அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர்

Century
14th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
பல்லவர்
Praised By
இல்லை
Agama Tradition
காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுர விமானம்
திருக்கோயிலின் தென் கிழக்கு மூலையில் அருள்மிகு சனீஸ்வர பகவான் அஷ்டகோள்களின் கூட்டின்றி தனியே தெற்கு நோக்கி நின்ற்வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஒருமுறை இலங்கேஸ்வரனான ராவணன் தேவர் மூவரோடு நவக்கிரகங்களையும் கைது செய்து சிறையில் அடைந்தார். அச்சமயம் பிரம்மபுத்திரராகிய நாரதர் இலங்கை சென்று சனீஸ்வரனை சந்தித்தார். அவர் இன்னும் சிலதினங்களில் கிஷ்கிந்தாபுரி அரசன் வாலி இவ்விடம் வருவான் அவனால் நீ மீட்கப்படுவாய் அதன் பின்னர் நீ உனது முழுப்பார்வையை இலங்காவுரி மீது செலுத்து அப்போது இலங்கை நகரமே அழியும் எனக் கூறிச் சென்றார். அவ்வாறே இலங்கை நகருக்கு வாலி வரும்போது தன்னை மீட்டுச் செல்லும்படி சனி பகவான் வேண்ட வாலியும் அவரை மீட்டு தட்சிணப்பினாக்கினி என்னும் தென்பெண்ணை ஆற்றின்வடகரையில் கோயில் நகரில் வாலி தீர்த்தக்கரையில் அருள்மிகு வாலீஸ்வர சுவாமி சன்னதியில் அவருக்குச் சொந்தமான வன்னி மரத்தின் அடியில் அஷ்ட கிரகங்களின் தொடர்பு இல்லாமல் ஏகாங்கியாய் தெற்கு முகமாய் இலங்காபுரியை அழிக்க முழுப்பார்வையும் செலுத்தி அவ்விடத்திலேயே தங்க வைத்தான். பின்னர் வாலி திருக்கோயிலின் அருகிலேயே ஒரு தீர்த்தத்தை உற்பத்தி செய்து அதில் நீராடி இறைவனை வணங்கிச் சென்றான். அதனாலேயே இத்தலத்து இறைவன் வாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கிய சன்னதியில் தெற்கு நோக்கிய அம்மாள் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இத்திருக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வாலி தீர்த்தத்தில் நீராடி சனி பகவானின் அருள் வேண்டி செல்வார்கள். எனவே இத்திருக்கோயில் வடதிருநாள்ளாறு என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனி பெயர்ச்சி விழா நடைபெறும் . இவ்வாண்டு வருகிற 26/12/2020 அன்று சனி பெயர்ச்சி விழா நடைபெறும்
ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழ சிறப்பாக நடைபெறும்
சுப்ரமணியர் சன்னதி திருக்கோவில் கருவறை பின்புறம் அமைந்துள்ளது
திருக்கோவிலில் திருமணம் நடைபெறும்





