
Sanctum Shape
சதுர வடிவம்
இத்திருக்கோயிலில் தினசரி இரண்டு கால பூஜை நடைபெற்று வருகிறது. பிரதி திங்கள், சனிக்கிழமை, பிரதோஷம், அமாவாசை ஆகிய நாட்களிலும், ஆனி திருமஞ்சனம், நாயன்மார்கள் குரு பூஜை, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவன் ராத்திரி ஆகிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உற்சவங்கள் மற்றும் வருடாந்திர திருவிழாக்கள் மற்றும் சுவாமி ஊர்வலங்கள் இத்திருக்கோயிலில்தான் நடைபெற்று வருகிறது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென அறிய வருகிறது. இத்திருக்கோயில் கொங்கு பாண்டிய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாமென தெரிய வருகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இத்திருக்கோயிலில் உள்ளது.





