Home/Temples/TN/Tiruvallur/Arulmigu Vadaranyeeswarar Temple, Tiruvalangadu - 631210
Heritage Templehrce

Arulmigu Vadaranyeeswarar Temple, Tiruvalangadu - 631210

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு

🕉️ வடாரண்யேஸ்வர சுவாமி Tiruvallur, TN
Arulmigu Vadaranyeeswarar Temple, Tiruvalangadu - 631210 — image 1
1 / 8
Also known as:இரத்தின சபைநடராஜர் கோயில்மாந்தீஸ்வரர் கோயில்

History & Architecture

Century

9th நூற்றாண்டு

Dynasty / Ruling Period

சோழன்

Praised By

சைவ நாயன்மார்கள்

Poet Saint

காரைக்கால் அம்மையார்

Sanctum Shape

சதுர வடிவம்

Vimanam Type

ஏக தள விமானம்

Sacred Tree (Sthalavriksha)

ஆலமரம்

Pooja Timings

விஸ்வரூப பூஜை06:15 AM to 06:30 AM IST
திருப்பள்ளி எழுச்சி06:15 AM to 06:30 AM IST
காலசந்தி பூஜை07:30 AM to 08:30 AM IST
உச்சிக்கால பூஜை (பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும் நாட்களில் உச்சிகால பூஜை காலை 1.30 மணிக்கு நடைபெறும்)11:00 AM to 12:00 PM IST
மந்திஸ்வரர் பரிகார பூஜை (சனிக்கிழமை மட்டும் மாந்திஸ்வர சுவாமிக்கு பரிகார பூஜை நடைபெறும்.)12:30 PM to 01:30 PM IST
சாயரட்சை பூஜை04:30 PM to 05:30 PM IST
அர்த்தஜாம பூஜை07:40 PM to 07:50 PM IST
பள்ளியறை பூஜை07:50 PM to 08:00 PM IST

Temple Speciality

வரலாற்று சிறப்பு

1.மூவராலும் பாடல்பெற்ற தலம் 2.காரைக்கால் அம்மையார் பங்குனி ஸ்வாதி நட்சத்திரத்தில் இரத்தினசபையுள் இரகசிய அறை ஐக்கியமான தலம். 3.நடராஜப் பெருமான் ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய சபை 4.பத்ரகாளி சும்பன், நிசும்பன் என்ற இரண்டு அரக்கர்களை அழித்த தலம் 5.முஞ்சிகேச முனிவர், காற்கோடக முனிவர் அருள்பெற்ற தலம். 6.சனிபகவானின் மைந்தரான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர் பிரகாரத்தில் எழுந்தருளி மாந்தி, சனி தோஷங்களை நீக்கி நல்லருள் புரிந்து வருகிறார். 7.மூலவர் ஆலமரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 8.முருகப் பெருமான், திருமகள், அம்பிகை, திருமூலர் நேரில் தரிசித்த தலம்.

Sub Shrines

வடாரண்யேஸ்வர சுவாமி

வடாரண்யேஸ்வர சுவாமி

Temple Tank

சென்றாடு தீர்த்த குளம்

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவங்கள் திருக்குளத்தில் நடைபெறுகிறது. இத்திருக்குளமானது 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய திருக்குளமாக உள்ளது. இத்திருக்குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இத்திருக்குள தீர்த்தம் முக்தி தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.

Wall Paintings

ரிஷபாரூடணர்

ரிஷப வாகனத்தின் மேல் சிவபெருமான் அம்பிகை அமர்ந்த கோலத்தில் உள்ளார்கள். இச்சுவரோவியங்கள் மூலவர் நுழைவு வாயிலுக்கு மேல் சுவற்றில் உள்ளது. இது நாயக்கர் காலத்தை சார்ந்த ஓவியங்களாக கருதப்படுகிறது.

Sculptures

தூண் சிற்பம்

யானை, யாளி, குதிரை, மனிதர்கள் மற்றும் தெய்வ சிற்பங்கள் போன்ற சிற்பங்கள் பார்பவர்கள் வியக்கும் வண்ணம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

Services

அன்னதானம்

தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் அன்னதான காணிக்கை ரூ. 3,500/-, நிரந்தர முதலீடு ரூ. 35,000/- அன்னதானம் பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர் பெயர்- திரு. ந. தணிகாசலம், கைபேசி எண்.9894057457

Facilities

குளியல் அறை வசதி

பக்தர்களின் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு, குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது

தகவல் மையம்

கோவில் நுழைவு வாயில் நூறு கால் மண்டபத்தில் மணியம் அலுவலகம் உள்ளது. பக்தர்கள் தேவையான தகவல்களை அலுவலகத்தில் கேட்டு அறிந்துகொள்ளலாம்.

குடிநீர் வசதி (ஆர்.ஓ)

பக்தர்களின் தாகம் தணிப்பதற்கு சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

More Temples Nearby

View all →