அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

Century
6th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Praised By
சைவ நால்வர்
Poet Saint
மாணிக்கவாசகர்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
கல்விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மாமரம்
சிவபெருமான் கயிலையில் வீற்றருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வேளையில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணை திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லி தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார். பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார் அவர் கயிலாயத்தை விட்டு காஞ்சிக்கு வந்தார் கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தை செய்து பூஜித்து வந்தார் அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான் காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலி்ருந்து தோன்றினார் உமையம்மை தவநிலையிலேயே இருந்ததால் தவத்தை கலைக்க எண்ணிய சிவ பெருமான் கொட்டிச்சேதம் என்ற திருநடனத்தை நாடினார் அப்போது அவர் தம் கையில் உடுக்கையும் காலில் தண்டையும் ஒலித்தன. எனினும் பார்வதியோ தவத்தில் ஆழ்ந்திருந்தார் அதை கண்ட சிவ பெருமான் பார்வதியை பயமூட்ட எண்ணி சடையில் உள்ள கங்கையின் நீரை வெள்ளமாக பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் லிங்கம் தண்ணீரில் அடித்து செல்லாதவாறு சிவலிங்கத்தை கைகளால் அணைத்து கொண்டார் அப்போது சிவ பெருமான் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்தார். திருமால் தன் தங்கை காமாட்சியை சிவ பெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தார், 10-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கம்பா நதி திருக்குளத்தில் நடத்திக்காட்டப்படுவது ஐதீகம். இதனால் இத்திருக்கோயிலில் திருமணம் நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்துகொண்டவர்கள் சிவன் காமாட்சியம்மை திருக்கல்யான உற்சவத்தின் போது இத்திருக்கோயிலில் திருமணம் செய்துகொள்வது வழக்கத்தில் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள மாமரத்தின் அடியில் உள்ள சிவன் பார்வதி தேவியை வேண்டி பிரார்த்தனை செய்து குழந்தைபேறு பெற்றவர்கள் இம்மாமரத்தில் தொட்டில் கட்டுவது வழக்கமாக உள்ளது.
இத்திருக்கோயிலில் மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் பெயர்பெற்றது ஆம்பரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று வடமொழி விதிப் படி ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடல் பெற்றவை. காஞ்சிபுரத்தில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தந்தளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், இத்திருக்கோயில் கொடி மரத்தின் முன்பு அமைந்துள்ளது.
முதல் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியின் வடபால் நல்லக்கம்பர், சூரிய மூர்த்தி, நிலாத்துண்டப் பெருமாள் உள்ளனர். நல்லக் கம்பர் உருத்திரரால் பூசிக்கப்பட்டவர். திருமஞ்சனக் கிணற்றுக்கு வடக்குப் பிரகாரச் சுவரில் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டின் காலத்தில் முனையதரையர் கள்ளக்கம்பர் திருமுன்பு எரியும், திருநந்தா விளக்கு ஒன்றுக்குப் பசு முப்பத்திரண்டு, ரிஷபத்துக்கும் ஸ்ரீபண்டாரத்துக்கும் பணம் நூறும் கொடுக்கப்பட்ட செய்தி வரையப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி கலையழகுடன் நின்ற கோலத்திலுள்ளார். நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதியில் இரண்டு திருமால் திருமேனிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. இவற்றுள் ஒன்று சுதையாலானது. அவைகளின் தலையின் மிது நாகத்தின் படம் விரிந்திருக்கும் அமைப்புள்ளது. இப்பெருமாள் சந்நிதி வைணவர்களின் நூற்றியெட்டு திவ்விய தேசங்களுள் ஒன்று. காஞ்சியில் உள்ள பதினான்கு திவ்வி தேசங்களில் இதுவும் ஒன்று. திருப்பாற் கடலில் அமிர்தம் கடைந்தெடுத்த காலத்தில் மஹாவிஷ்ணுவுக்கு ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு இறைவனுடை ஈசான திசையில் தியானஞ் செய்து சிவனுடைய சிரசிலிருக்கும் சந்திரஒளி விஷ்ணுமேல் பட்டு வெப்பம் நீங்கிச் சாந்தி அடைந்ததால் நிலாதுண்டப் பெருமாள் என்னும் பெயர் பெற்றார். பிறைத்துண்டவார் சடையாய், பெருங்காஞ்சி எம்பிஞ்ஞகனே என்று அப்பர் பாடினார். சிவன் சடைல் அணிந்துள்ள பிறைத்துண்டத்தின் தண்ணொளி பட்டுத் திருமாலின் வெப்பம் தீர்ந்ததால் இப்பெருமானை நிலாத் திங்கள் துண்டத்தா என்று திருமங்கையாழ்வார் போற்றினார்.
