
Century
19th நூற்றாண்டு
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
Sacred Tree (Sthalavriksha)
அரசம், வில்வம், வன்னி
விநாயகப் பெருமான் தாய், தந்தையருடன் மக்களுடன் கூடிய அந்த சிவனடியார் முன் பிரசன்னமாகி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் ஒளி வெள்ளமாய் காட்சி தந்து சங்கடங்களை தீர்க்கவே யாம் எழுந்தருளினோம். இனி ஒருபோதும் சங்கடங்கள் வராது சந்தோஷங்கள் பெருகவே அருளினோம். இவ்வாறு அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதருடன் விநாயகப் பெருமான் பிரசன்னமாகிய இடமே இத்திருத்தலமாகும். பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து இங்குள்ள சுவாமிகளை வணங்கி செல்வதால் தாங்கள் நினைத்த காரியங்களான சுபநிகழ்ச்சிகள், திருமணம், வீடு கட்டுதல், உடல் ஆரோக்கியம், துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பமுடன் வருகின்றனர்.
பிரதோசம் சிவராத்திரி மற்றும் ஐப்பசி மாதம் அன்னாபிசேகம் சிறப்பாக நடைபெறும்.
சிவகாமிஅம்மன் சமேத சிதம்பரேஸ்வரராகஅருள்பாலிக்கிறார். திருவாதிரை சிறப்பாக நடைபெறும்.
அஷ்டமி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.
அருள்மிகு வள்ளி தெய்வாணை சமேத அருள்மிகு சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். கிருத்திகை வளர்பிறை சஷ்டி கந்தசஷ்டி சூரசம்காரம் விசேசங்கள் சிறப்பாக நடைபெறும்.
பௌர்ணமி சித்ரா பௌர்ணமி சிறப்பாக நடைபெறும்.
பிரசன்னவிநாயகர்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் சன்னதி
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட, சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட, சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
திருக்கோயில் மூலவர் சன்னதி, உபசன்னதிகள் மற்றும் திருக்கோயில் வளாகத்தில் திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
குளியலறை இரண்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.
கழிவறை இரண்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு உள்ளது.




