அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாய்மூர்

Century
6th நூற்றாண்டு
Praised By
சைவ நாயன்மார்கள்
Poet Saint
அப்பர் (திருநாவுக்கரசு)
Sanctum Shape
தூங்கானை வடிவம்
Vimanam Type
இதர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
பலா மரம்
இந்த திருக்கோயில் ரிஷபகுரு ஸ்தலம் ஆகும். வாழ்வில் பல பிரச்சனைகள் கொண்ட நபர்கள் ஒவ்வொரு வியாழ கிழமை அன்று ரிஷப குரு தெட்சிணாமூர்த்தி கு விளக்கு ஏற்றி வழிபட அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
இத்திருக்கோயில் காசியை அடுத்து அஷ்ட பைரவர்களை கொண்ட ஸ்தலம் ஆகும். ஒவ்வொரு மாதம் தேய்பிறை அஷ்டமி நாள் அன்று பைரவருக்கு சிறப்பு யாகம் பூஜைகள் நடைபெறும் . மேலும் கார்த்திகை மாதம் பைரவர் பிறந்த மதம் என்பதால் அந்த மாதத்தில் வரக்கூடிய ஜென்ம அஷ்டமியில் கலந்துகொண்டு தரிசனம் பெறுபவருக்கு எல்லா பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் எல்லா செல்வமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். இத்திருக்கோயில் நான்கு பைரவர் ரூபமாகவும். நான்கு பைரவர் அரூபமாகவும் கட்சி அளிக்கிறார்கள். அவை முறையே.1. சத்ரு சம்ஹார பைரவர் 2. அதிசங்க பைரவர் 3. ரு ரு பைரவர் 4. சண்ட பைரவர் 5. உன்மத்த பைரவர் 6.கபால பைரவர் 7.பீஷ்ண பைரவர் 8.குரோதன பைரவர் ஆகும் .
திருஞானசம்மந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப்பெற்றுள்ளது.
தல விருட்சம் அமைவிடம் - இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் பின்பகுதியில் ஸ்தல விருட்சம் பலா மரம் அமையப்பபெற்றுள்ளது. ஸ்தலம் வகை விளக்கம் அஷ்ட பைரவ திருத்தலங்களில் ஒன்று மற்றும் சப்த விடங்கர் ஸ்தலங்களுல் ஒன்று ஆகும்.
இத்திருக்கோயில் மூலவர் வாய்மூர் நாதர்க இருக்கும் சிவ லிங்கத்தை காணும் போது உளியால் செதுக்கப்பட்டு உருவாக்கப்படாமல் தானாக உருவான சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறது.
திருக்குளம் திருக்கோயிலின் வெளிப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. பொதுமக்கள் இதை சூரிய தீர்த்தம் என்று அழைப்பார்கள்
ரிஷப வாகனம்
குதிரை வாகனம்
கைலாச வாகனம்
மோஷிக வாகனம்
ஸ்ரீ ஞானசம்மந்தர் சிற்பம் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட சிலை ஆகும்
ஸ்ரீ சங்கிலி நாச்சியார் சிற்பம் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட சிலை ஆகும்
இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டதலுக்கு உகந்தார் போல திருக்கோயில் அலுவலகத்தில் நன்கொடை செலுத்தி அதற்கு உண்டான கணினி வழி இரசீது பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இத்திருக்கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு திருப்பணி நடைபெற்று , தற்போது மிண்டும் திருப்பணி செய்வதற்கு இனங்க மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு திருப்பணி அங்கீகார குழு மூலம் அனுமதி பெறப்பட்டு, முறையான அனுமதிகள் பெறப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
திருக்கோயில் நுழைவுப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு அருகாமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சக்கர நாற்காலி வசதி உள்ளது
பக்தர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி திருக்கோயில் அலுவலகத்திற்கு அருகாமையில் மடப்பள்ளி வாசலில் அமைந்துள்ளது
திருக்கோயிலுக்கு வாசல் பகுதில் வலபுறம் ஆண், பெண் இருபாலருக்கும் கழிவறை வசதி தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. .