இந்த அம்பிகைக்குத் தனியாகக் 2ம் பிரகாரத்தில் சன்னதி உள்ளது. இங்குள்ள அம்பிகை உலக ஒடுக்கக்காலத்தும், அழிவு வாராது காக்கும் தெய்வமாதலின் பிரளய கால சக்தி எனப்பெயர் பெற்றாள் என்பவர். இச்சக்தி வழிபட்ட இறைவரை நினைவுகொள்ளும் வகையில் கோயிலில் பிரளய நாத இலிங்கம் உள்திருச்சுற்றின் இடப்புறம் உள்ளது. பிரளய கால சக்தி ஏழு கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு ஒரு கையை இடது தொடைமேல் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் ஆடி பூரம் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் ஆராதனையும் செய்யப்படுகின்றன. நவராத்திரி நாட்களில் பிரளய கால சக்திக்குச் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் செய்யப்படுகின்றன. மேலும் சித்திரை மாதக் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு இளநீர் அபிஷேகம் மிகச் சிறந்த முறையில் வருடாந்திரம் செய்யப்படுகின்றது. காஞ்சியில் வேறு எந்தக் கோயிலிலும் இச்சக்தி இல்லை. உமையம்மை இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கும் போது பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை இந்தச்சக்தி தடுத்துக் காத்தாள் என்பர்.
இராஜகோபுர நுழைவாயிலில் சன்னதி அமைந்துள்ளது
இராஜகோபுர நுழைவாயிலில் சன்னதி அமைந்துள்ளதால், இராஜகோபுர ஆறுமுகர் என்று பெயர்
1000-ம் கால் மண்டபத்தின் நுழைவாயிலில் அருள்மிகு விகட சக்கர விநாயகர் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 3-ம் பிரகாரத்தின் ரிஷிகோபுரம் இடது புறத்தில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சன்னதி அமைந்துள்ளது.
திருக்கோயில் 2-ம் பிரகாரத்தில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி அருகில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 2-ம் பிரகாரத்தில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் மாவடி சன்னதி அருகில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் சன்னதி அமைந்துள்ளது
திருக்கோயில் 4-ம் பிரகாரத்தில் 1000- கால் மண்டபத்தின் உட்புறம் சன்னதி அமைந்துள்ளது.
திருக்கோயில் 2-ம் பிரகாரத்தில் மாவடி சன்னதி அருகில் சன்னதி அமைந்துள்ளது
3-ம் பிரகாரத்தில் சிவகங்கை குளம் எதிரில் சன்னதி அமைந்துள்ளது
மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று வடமொழி விதிப் படி ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று. இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
இந்த கோவிலில் இந்த இடம் ஒரு சுதந்திர வழிபாட்டு தலமாக உள்ளது. இது அப்பரரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இது கொடி கம்பத்தின் ஓரத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தின் முன் 16 தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபம் உள்ளது, அங்குள்ள தூண் ஒன்றில் அவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. சுவரின் பின்புறத்தில் பாதங்கள் மற்றும் தலைகளைத் தேடுவது தொடர்பான தெய்வீக நிகழ்வு செதுக்கப்பட்டுள்ளது, விஷ்ணு வராக (மாபெரும் பன்றி) வடிவில் சிவபெருமானின் பாதங்களைத் தேடிச் சென்றார், மேலும் பிரம்மா தெய்வீக தலையைக் கண்டுபிடிக்க சென்றார். அன்னம் வடிவில். அழகான மற்றும் பயங்கரமான அரக்கன் பாண்டன் தெய்வீக மனிதர்களின் அனைத்து வலிமையையும் ஒருங்கிணைத்து அவர்களை துன்புறுத்துவதன் மூலம் கொடூரமானவன். பிரம்மாவும் விஷ்ணுவும் மற்ற தெய்வீகங்களுடன் கைலாசத்திற்குச் சென்று இந்த அரக்கனைப் பற்றி சிவபெருமானிடம் பிரதிநிதித்துவம் செய்து, தங்களைக் காக்கும்படி வேண்டிக்கொண்டனர். சிவபெருமான் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு, பாண்டன் உட்பட அனைத்தையும் எரித்த நித்திய தேவதாரு வடிவில் பதிலளித்தார், அதைத் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து பாண்டனும் மீட்டெடுக்கப்பட்டார். சிவபெருமான் நெருப்பிலிருந்து தோன்றினார். திருக்கச்சி மயானம் என்று அழைக்கப்படும் அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். காஞ்சி ஏகாம்பரத்தைச் சுற்றியுள்ள நான்கு கோவில்களில் இதுவும் ஒன்று. மற்ற மூன்று வாலிச்சரம், ரிஷபேசம், சத்தியாதீசம். இவையனைத்தும் கோவில் வளாகத்தில் இருப்பதன் மூலம். கோவிலுக்கு அழகு சேர்க்கும்.
