அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோயில், தொட்டியம்

Century
13th நூற்றாண்டு
Sanctum Shape
செவ்வக வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
வன்னி மரம்
ஓவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். சுமார் ஒருவார காலம் நடைபெறும் இத்திருவிழாவில் பங்குனி மாதம் 3வது செவ்வாய்கிழமை நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பானதாகும். இத்திருவிழாவில் மூங்கில் வாரைகள்தண்டுகள் மேல் கட்டப்பட்ட இரண்டு தேர்களில் 1.பெரிய தேரில் ஓலைபிடாரி அம்மனும் 2.சின்ன தேரில் அருள்மிகு மதுரைகாளி அம்பாள் புறப்பாடு சுமார் ஒருவாரகாலம் நடைபெறும். இந்த இரண்டு தேர்களை தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் தங்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட சம்பிரதாயங்களின்படி இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.
இத்திருக்கோயிலில் தினசரி 50 நபர்களுக்கு கடந்த 2006 ஆண்டு முதல் வழங்கப்பட்டடு வரப்படுகிறது. அன்னதான மண்டபம் இத்திருக்கோயிலில் தனியே அமைந்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 லிட்டர் கொள்ளளவு கொண்டசுத்திரிகரிக்கப்பட் குடிநீர் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது




