
Century
12th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பிற்கால சோழர்கள்
Praised By
இல்லை
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
வட்டம் வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வில்வம்
நங்கவரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை கட்டிய பராந்தக சோழனுக்கு பிறந்த பெண்குழந்தையின் முகமானது நரியின் முகம் போன்று இருந்ததால் வருந்தி வணங்கி வரும் நேரத்தில் பராந்தக சோழனின் குருவின் அறிவுரையின்படி, காசியில் உள்ள சுந்தரேஸ்வரர் லிங்கத்தை அகண்டேஸ்வரர் ரிஷி தியானத்தில் இருக்கும் நேரத்தில் எடுத்து வந்து நங்கவரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை அறிந்து அகண்டேஷ்வரர் நங்கவரம் வந்தபோது அர்த்தஜாம பூஜை முடிவுற்று நடை சாற்றப்பட்டதால் இத்திருக்கோயில் வடபுறதிலுள்ள மதில்சுவர் மீது ஏறி குதித்ததில் அவரது கால்கள் அபிஷேகம் குளத்தில் பதிந்துவிட்டது. சுந்தரேஷ்வரர் அகண்டேஷ்வரருக்கு காட்சி கொடுத்து தனி சன்னதி அமைத்து கொடுத்து பக்தர்களுக்கு அருள் வழங்குமாறு ஆசி வழங்கினார். அகண்டேஷ்வரர் எப்பொழுதுமே தியான நிலையில் இருப்பதால் இவருக்கு தீண்டாத்திருமேனி என்ற பெயரும் உண்டு. மேலும் இன்றளவும் அகண்டேஸ்வரர் மீது தொடாமலேயே தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நங்கவரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை கட்டிய பராந்தக சோழனுக்கு பிறந்த பெண்குழந்தையின் முகமானது நரியின் முகம் போன்று இருந்ததால் வருந்தி வணங்கி வரும் நேரத்தில் பராந்தக சோழனின் குருவின் அறிவுரையின்படி, காசியில் உள்ள சுந்தரேஸ்வரர் லிங்கத்தை அகண்டேஸ்வரர் ரிஷி தியானத்தில் இருக்கும் நேரத்தில் எடுத்து வந்து நங்கவரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை அறிந்து அகண்டேஷ்வரர் நங்கவரம் வந்தபோது அர்த்தஜாம பூஜை முடிவுற்று நடை சாற்றப்பட்டதால் இத்திருக்கோயில் வடபுறதிலுள்ள மதில்சுவர் மீது ஏறி குதித்ததில் அவரது கால்கள் அபிஷேகம் குளத்தில் பதிந்துவிட்டது. சுந்தரேஷ்வரர் அகண்டேஷ்வரருக்கு காட்சி கொடுத்து தனி சன்னதி அமைத்து கொடுத்து பக்தர்களுக்கு அருள் வழங்குமாறு ஆசி வழங்கினார். அகண்டேஷ்வரர் எப்பொழுதுமே தியான நிலையில் இருப்பதால் இவருக்கு தீண்டாத்திருமேனி என்ற பெயரும் உண்டு. மேலும் இன்றளவும் அகண்டேஸ்வரர் மீது தொடாமலேயே தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலில் கோமளாம்பிகை அம்பாள் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் வளையல் சாற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க இத்திருக்கோயில் 5 வாரம் முதல் 7 வாரம் வரை வழிபட்டு வந்தால் தடை நீங்கி திருமணம் நடைபெறுவதாக நம்பப்படுகிறது.
இத்திருக்கோயிலில் எதிரே அமைந்துள்ள இக்குளமானது விசேஷ நாட்களில் முக்கிய திருவிழா நாட்களில் தீர்த்தவாரி நடத்துவதற்கும், அபிஷேக காலங்களில் தீர்த்தம் எடுப்பதற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு தண்ணீர் தொட்டி திருக்கோயில் முன்புறம் வைக்கப்பட்டுள்ளது.





