Home/Temples/TN/Karur/Arulmigu Pidari Sathayiamman Temple, Nagavaram, Nangavaram - 639110
Heritage Templehrce

Arulmigu Pidari Sathayiamman Temple, Nagavaram, Nangavaram - 639110

அருள்மிகு பிடாரிசாத்தாயி அம்மன் திருக்கோயில், நங்கவரம், Nangavaram

Karur, TN சாத்தாயி அம்மன்
Arulmigu Pidari Sathayiamman Temple, Nagavaram, Nangavaram - 639110 — image 1
1 / 7
Also known as:நங்கவரம் சாத்தாயி அம்மன் கோயில்

History & Architecture

Century

18th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

இல்லை

Praised By

இல்லை

Sanctum Shape

சதுர வடிவம்

Sacred Tree (Sthalavriksha)

ஆலமரம்

Pooja Timings

காலசந்தி பூஜை (பொது)09:00 AM to 10:00 AM IST

Temple Speciality

பிரார்த்தனை

அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில், கருவறையில் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். வலது புறம் சாஸ்தாவும் இடது புறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அனைத்துமே சாத்தாயி அம்மன் தான். அன்னைக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கரங்களில் தாங்கி, பீடத்தில் அமர்ந்த நிலையில் இன்முகத்துடன் அன்னை காட்சிதருகிறாள். அன்னை தன் கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். ஆம் அன்னையின் விக்கிரகம் தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. பொதுவாக இந்த ஊரில் தேள் யாரையும் கடிப்பதில்லை என்றும், கண்ணில் படும் தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். தேள் கடித்தால் அன்னையின் குங்குமத்தையும், விபூதியையும் பூசினால் தேளின் விஷம் விரைவாக இறங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அன்னையின் இடது புறம் மலையாள கருப்புசாமியின் சன்னிதி உள்ளது. ஆதியில் பூமியில் கிடைத்த கருப்புசாமியின் விக்கிரகம் சேதமடைந்ததால், புதியதாக சுதையில் உருவான கருப்புசாமி சிலை தற்போது மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆதி கருப்புசாமியின் சிலை, அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. நிறைய மக்களுக்கு குலதெய்வமாக பிடாரி சாத்தாயி அம்மனும் மலையாளசுவாமியும் விளங்கி வருகிறார்கள்.

Sub Shrines

மலையாளசுவாமி சன்னதி

ஆடி வெள்ளத்தில் கேரளாவில் இருந்து அடித்து வரப்பட்டு, இந்த களத்து மேட்டில் ஒதுங்கியிருக்கிற சாத்தாயி அம்மனுடன் மலையாள சுவாமி இவர்களுடன் வந்துள்ளார். இத்திருக்கோயிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி நின்ற கோளத்தில் அருள்பாளிக்கிறார். நிறைய மக்களுக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறார்.

Temple Tank

திருக்குளம்

அருள்மிகு சாத்தாயி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்திலிருந்து அபிஷேகத்திற்கு மட்டும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Facilities

தங்குமிட வசதி

அருள்மிகு சாத்தாயி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சுமார் 50 நபர்கள் அமரும் வகையில் ஒரு மண்டபம் உள்ளது.

குளியல் அறை வசதி

வடமேற்கு மூலையில் 4 குளியல் அறைகள் பக்தர்களின் வசதிக்காக உள்ளது.

கழிவறை வசதி

வடமேற்கு மூலையில் 4 கழிப்பிட அறைகள் பக்தர்களின் வசதிக்காக உள்ளது.

More Temples Nearby

View all →