இங்கு மாதம் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதோஷ நாட்களில் சுரலிங்கேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சிவராத்திரி அன்று நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இச்சன்னதியானது சுற்றுப்பிரகாரத்தில் முதல் சன்னதியாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையும் நடைபெறும். சங்கடகர சதுர்த்தி அன்றும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும். தினந்தோறும் 2 கால பூஜை நடைபெறும்.
இம்மண்டபத்தில் யாழியின் உருவங்கள் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் 15.09.2015 முதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விஷேஷ நாட்களில் 50 நபர்களுக்கும் மற்ற கிழமைகளில் 25 நபர்களுக்கும் பகல் 12.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதான நன்கொடை வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு விதி எண் 80(ஜி)-ன் கீழ் உண்டு.
திருக்கோயில் வெளிப்புறம் ,அன்னதானக்கூடம் அருகில்
இத்திருக்கோயிலில் ஒரு குளியலறை அன்னதானக்கூடத்தின் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மடப்பள்ளிக்கு வெளியே வழங்கப்படுகிறது.