இத்திருக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றத் திருக்குளமாகும். காசிவிசுவநாதர், ராமேசுவரர் முதலிய அநேக கோயில்கள் இதன்கரையில் அமைந்துள்ளன. அம்மையின் மன உறுதியை உலகம் அறியும் பொருட்டு இறைவனார் நதிகளை அழைத்தபோது, எல்லாத் தீர்த்தங்களும் திரண்டு, நதியுருவம் பூண்டு காஞ்சிக்குப் பிரவாகங்கொண்டு வந்தன. இப்பெரும் வெள்ளத்திற்கு அஞ்சிய அம்பிகை பெருமானைக் காக்கும் பொருட்டு தாம் அமைத்த மணல் லிங்கத்தை (திருவேகம்பத்துப் பெருமானை) ஆரத்தழுவி, கைளாற் பற்றிக் காத்தார். இதன் காரணமாகவே திருவேகம்பர் தழுவக் குழைந்தவராகி, அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் திருமேனியில் ஏற்றார். அதன்பின்னர் அனைத்துத் தீர்த்தங்களும் இங்கியே தங்கி இறைவனை தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டன. இவ்வழிபாட்டை அனைத்துத் தீர்த்தங்களும் செய்தமையினால் இதுவே சர்வதீர்த்தம் எனப் பெயர் பெற்றது.
சிவகங்கை தீர்த்த குளம் இத்திருக்கோயிலின் 3-ம் பிரகாரத்தில் அழகுற அமைந்துள்ளது. பிரதி வருடம் தை மாதம் வரப்பெறும், ஆயில்யம் நட்சத்திரத்தில் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
இத்திருக்குளம் திருக்கோயிலுக்கு வெளியே தேர்முட்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இக்குளக்கரையில் அருள்மிகு மங்களேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
சிவபெருமான் கயிலையில் வீற்றருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வேளையில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணை திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லி தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார். பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார் அவர் கயிலாயத்தை விட்டு காஞ்சிக்கு வந்தார் கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தை செய்து பூஜித்து வந்தார் அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான் காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலி்ருந்து தோன்றினார் உமையம்மை தவநிலையிலேயே இருந்ததால் தவத்தை கலைக்க எண்ணிய சிவ பெருமான் கொட்டிச்சேதம் என்ற திருநடனத்தை நாடினார் அப்போது அவர் தம் கையில் உடுக்கையும் காலில் தண்டையும் ஒலித்தன. எனினும் பார்வதியோ தவத்தில் ஆழ்ந்திருந்தார் அதை கண்ட சிவ பெருமான் பார்வதியை பயமூட்ட எண்ணி சடையில் உள்ள கங்கையின் நீரை வெள்ளமாக பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் லிங்கம் தண்ணீரில் அடித்து செல்லாதவாறு சிவலிங்கத்தை கைகளால் அணைத்து கொண்டார் அப்போது சிவ பெருமான் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள் பாலித்தார். திருமால் தன் தங்கை காமாட்சியை சிவ பெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்தார், மேற்படி நிகழ்வு இத்திருத்தலத்தில் பங்குனி பிரம்மற்சவ விழாவில் 10-ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கம்பா நதி திருக்குளத்தில் நடத்திக்காட்டப்படுவது ஐதீகம். இத்திருக்குளம் இத்திருக்கோயிலின் 4-ம் பிரகாரத்தில் தெற்கு இராஜகோபுரத்தின் இடப்புறமும் 1000-ம் கால் மண்டபத்தின் முன்புறமும் அமையப்பெற்றுள்ளது
இத்திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள முதல் தூணில் இறைவன் தியான நிலையில் அமர்ந்து இருக்க, அம்பிகை பக்கத்தில் நின்று இறைவனின் வலக்கண்ணைத் தன் இடக்கையால் மூடுகின்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நந்தி முனிவர்களின் உருவங்கள் உள்ளன.
அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது
தினசரி நண்பகல் 12.00 மணியளவில்நடைபெறுகிறது. தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1750/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.35,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ஆன்லைனிலும் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக, இரண்டு எதிர்த்திசை சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கென திருக்கோயிலின் உள்ளே செயல் அலுவலர் அலுவலகம் அருகில் எதிர்த்திசை சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மாற்று திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் உபயோகிப்பதற்கான திருக்கோயில் நிர்வாகம் சார்பில் 3 சக்கர நாற்காலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை திருக்கோயில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டுள்ளன.




