Home/Temples/TN/Thiruchirappalli/Arulmigu Analadeeswerer Temple, Thottiyam - 621215
Heritage Templehrce

Arulmigu Analadeeswerer Temple, Thottiyam - 621215

அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோயில், தொட்டியம்

🕉️ அனலாடீஸ்வரர் Thiruchirappalli, TN
Arulmigu Analadeeswerer Temple, Thottiyam - 621215 — image 1
1 / 5
Also known as:அனலாடீஸ்வரர்

History & Architecture

Century

தெரியவில்லை

Agama Tradition

காரண ஆகமம்

Sanctum Shape

செவ்வக வடிவம்

Vimanam Type

3 நிலை சுகந்த விமானம்

Sacred Tree (Sthalavriksha)

வில்வமரம்

Pooja Timings

காலசந்தி பூஜை08:30 AM to 09:00 AM IST
உச்சிக்கால பூஜை11:45 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை05:30 PM to 06:00 PM IST
அர்த்தஜாம பூஜை07:45 PM to 08:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

இத்திருக்கோயில் அக்னீஸ்வரர் என வழங்கும் முனிவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் திரிபுரம் சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்த ஊர் அருகில் வந்தபோது பிரமன், நான்முகன் செய்த யாக குண்டமான -அக்னிகுண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தினால் அனலாடீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளது. அந்த யாககுண்டமே தற்போது அம்பாள் முன் ஈஸ்வர தீர்த்தமாக உள்ளது. துஷ்டர்களை சத்துருக்கள் நிவர்த்தி ஆகும் பொருட்டு இந்த ஊர் துஷ்டபுரியம் தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வர தீர்த்தத்தின் நன்மைகள் இத்திருக்கோயிலில் அருள்மிகு அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தீபாராதனை செய்து ஈஸ்வர தீர்த்த பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஈஸ்வரதீர்த்தம் பெறுவதால் திருமணத்தடை, குழந்தையின்மை, கடன்தொல்லை, உடல்நலக்கோளாறுகள் நீங்கி வாழ்வில் கல்விச்செல்வம் மற்றும் வாழ்வில் நன்மை நடைபெறும். ஆகையால் பக்தர்கள் இந்த ஈஸ்வர தீர்த்தம் பெற்று அருள்மிகு அனலாடீஸ்வரர் உடனுறை திரிபுரசுந்தரி அம்பாள் சுவாமியின் அருளை பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றோம். , . . .

பிரார்த்தனை

இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் சுப்பிரமணியரை கிருத்திகை நாளன்று நடைபெறும் அபிஷேகத்தில் தேன் வழங்கி அந்த அபிஷேக தேனை பருகி வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை, மேலும் திருமணத்தைட நீங்கும்.

பிரார்த்தனை

இத்திருக்கோயிலில் சுமார் ஐந்து அடி உயரத்தில் தெற்கு நோக்கி பைரவர் சுவாமி அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று மாலை சிறப்பு பூஜை நடைபெறும்

பிரார்த்தனை

இத்திருக்கோயிலில் நவக்கிரகம் சன்னதியில் அனைத்து சுவாமிகளும் சூரியனை பார்த்து அமைந்துள்ளது. சனி பகவான் மேற்கு பார்த்து அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்

Sub Shrines

கொடிமர விநாயகர்

கொடிமர விநாயகர்

கொடிமர விநாயகர்

கொடிமர விநாயகர்

மூல விநாயகர்

கன்னிமுல கணபதி சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தி நாளன்று சிறப்பாக அபிஷேக ஆராதனை நடைபெறும்.

தண்டாயுதபாணி

தண்டயுதபாணி சன்னதிக்கு தனியாக விமானம் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிசிறப்பாகும்.

திரிபுரசுந்தரி

முனிவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் திரிபுரம் சம்ஹாரம் செய்யும் பொருட்டு இந்த ஊர் அருகில் வந்தபோது பிரமன், நான்முகன் செய்த யாக குண்டமான அக்னிகுண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தினால் அனலாடீஸ்வரர் என பெயர் பெற்றுள்ளது. அந்த யாககுண்டமே தற்போது அம்பாள் திரிபுரசுந்தரி முன் ஈஸ்வர தீர்த்தமாக உள்ளது

சுப்பிரமணியர்

இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி அருள் பாலிக்கின்றார்.ஆறுமுகம் கொண்டு விளங்குகின்றார்.சுப்பிரமணியர் மயில்வாகனத்தில் அமர்ந்தகோளத்தில் தந்தையான சிவபெருமான் சன்னதி நேர் மேல்புறம் அமைந்து அருள்பாலிக்கின்றார்.

பஞ்சாபிகேஷ்வர பர்வதவர்த்தினி

பஞ்சாபிகேஷ்வரர் சுவாமி பர்வதவர்த்தினி சுவாமியுடன் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் இந்த சன்னதிக்கு தனிவிமானம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

நந்தி

நந்தி பகவானுக்கு தனி விமானம் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பாகும். பிரதோஷம் நாளன்று சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெறும்.

Facilities

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

நுழைவாயில் அருகில் ஒரு மணி நேரத்திற்கு 60 லிட்டர் தயாரிக்க்கப்படும் வகையில் இயந்திரம் அமைக்கபட்டுள்ளது.

More Temples Nearby

View all →