
Century
14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பாண்டியன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
அஷ்டாங்க வைமானம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
இது ஒரு பிராத்தனை திருக்கோயில், திருமணம் வரம், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, கல்வி ஞானம் ஏற்பட, உடல் ஆராக்கியம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு இத்திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த கோயிலில் காணப்படும் சிற்பங்களில் தசைகள், நரம்புகள், கண்ணிமைகள் போன்றவை நயநுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் இக்கோயிவிலின் சிறப்பு அம்சமாகும்.
இராஜகோபுர வாசலில் நுழைந்தவுடன் வலது புறத்தில் தலவிருட்சமாக வில்வ மரம் அதனை அடுத்து நாம் காண்பது விச்வக்சேனர் சன்னதி. இவர் திருமாலின் படைகளுக்கு தலைவர். இவரை சேனாதிபதி ஆழ்வார் என்றும், தமிழில் சேனை முதலியார் என்றும் அழைப்பர்.சைவர்கள் விநாயகரை வணங்கிய பின்புதான் எந்த செயலையும் தொடங்குவது போல், வைணவர்கள் விச்வக்சேனரை முதலில் வணங்கி நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம். இவர் அமர்ந்த திருக்கோலத்தில் இரு மேற்கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தியும், வலது கீழ் கரம் அபயஹஸ்த முத்திரையுடனும், இடது கரம் கதை ஏந்தியும் காட்சியளிக்கிறார்.
திருக்கோயிலின் பிரகாரத்தில் தென்புறத்தில் இந்த சன்னதி அமைந்துள்ளது. மகாலெட்சுமியே செளந்தரவல்லி தாயாராக நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்கள் ௮பய, வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறார். செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீ மஹாலெட்சுமியை மனதார வேண்டுபவர்களுக்கு அருளும், பொருளும் தந்தருள்வார். கருவறையின் முன், மஹாலெட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி, பதுமநிதி தங்கள் பத்தினிகளுடன் காட்சியளிக்கின்றனர். குபேரனின் இரு பக்கத்திலும் இவர்கள் எப்போதும் வீற்றிருப்பார்கள். வலது புறம் சங்கநிதி தனது இடது கையில் வலம்புரி சங்கும், வலது கையில் வர முத்திரையுடன், தன் பத்தினியுடன் அருள்புரிகிறார். இடதுபுறம் பதுமநிதி, தன் வலதுகையில் பத்மத்துடனும்( தாமரை) இடது கை வரமுத்திரையுடனும் தன் பத்தினியுடன் அருள்பாலிக்கிறார். இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும்
திருக்கோயிலின் பிரகாரத்தில் வடமேற்கில் இந்த சன்னதி உள்ளது. ஆண்டாள் மூலவர், உற்சவர் என்ற நிலையில் காட்சியளிக்கிறார். தனி விமானம் இச்சன்னதிக்கு உண்டு. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமாெழி ஆகிய இரு பிரபந்தங்களைப் பாடியுள்ளார். சூடிக்காெடுத்த நாச்சியார், கோதை என்று அழைக்கப்படும் ஆண்டாள் மீது மிகுந்த பக்தி காெண்ட விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் வைணவத் தலங்களில் ஆண்டாள் சன்னதியை ஏற்படுத்தியதாக வரலாற்றாய்வாளர் கூறுவர்.2 ஆண்டாளின் உற்சவர் சிலை ஒவ்வாெரு வியாழக்கிழமையும் அரங்க மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் முக்கிய இடம் பெறுகிறது. ஆண்டாள் சன்னதியின் வெளிப்புறச் சுவர்களில் தசாவதார சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இருபது கற்தூண்களைக் கொண்ட பெரும் மண்டபம் மூலவருக்கு எதிரே விசாலமாக உள்ளது. .
விஷ்ணுவின் கரங்களில் உள்ள ஆயுதங்களில் சங்கும், சக்கரமும் முதன்மையானவை முக்கியமானவை. சக்கரத்தை வடமொழியில் சுதர்சனம் என்றும், தமிழில் சக்கரத்தாழ்வார் என்றும் கூறுவர். விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரம் எதிரிகளை அழிக்கவல்லது. சிற்பக்கலையில் இதனை வட்ட வளையத்திற்குள் நிற்கும் மனித உருவம் தன் கரங்களில் பல்வேறு ஆயுதங்களைத் தாங்கி நிற்பதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. சிற்ப சாஸ்திரம், சக்கரத்தாழ்வாரை அக்னி பிழம்பாக, பதினாறு கரங்களில் பயங்கர ஆயுதங்களைத் தாங்கி, வீறு கொண்டு எழும் நிலையில் இருப்பதாகக் கூறுகிறது. சிற்ப சாஸ்திர இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக இச்சிற்பம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெருமாள் இடது காலை மடித்து, திருமகளை மடியில் அமர்த்தியபடி காட்சியளிக்கிறார். நான்கு கரங்கள், சங்கு சக்கரத்துடன் அபய ஹஸ்தராக காட்சியளிக்கிறார். நரசிம்மரையும், தாயாரையும் சுவாதி நட்சத்திரம், பிரதோஷம், பெளா்ணமி நாட்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம், கடன் தொல்லை நீங்கி செல்வ வளம் பெறுவர்.
