
Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Praised By
அருணகிரிநாதர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடம்
Sacred Tree (Sthalavriksha)
திந்துருணி (எ) புளியமரம்
இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி பல இடங்களுக்கு சென்று வந்த சமயம் இம்மலையினை கண்டு தனது பரிவாரங்களுடன் மலைக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்தார். ஸ்ரீ அருணகிரிநாதரால் திருப்புகழில் சென்னிமலை முருகனை புகழ்ந்து 5 பாடல்கள் பாடி முருகப் பெருமானால் படிக்காசு பெற்றுள்ளார். காங்கேயம் மடவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலன்தேவ ராயன் சுவாமிகளால் ஸ்ரீ கந்தர் சஷ்டி கவத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என அழைத்து அவரது ஆணைப்படி இத்திருக்கோயிலில் ஐப்பசி மாதம் வளர்பிறை கந்தர் சஷ்டி அன்று அரங்கேற்றம் செய்துள்ளார். மூலவர் கருவறையினை சுற்றி நவக்கிரஹங்களில் 8 கிரகங்கள் அமைத்தும், மூலவர் முருகனை செவ்வாயாக பாவித்தும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலம் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும், குழந்தைபேறு வேண்டுவோர் வளர்பிறை சஷ்டி நாளில் விரதமிருந்து குழந்தைபேறு அடைவது கண்கூடு. இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இருவரும் தவக்கோலத்தில் வீற்றியுள்ளனர். முன்னொரு காலத்தில் தேவியர் இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என சகோதரிகளாக முருகனை மணம் புரிய வேண்டி தவமிருந்த சமயம் முருகப் பெருமான், தற்போது தாம் பாலகனாக உள்ளதால், பின்னொரு காலத்தில் வள்ளி, தெய்வானையாக அவதரித்து தம்மை மணமுடிப்பீர்கள் என அருளியதின்பேரில் இருவரும் தவக்கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். தேவியர் இருவரின் சன்னதிக்கு பின்புறம் 18 சித்தர்களில் ஒருவரான பின்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்கியடைந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. இவர் நாக்கு பிளவுபட்டிருந்த காரணத்தால் பிண்ணாக்குச் சித்தர் என்றும், அடிக்கடி பொய் சொல்லும் நாக்கு புண் நாக்கு என்று கூறிக் கொண்டிருந்தமையால் புண்ணாக்குச் சித்தர் என்றும் பெயருக்குக் காரணம் கூறுவர். இவர் கன்னியின் வயிற்றில் அவதரித்தார் என்றும் கூறுவர். இவர் தவமிருந்த குகை ஒன்றும் உள்ளது. இக்குகை சென்னிமலையிலிருந்து பழனி வரை செல்வதாக ஐதீகம்.
இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் திந்துருணி (புளியமரம்) ஆகும். திருமணம் நடைபெற்ற புதுமணத் தம்பதியர்கள் புளிய மரத்தின் அடியில் பச்சரிசி மாவிடித்து வள்ளி, தெய்வானை அம்மனுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்மரத்தில் சந்தான கரணி என்னும் மூலிகை உள்ளதாக நம்பப்படுகிறது.
தேவியர் இருவரும் தனி சந்நிதியிலும் வீற்றிருக்கிறார்கள். மூலவரின் சந்நிதிக்குப் பின்புறம் படிக்கட்டுகள் வழியே மேலே சென்றால், வள்ளி, தெய்வானை இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற திருப்பெயர்களுடன், முந்தைய அவதாரத்தில் திருமாள் மகள்களாக பிறந்து சென்னிமலையாண்டவனை மணமுடிக்க வேண்டி, தவம் செய்து, இறைவனை அடைந்து தனி சந்நிதியில் அருள்பாலிப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சி. இருவரின் திருமேனிகளும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைந்திருப்பதும் தனிச் சிறப்பே.
மூலவர் சன்னதிக்கு வடக்கு பக்கம் அமைந்துள்ளது
-
18 சித்தர்களுள் ஒருவரான பிண்ணாக்கு சித்தர் வாழ்ந்து முக்தியடைந்த திருத்தலம் இதுவென்றும், இங்குள்ள குகை ஒன்றில் அமர்ந்துகொண்டு, நாக்கினை பின்பக்கமாக மடித்து அருள்வாக்கு அளித்தமையால் இத்தகைய பெயர் பெற்றார் என்றும், நவக்கிரகங்களில் சுக்கிரனை பிரதிபலிக்கும் இவரை, வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டால், சுக்கிர தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.
இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்கள் பயனடையும் வகையில் அன்னதானம் 15.08.2002 முதல் தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தினசரி மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை முடிவுற்ற பின்னர் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு உணவருந்து டேபிள்,சேர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. சமையல் செய்வதற்கு எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருக்கோயில் முன்பதிவு இ - சேவைகள் பொது நன்கொடை கட்டண சேவைகள் வேங்கைமரத் தேர் உலா கட்டணம்
அஷ்டோத்திர அர்ச்சனை -ரூ. 5.00 திரிசதை அர்ச்சனை -ரூ.50.00 நிவேத்ய தேங்காய்- ரூ.1.00 சிறப்பு அனுமதி (விசேட நாட்களில்) - ரூ.25.00 சிறப்பு அனுமதி -ரூ.50.00 சிறப்பு அனுமதி -ரூ.10.00 சிறப்பு அபிஷேகம் -ரூ. 50.00 சிரசுப்பூ-ரூ.25.00 வாகன பூஜை (இரு சக்கரம்) - ரூ.20.00 வாகன பூஜை (நான்கு சக்கரம்) -ரூ. 50.00 சகஸ்ரநாம அர்ச்சனை - ரூ. 25.00 பால் / தயிர் அபிஷேகம் (தனித்தனி) - ரூ. 25.00 விபூதி அலங்காரம்- ரூ. 25.00 திருமணம் - ரூ. 1000.00 வேங்கை மர ரதம் உலா - ரூ. 1000.00 காதுகுத்துதல் - ரூ. 50.00 திருமண புகைப்படம் எடுத்தல்- ரூ. 200.00 திருமண வீடியோ எடுத்தல்- ரூ. 500.00 ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை- ரூ. 300.00 திருமாங்கல்யம் மாற்றுத்தாலி மாற்றம்- ரூ. 300.00 ஸ்தல வரலாறு - ரூ. 20.00 திருமண விண்ணப்ப படிவம்- ரூ. 50.00 பேருந்து காணிக்கை- ரூ. 10.00 மோட்டார் சைக்கிள் - ரூ. 10.00 கார் நடை சீட்டு- ரூ. 20.00
ஸ்ரீ முருகப் பெருமான் வேங்கை மரமாக வந்து வள்ளியை மணம்புரிந்த சிறப்பும், மூலிகை குணம் மிக்க சிறப்பும், திருக்கோயில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் சிறப்பும் கொண்ட வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட மரத்தேர் உலா பக்தர்களால் ரூ.1000/- கட்டணம் செலுத்தி தினசரி உலா நடத்தி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் நினைத்த காரியம் கைகூடும்.
இத்திருக்கோயில் இராஜகோபுரத்தின் அருகில் உள்ள இளைப்பாறும் மண்டபத்தில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேற்படி நுலகத்தில் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள் பக்தர்கள் வாசிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 2 சக்கர நாற்காலிகள் உள்ளன. இவர்கள் நுழைவு வாயிலிருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயில் மலைக்கோயிலாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலைக்கோயிலுக்கு எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்ய 40 இருக்கைகள் கொண்ட 2 பேருந்துகள் கடந்த 15.01.1985 முதல் பக்தர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்குச் சுத்தமான குடிநீர் (ஆர்.ஓ வாட்டர்) வழங்க திருக்கோயில் வளாகத்தில் மேற்குப்புற நுழைவாயில் அருகே 600 லிட்டர் உள்ள மின் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் அதன் மூலம் திருக்கோயில் முன்பகுதி சுற்றுச் சுவரில் நுழைவுவாயில்களுக்கு அருகே 2 முனைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயிலுக்குக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இடத்தில் ஆண்களுக்கு 7 கழிவறைகள், பெண்களுக்கு 7 கழிவறைகள் என கழிவறைகள் உள்ளன.
இத்திருக்கோயிலானது மலைக்கோயிலாகும். பக்தர்கள் எளிதில் செல்ல ஏதுவாக 1320திருப்படிகள் கொண்ட படிவழிபாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை வசதியும் உள்ளது. பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல திருக்கோயில் மூலம் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நபர் ஒன்றுக்கு கீழிருந்து மேலே செல்ல ரூ.10/-ம், மேலிருந்து கீழே செல்ல ரூ.10/-ம் பேருந்து கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
மலைக்கோயிலில் சுமார் 11 அடி உயரத்தில் வேங்கை மரத்தேர் ஒன்று உள்ளது. தினசரி இரவு 7.00 மணிக்கும் செவ்வாய்கிழமை நாட்களில் இரவு 7.30 மணிக்கும் உட்பிரகாரத்தில் ஒருமுறை உலா நடத்தப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.1000/- வசூல் செய்யப்பட்டு வருகிறது.





