அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
விஜயநகரம்
Praised By
காமீக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
அரசமரம்
அருள்மிகு ஸ்ரீ ஆதிகாமாட்சி சன்னதியின் முன் மண்டபத்தில் அம்பிகையின் உருவத்துடன் சக்தி லிங்கம் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கிறார். திருமண வயதுடைய பெண்கள் இங்கு வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலம் நேரத்தில் சக்தி லிங்கம் மற்றும் அன்னை ஆதிகாமாட்சிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிப்பட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். சக்தி லிங்கத்திற்கு நிவேதனமாக இனிப்பு பிரசாதம் படைத்து பிராத்தனை செய்து வழிபட்டு வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்கு வழிபாட்டுக்குரிய வகையில் இச்சக்திலிங்கம் பெருமை பெற்று விளங்குகிறது.
இத்திருக்கோயிலில் ஸ்ரீஆதிகாமாட்சி தனிசன்னதியில் வடக்குநோக்கி அருள்பாலிக்கிறாள் இச்சன்னதியில் உள்ள ஆதிகாமாட்சிஃப்ற்சிலை பல்லவர் காலத்தை சார்ந்தது சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இச்சன்னதியின் சிறப்பு ஆதிகாமாட்சி வழிபடுவதினால் திருமணயோகம் (ம) குழந்தைபாக்கியம் கைக்கூடும் எண்பது ஐதீகம்
இத்திருக்கோயிலில் பைரவர் சன்னதி மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மாதம்தோறும் வளர்பிறை (ம) தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவர் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் பூஜைகள் நடைபெற்றுவருகிறது
இத்திருக்கோயிலில் மகிஷாசுரமர்த்தினி வடக்கு நோக்கி தனிசந்நதியில் அருள்பாலிக்கிறாள்.இச்சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலம் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிரிகள் தொல்லைகள் நீங்கி வாழ்க்கையில் சலக சௌபாக்யம் அடைவர் என்பதும் ஐதீகம்.
இத்திருக்கோயிலில் அன்னபூரணி அம்பாளுக்கு பிரதோஷம், கார்த்திகை தீபம், நவராத்திரி,சிவராத்திரி,அன்னாபிஷேகம், சித்ராபவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இத்திருக்கேயிலின் நவராத்திரி மண்டபத்தில் மடாலீஸ்வரர் அருள்பாலித்துவருகிறார் மாதாந்தோறும் பிரதோஷ நாட்களில் ஈஸ்வரருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றுவருகிறது சிவராத்திரி அன்னாபிஷேகம் நாட்களில் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது
கண்ணப்பரின் இறைபக்தியை வெளிப்படுத்தும் சிற்பம் கருங்கல் தூணில் வடிக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் வேறெங்கும் வடித்திறாத சக்தி லிங்கம் திருக்கோயிலின் வாயிலில் நுழைந்ததும் எதிரிலே,பலரும் கண்ணுறும் வண்ணம் உள்ளது.வழிபாட்டுக்குரிய வகையில் இச்சக்திலிங்கம் பெருமை பெற்று விளங்குகிறது.
ஆதிகாமாட்சியின் அழகிய சிற்பம் தூணில் வடிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனை -ரூ.5.00
திருக்கோயிலில் திருப்பணி நடைப்பெற்று வருவதால் திருப்பணி நன்கொடை வரவேற்கப்படுகிறது. வங்கி கணக்கு விவரம் பெயர்-ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கணக்கு எண்-110112777366 வங்கி-கனரா வங்கி வங்கி கிளை-பெரிய காஞ்சிபுரம் ஐ எஃப் எஸ் சி கோடு-சி என் ஆர் பி 0002916
பக்தர்களிடம் இருந்து நன்கொடை வரவேற்கப்படுகிறது. வங்கி கணக்கு விவரம் பெயர்-அ மி ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் கணக்கு எண்-2916101009343 வங்கி-கனரா வங்கி வங்கி கிளை-பெரிய காஞ்சிபுரம் ஐ எஃப் எஸ் சி கோடு-சி என் ஆர் பி 0002916
இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தண்ணீர் அருந்த நுழைவு வாயில் அருகில் திருக்கோயில் அலுவலகம் எதிரில் உள்ளது