சௌந்தர்ராஜ பெருமாள்
திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரத்தில் ஆழ்வார்களின் தலைவராகத் திகழும் நம்மாழ்வாருக்கு தனிச் சன்னதி உள்ளது. நம்மாழ்வாரின் பாசுரங்கள் வேதத்தின் சிகரம் பாசுரங்கள் அனைத்தும் தத்துவப் பெட்டகங்கள். இவர் துறவியாக வாழ்ந்தாலும், மக்களை விட்டு விலகி வாழாமல், மக்களை இறைவன்பால் உய்விப்பதற்கு முன் நின்றவர்.3 திருவரங்கனே தன் அன்பன் சடகோபனை நம்மாழ்வார் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. பல ஆழ்வார்கள் இயற்றிய திவ்யப்பிரபந்தகள் வழக்கில் இல்லாமல் போனதாகவும், திரு நாதமுனிகள் தம் தவ பயனால் நம்மாழ்வாரை யோகநிலையில் தொடர்பு கொண்டு பாசுரங்களுக்குப் புத்துயிர் அளித்து, பெருமாள் கோயில்களில் இசைக்க வைத்ததாகவும் கூறுவர்.
வேணுகோபாலன், பாமா, ருக்மணி சமேதராக வலது மேற்கரத்தில் சுதர்சன சக்கரத்தையும், இடது மேற்கரத்தில் பாஞ்ச ஜன்யம் எனும் சங்கையும் தாங்கி, முன் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்தி, வலது திருவடியை மடித்து எழிலுடன் காட்சியளிக்கிறார். எட்டு கரங்களை உடையவர். ரோகிணி நட்சத்திரம் அன்று நடைபெறும் பூஜையில் குழந்தைப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
அஞ்சனை மைந்தனான ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கிறார். தொழில், கல்வியில் வெற்றி கிடைக்கவும், சனி தோஷம் நீங்கவும், செவ்வாய், சனிக்கிழமை மற்றும் மூலநட்சத்திரம் வரும் நாட்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.
மருத்துவ கடவுளாகப் போற்றப்படும் தன்வந்திரி, மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறார். இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்பர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இவ்வுலகில் எத்தனைப் பேறுகள் கிடைத்தாலும், அவற்றை அனுபவிக்க நல்ல உடல் ஆரோக்கியம் அவசியம். நாம் ஆரோக்கியமாக வாழ வணங்க வேண்டிய கடவுள் என்று புராணங்கள் போற்றுவது தன்வந்திரியைத்தான். அமாவாசை நாள் அன்று மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடைப்பெறுகிறது. அவருக்குரிய மந்திரத்தை கூறி வழிபட்டால் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம். இந்தச் சிலை சமீப காலத்தில் தான் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.
இவரை க்ஷேத்திர பாலகர் என்றும் அழைப்பர். க்ஷேத்திரம் என்றால் ஆலயம், பாலகர் என்றால் காவலன் என்றும் பொருள்: ஆலயத்தைக் காப்பவர் வரும் பக்தர்களையும் காத்தருள்வார். இத்திருதலத்தில் இவர் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று கண்கைளயும். நான்கு கரங்களையும் உடையவர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் இவர், சாந்தமான தோற்றத்தை உடையவர். ஒவ்வாெரு ஞாயிற்றுக்கிழமையிலும் இராகு காலங்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. ஒவ்வாெரு மாதமும் தேய்பிறை அஷ்டமியிலும் அபிஷேக ஆராதனைகள் விஷேசமாக நடைபெறுகிறது. அந்த நாட்களில் அண்டை மாவட்டங்களிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருநீறு அபிஷேகம் செய்து,செஞ்சந்தனம் திலகமிட்டு. செவ்வரளி, செந்தாமரை பூவால் அர்ச்சனைச் செய்வது சிறப்புடையதாகும் இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெறவும், பொருளாதார சிக்கலால் ஏற்படும் தடைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சனீஸ்வர பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கவும், வாழ்வில் நலம் பெறவும் பிரார்த்தனைச் செய்து கொள்ளலாம்.
வடக்குநோக்கி எழுந்தருளியுள்ள இரட்டைவிநாயகர்,திருவண்ணாமலைக்கு பிறகு, இங்குதான் உள்ளதென்று கூறுகின்றனர். ஒரு சிலை ஆனந்த விநாயகர் என்றும், மற்றொன்று ௮வரே பிடித்து வைத்து வழிபட்ட விக்னம் தீர்க்கும் விநாயகர் என்றும், நாமம் தரித்து இருப்பதால் தும்பிக்கை ஆழ்வார் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆலயத்தின் தெற்கு பாகத்தில் அமைந்துள்ளது
இத்திருக்குளத்தின் பெயர் சக்கரை தீர்த்தம். இக்குளம் திருக்கோயில் சுற்றுச்சுவர் உள்ளே உள்ளது. இந்த குளத்தில் ஆடி பிரமோற்சவம் தெப்பத்திருவிழா நடைபெறும்.
