
Century
20th - 21th நூற்றாண்டு
சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் . அம்மாப்பேட்டை, மாரியம்மன் செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன் சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன் சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன் குகை, மாரியம்மன் அன்னதானப்பட்டி, மாரியம்மன் பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம். சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது. இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 150 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை செலுத்த விரும்புவோர் குறைந்தது ரூ.100/- முதல் செலுத்தலாம். நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.3750/- என்ற வீதம் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம்.
இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது திருப்பணி நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாநகர்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இத்திருக்கோயிலில் தங்கத்தேர் உள்ளது
திருக்கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் வசதி உள்ளது
திருக்கோயிலின் அன்னதான கூடத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.
இத்திருக்கோயிலின் திருமண மண்டபத்தில் சேலம் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் வாடகை செலுத்தி இயங்கி வருகின்றன.
திருக்கோயில் அலுவலகத்தில் பக்தர்கள் துலாபாரம் செலுத்தும் வசதிகள் உள்ளது
ஆண்களுக்கு 4 குளியலறையும், பெண்களுக்கு தனியாக 4 குளியலறைகள் உள்ளது.
இத்திருக்கோயிலில் இலவச காலணிகள் பாதுகாக்கும் இடம் உள்ளது.
திருக்கோயிலுக்கு செல்ல மாற்றுத்திறனாளிகான நாற்காலி வசதி உள்ளது.