திருக்கோவில் வளாகத்திற்குள் திருக்குளம் அமைந்துள்ளது இத்திருக்குளத்தின் ஆடி மாத தெப்ப உற்சவம் இத்திருக்கோவிலில் மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த தெப்பத்தில் உற்சவம் எதுவும்நடைபெறுவது இல்லை
ஸ்ரீகார்த்தவீர்ய அர்ஜுனர் இரண்டு கைகளில் வாளைத்தாங்கியபடி உள்ள அற்புதக்காட்சி
ஸ்ரீமன்மதன் தேரின் மீது கரும்பு வில்லுடன் நின்ற கோலத்தில் காட்சி
ஸ்ரீஹிரண்யஸம்ஹாரம் ஹிரண்யஹசிபுவை வதம் செய்யும் காட்சி
ஸ்ரீமஹாவிஷ்ணு கருடவாகனத்தில் அமர்ந்தபடி எழில் மிகு காட்சி
ஸ்ரீஹிரண்யயுத்தம் ஹிரண்யஹசிபுவுடன் யுத்தம் புரியும் காட்சி
ஸ்ரீதில்லைக்காளி சிவபெருமானுக்கு சமமாக நடனம் புரியும் காட்சி
ஸ்ரீஉலகளந்தபெருமாள் மூன்று உலகங்களையும் இரண்டு அடியில் அளந்த காட்சி
ஸ்ரீஊர்த்வதாண்டவர் ஒருகாலை தூக்கி ஆனந்த நடனம் புரியும் காட்சி
ஸ்ரீராமர் அனுமார் மீது அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்
ஸ்ரீமஹாவிஷ்ணு ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுகிறார்
ஸ்ரீவேணுகோபாலன் ஒருகாலை மடக்கி வாயில் புல்லாங்குழல் உடன் காட்சி
ஸ்ரீரதி அன்பட்சி மீது அமர்ந்து கரும்பு வில்லுடன் காட்சி
ஸ்ரீஅகோரவீரபத்திரர் தட்சன் யாகத்தை அளிக்க சிவபெருமானின் சடைமுடியிலுருந்து வந்த ரூபம்
ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார்
திருக்கோயில் காலை 7.00 மணியளவில் நடைதிறக்கப்பட்டு பின் பகல் 12.00 திருக்காப்பிடப்படும். பின்பு மாலை 4.00மணியளவில் திறக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் நடை திருக்காப்பிடப்படும்.திருக்கோயிலை பற்றி அறிந்துகொள்ளவும், திருக்கோயில் கட்டணச்சீட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய.மற்றும் காணிக்கைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வளைதளம்
திருக்கோயிலுக்கு அசையா சொத்தாக 4.03ஏக்க நிலங்கள் இரண்டு சர்வே எண்களில் உள்ளது. அவை 1755ல் 2.85ஏக்கர் மற்றும் 1756ல் 1.18ஏக்கர் நிலங்கள் உள்ளன
இத்திருக்கோயிலில் தினந்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒரு நாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு ரூ.3,500/-. வருடத்தில் ஒரு நாள் அன்னதானத்திற்கு ரூ.35,000/- ஆகும்.
தினசரி குறைந்தபட்சம் 100 பக்தர்கள் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகி நது. கோவிலில் ரூபாய் 20 ஆயிரம் (ரூ 35,000) வைப்பதற்காக ஆர்வமுள்ளவர்கள், ஒரு நாளுக்கு அன்னதானம் வட்டி தொகையை ஒரு வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் ஒரு நாள் அன்னதானம் ரூ. 3,500 / - வழங்கப்படும் - தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 80 இன் கீழ் தகவல் அளிக்கப்படும்.35
திருக்கோயிலுக்கு வரும் நடக்க முடியாத பக்தர்களுக்காக
குளியலறை வசதி திருக்கோயில் பின்புறம் ஏற்படுத்தப்பட்டுள்ளது பெண்கள் குளியலறை 1 மற்றும் ஆண்கள் குளியலறை 1
திருக்கோயிலில் 4 கழிப்பறைகள் பெண்களுக்காகவும், 4கழிப்பறைகள் ஆண்களுக்காகவும் மொத்தம் 8 கழிப்பறைகள் உள்ளன
திருக்கோயிலில் உள்ள வெள்ளிரத புறப்பாடு அனைத்து நாட்களிலும் நடைபெறும். மாதம் தோறம் தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை மற்றும் திருவிழா நாட்கள் தவிர வெள்ளிரதம் புறப்பாடு நடைபெறும்
இச்சேவை திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலனிகளை பாதுகாப்பாதற்காக ஏற்படுத்தப்பட்டது
திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.





